search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assets"

    • ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
    • சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்

    ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.

    இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.

    கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.

    ஹேமந்த் சோரன் முறைகேடாக பெற்றதாக கூறப்படும் 8,86 ஏக்கர் சொத்தின் காப்பாளராக 14 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா என்பவர் தெரிவித்திருக்கிறார்.

    அந்த நிலத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற சோரன் கூறியதை பொய் என நிரூபிக்க சந்தோஷ் முண்டாவின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ளது. மேலும், அந்த நிலத்திற்கு ராஜ்குமார் பஹான் என்ற நபர் உரிமை கோரியதையும் அமலாக்கத்துறை நிராகரித்தது.

    அந்த நிலத்தை ஒதுக்கீடாக பெற்றவர்கள், சில நபர்களுக்கு விற்றதாகவும், அவர்களை சோரன் வெளியேற்றிவிட்டு 2010-11ல் நிலத்தின் கட்டுப்பாட்டை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

    ஹேமந்த் சோரனும் அவரது மனைவி கல்பனாவும், இரண்டு முதல் மூன்று முறை அந்த நிலத்திற்குச் சென்றதாகவும், அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் கூடவே இருந்து வேலை செய்ததாகவும் அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.

    சோரனின் உத்தரவின் பேரில் சொத்துக் காப்பாளர் பொறுப்பு சந்தோஷ் முண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிலாரியாஸ் கச்சாப், அங்கு மின்சார மீட்டர் பொருத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த நிலத்தில் சந்தோஷ் முண்டாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர் என்பதும், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் பஹான் வசம் இல்லை என்பதும் நிரூபணமாகியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் முக்கிய ஆதாரமாக, பிரிட்ஜ் மற்றும் ஸ்மார்ட் டி.வி.யின் பில்களை காட்டியிருக்கிறது. இந்த ரசீதுகளை ராஞ்சியைச் சேர்ந்த இரண்டு டீலர்களிடமிருந்து பெற்று குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளது.

    இந்த 2 ரசீதுகளும் சந்தோஷ் முண்டாவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    குற்றப்பத்திரிகையில் ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ள பிரிட்ஜ், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முண்டாவின் மகன் பெயரிலும், ஸ்மார்ட் டிவி 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முண்டாவின் மகள் பெயரிலும் வாங்கப்பட்டுள்ளது. அந்த பில்லில், வழக்கில் உள்ள நிலத்தின் முகவரி உள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    அரசுத் தரப்பு புகாரை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    • ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
    • சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.

    இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.

    கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.

    அதேநேரம் இந்த சொத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம்.
    • ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது.

    ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக, 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    7000 ஏஜெண்டுகளை கண்டறிந்து, மோசடி செய்யும் நோக்கில் பொதுமக்களை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த 500 ஏஜெண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    500 ஏஜெண்டுகளில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது.

    ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரூ.96 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    ஈரோடு, திருப்பூர், கோவையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தினர் நிதி மோசடியில் ஈடுபட்டதால் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் மற்றும் காங்கேயம் கண்டியன் கோவில் கிராமத்தில் உள்ள அசையா சொத்துக்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று பகல் 12 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்:202) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.

    சோனியா காந்தி தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். #SoniaGandhi #Congress
    ரேபரேலி:

    ரேபரேலி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 29 லட்சம். ரொக்கமாக ரூ.60 லட்சமும், வங்கியில் டெபாசிட்டாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரமும் இருக்கிறது. தன் மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு கடனாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த ஒரு குற்றவியல் வழக்கு, தன் மீது இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியே 28 லட்சமாக இருந்தது. #SoniaGandhi #Congress
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் அதிகரித்ததற்கு கணக்கு சொல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. #Congress #RahulGandhi #LSPolls #BJP
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2004 முதல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.

    அவர் 2004-ல் போட்டியிடும் போது தனது வருமானம் ரூ.56 லட்சம் என்று கூறி இருந்தார். 2009 தேர்தலில் வருமானம் ரூ.2 கோடி என்றும், 2014 தேர்தலில் ரூ.9 கோடி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அதாவது 10 ஆண்டுகளில் அவரது வருமானம் ரூ.8½ கோடி அதிகரித்து உள்ளது.

    இது சம்பந்தமாக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி.ஆக இருப்பதால் அதற்கான சம்பளத்தை பெற்று வருகிறார். இது தவிர அவர் எந்த தொழிலும் செய்யவில்லை. ஆனால் அவரது வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக ஒவ்வொரு தேர்தல் வேட்பு மனுவிலும் குறிப்பிட்டு உள்ளார்.

    அவருக்கு வருமானம் எந்த வகையில் வந்தது. எப்படி இவ்வளவு தொகை அதிகரித்தது என்பதற்கு கணக்கு சொல்ல வேண்டும்.

    ராகுலும், பிரியங்கா காந்தியும் 4.69 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை 6 மாதம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றுக்கு அந்த பண்ணை வீடு சொந்தமானது.

    அந்த நிறுவனம் மீது வழக்கு விசாரணை இருந்து வருகிறது. ராகுல்காந்திக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. குத்தகைக்கு விட்ட பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசில் அந்த நிறுவனம் மீதான விசாரணை தொடரப்படவில்லை.

    2-ஜி செல்போன் தொடர்புடைய யுனிடெக் நிறுவன சொத்தை ராகுல்காந்தி குடும்பத்தினர் வாங்கி உள்ளனர். இதிலும் ஏதோ தவறு நடந்து இருக்கிறது.

    ராகுல்-சோனியாவுக்கு ரூ.100 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #RahulGandhi #LSPolls #BJP
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaAssets
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக பல ஆயிரம் கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    அதேபோல், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். எம்.ஜி.ஆர். சொத்துக்களை பராமரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனை நியமித்தது போல் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்கவும், அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதனிடையே, ஜெயலலிதா பெயரில் ரூ.913 கோடி சொத்துக்கள் உள்ளதால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.



    இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? என கேள்வி எழுப்பியது. அத்துடன், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் ஆகியோர் உள்ளதால் இதுகுறித்து அவர்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

    மேலும், மனுதாரரான புகழேந்தி ஜெயலலிதாவின் எந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கேட்பது அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானத்தை மீறிய வகையிலான சொத்துக்களா? அல்லது, ஜெயலலிதா தனது வேட்பு மனு தாக்கலின்போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களையா? என இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

    இந்த இரண்டு வகையான சொத்து விபரங்களையும் ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மொத்த சொத்து விபரங்களை தெரிந்துகொள்ள முடியாத நிலை நீடிப்பதால் அவரது சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaAssets

    ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு அதிகமான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 8 வருடங்களாக ஆண்டு தோறும் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் சந்திர பாபுநாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது மகனும், ஆந்திர மந்திரியுமான நரா லோகேஷ் விஜயவாடாவில் நிருபர்கள் சந்திப்பில் இதை வெளியிட்டார்.

    சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கு ரூ.81.83 கோடி சொத்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.12.55 கோடி அதிகமாகும், கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.69.28 கோடியாக இருந்தது.

    சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு அதிகமான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.8.30 கோடியாகும். ஆனால் இதில் கடன் ரூ.5.31 கோடியாகும். இதனால் நிகர சொத்தின் மதிப்பு ரூ.2.99 கோடியாகும்.


    ஆனால் அவரது 3 வயது பேரனான நரா தேவனேஷ் பெயரில் ரூ.18.71 கோடி சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சந்திரபாபுநாயுடுவை விட அவரது பேரனுக்கு ரூ.15 கோடி அதிகமாக சொத்து இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவுக்கு கடந்த ஆண்டை விட தற்போது ரூ.46 லட்சம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.2.53 கோடியாக சொத்து மதிப்பு இருந்தது.

    சந்திரபாபுநாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு மொத்தம் ரூ.22.25 கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான நிகர சொத்து மதிப்பு ரூ.31.01 கோடியாகும். கடந்த ஆண்டு புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ.25.41 கோடியாக இருந்தது.

    சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர தகவல் தொழில் நுட்ப மந்திரியுமான லோகேசுக்கு கடந்த ஆண்டு ரூ.15.21 கோடி சொத்து இருந்தது. தற்போது இது ரூ.21.40 கோடியாக அதிகரித்துள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் மருமகளும், லோகேசின் மனைவியுமான பிராமினிக்கு ரூ.7.72 கோடி சொத்து உள்ளது. ஆனால் அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் இருந்து பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.15.01 கோடியாக சொத்து இருந்தது.

    கடந்த ஆண்டு பிராமினியின் கடன் ரூ.36.14 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த கடன் ரூ.5.66 கோடியாக குறைந்துள்ளது. #ChandrababuNaidu
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய், பண மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி. இவரும், இவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர்.

    நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், ஆஜராகவில்லை. இவரை கைது செய்ய, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், துபாயில் நிரவ் மோடி மற்றும் அவரது குழு நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. #NiravModi
    11,400 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடியில் தலைமறைவாக பதுங்கியுள்ள மெஹுல் சோக்சியின் 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்தது. #PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.

    இதைதொடர்ந்து, மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது. முன்னர் லண்டனில் இருந்ததாக நம்பப்பட்ட மெஹுல் சோக்சி அங்கிருந்து தப்பிச்சென்று, கரிபியன் நாடுகளான ஆண்டிகுவா பர்புடாவில் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், கருப்புப்பணப் பதுக்கல் தடுப்பு சட்டத்தின்கீழ் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள மெஹுல் சோக்சியின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அமலாக்கத்துறை நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

    இந்த உத்தரவின் அடிப்படையில் மெஹுல் சோக்சி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
    #PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. #PNBFraud #MehulChoksi #PMLA
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரும், தொழிலதிபருமான மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.



    இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இருவரின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. இதில் மெகுல் சோக்சியின் அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள், நிலம் என ரூ.1,210 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை பி.எம்.எல்.ஏ. ஆணையம் விசாரித்தது.

    இதில் அமலாக்கத்துறை அளித்த சான்றுகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலித்த இந்த ஆணையம், முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளது. எனவே இந்த முடக்க நடவடிக்கை தொடர வேண்டும் என உத்தரவிடுவதாகவும் ஆணையம் அறிவித்தது.

    மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட சொத்துகளில், விழுப்புரத்தில் உள்ள நிலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #PNBFraud #MehulChoksi #PMLA
    கேரளாவில் முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளின் அனைத்து சொத்து விபரங்களையும் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட அம்மாநில கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்த கேபினட் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளின் முழு சொத்து விபரங்களை யாரும் எளிதில் பார்க்கும் வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. 

    மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
    ×