என் மலர்
நீங்கள் தேடியது "Money laundering"
- செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது.
- மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் விஜய் (24). இவரது செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் அந்த குறிப்பிட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அந்த மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் ரூ.5 லட்சத்து 71ஆயிரத்து 280 பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தியுள்ளார்.ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி பணம் மீண்டும் இவரது வங்கி கணக்கில் வராததால் அதிர்ச்சி அடைந்த விஜய் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.5 ½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை.
விருதுநகர்
சிவகாசி சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது62). பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி.
பட்டதாரியான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் உரிமையாளர் முத்து பாண்டியராஜனுக்கு அறிமுகமானவர்.
அதனால் முத்துவிடம் தான் அரசு பொதுத் தேர்வுக்காக தயார் செய்து வருவதாக மகாலெட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியராஜனை சந்தித்த முத்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ரவி என்பவரை தெரியும் என்றும், அவருக்கு தலைமை செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், பலருக்கு ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
இதை நம்பிய பாண்டிய ராஜன் ரவியிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தர முடியும் என்றும் ரூ.5½ லட்சம் செலாகும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 தவணைகளில் ரூ.5 ½லட்சம் ரவிக்கு பாண்டியராஜன் கொடுத்தார். அதன்பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியிடம் விசாரித்த போது விரைவில் ஆர்டர் வரும் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியபடி வணிக வரித்துறையில் பணி கிடைத்திருப்பதாக மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்துள்ளது. மகாலெட்சுமி அது குறித்து விசாரித்த போது அந்த ஆர்டர் போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து ரவி, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகமது அப்துல் மஜீத் (34). இவரது செல்போன் வாட்ஸ்அப்-க்கு கடந்த மாதம் 17-ந் தேதி குறுச்செய்தி வந்தது.
- அதில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து பணம் கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் தர்மநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் மஜீத் (34). இவரது செல்போன் வாட்ஸ்அப்-க்கு கடந்த மாதம் 17-ந் தேதி குறுச்செய்தி வந்தது.
அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் வந்த செல்போன் எண்ணை முகமது அப்துல் மஜீத் தொடர்பு கொண்டு பேசினார்.
அதில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து பணம் கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து முகமது அப்துல் மஜீத் பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் வரை பணம் பட்டியுள்ளார்.
இதனிடையே கட்டிய பணம் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது அப்துல் மஜீத் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து அந்த மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
- மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.
காங்கயம்,
நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.
அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.
எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
- வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த கணவர்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
விருதுநகர்
வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (37). இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தும்பக்குளத்தை சேர்ந்த அழகர்சாமி கூறியுள்ளார். இதனை நம்பி வினோத் குமார் என்பவரின் வங்கி கணக்கில் கண்ணன் பணம் செலுத்தினார். அதன்பின் கண்ணன் கம்போடியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய கண்ணன் பணத்தை திருப்பி தருமாறு அழகர்சாமியிடம் கேட்டார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி அருணா, வினோத்குமார், சாந்தி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி அழகர்சாமி, அவரது மனைவி உள்பட 4 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.
- இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுந்தகுமார். இவரது மனைவி அமுதா வயது 41 இவரது செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.இதை உண்மை என்று நம்பிய அமுதா அந்தக் குறுந்தகவலில் வந்த செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது அதில் பேசிய மர்ம நபர் ரூ.7,32,399 பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினால் கார் உடனடியாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.அதன் பின்னர் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமுதா இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி ராஜமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மகன் பிரசாத் வயது 24 இவரது செல்போனில் வந்த குறுந்தகவலில் அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதைக் கண்ட பிரசாத் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர்கள் பணம் கட்டி சில நிபந்தனைகளை செய்யச் சொல்லி உள்ளனர். இதை உண்மை என்று நம்பிய பிரசாத் அவர்கள் கூறியபடி ரூ.50000 பணத்தைக் கட்டி அவர்கள் கூறிய நிபந்தனைகளை செய்து முடித்து உள்ளார்.அதன் பின்னர் பணம் தனது வங்கிக் கணக்கு திரும்ப வந்துவிடும் என்று அவர்கள் கூறியதை நம்பி காத்திருந்தார். ஆனால் அந்த மர்ம நபர்கள் கூறியபடி பணமும் வரவில்லை வேலையும் வரவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசாத் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர்.
- இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கவர்ச்சி திட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இந்த தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மோகன்ராஜ் -செந்தமிழ்செல்வி இறந்த நிலையில் அவரது மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை கவனித்து வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சவுந்தர்யா - தமிழ்கண்ணன் தம்பதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருச்செங்கோடு கச்சேரி சாலை அருளகம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 79). இவரது மனைவி செல்லம்மை (75).
இந்த தம்பதியின் மகன் அருணாச்சலம்(45), மருமகள் சொர்ணமாலா (38) மற்றும் சோமசுந்தரத்தின் மகள்கள் காந்திமதி (54) , வள்ளியம்மை (50) ஆகிய 6 பேர் வீட்டில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி பணம் பெற்றுள்ளனர்.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதே போல் மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தை கவனித்து வந்த அவர்கள் 6 பேர் மீதும் ேமாசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிக்கலாம்
இந்த 2 நிதி நிறுவனங்களிலும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிடையாக வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகார் அளிக்கலாம்.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அதில் கூறியுள்ளார்.
- முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார்.
- ஏமாற்றமடைந்த ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 41). பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசுத்துறை தொடர்பு பிரிவு செயலாளரான இவர் ஜவுளி வியாபாரமும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதன் மூலம் அவர் ஏராளமான சொத்துக் களை வாங்கி குவித்துள்ளார்.
இந்நிலையில் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவரை சந்தித்தார். இவரும் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார். அவர் மூலம் ஏராளமான நிலங்களை விற்பனை செய்துள்ளார்.
இதற்கிடையே ஈஸ்வரனிடமும் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு போகும் ஒரு இடம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். அதனை வாங்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். அதனை நம்பிய ஈஸ்வரன், சத்தியராஜிடம் இரண்டு தவணைகளாக ரூ.51 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சத்தியராஜ் கூறியபடி நிலம் எதுவும் வாங்கித் தரவில்லை.
நண்பர் என்பதால் சில காலம் பொறுத்திருந்தார். இருந்தபோதிலும் பணத்தையும் திருப்பிச் செலுத்த மறுத்ததோடு ஈஸ்வரனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீசார் சத்தியராஜ் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். நில மோசடியில் பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
- 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
சேலம்:
சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் விஜய் வெங்கடேஷ். இவரது நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
மேலும், பரத்வாஜ் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பன்மடங்காக திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் வெங்கடேஷ், கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
ஆனால் பரத்வாஜ் கூறியபடி எந்த ஒரு தொகையும் கூடுதலாக கிடைக்காததால், தான் கட்டிய பணத்தை விஜய்வெங்கடேஷ் திரும்ப கேட்டபோது தர மறுத்துள்ளார்.
இதையடுத்து விஜய் வெங்கடேஷ் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெங்களூருவை சேர்ந்த பரத்வாஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரகாசம் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 50) இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாய பன்னீர்செல்வம் (44) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1லட்சத்து 25ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
இந்நிலையில் பணம் கொடுத்த சகாய பன்னீர்செல்வம் அத்திப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பிரகாசத்திடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாயபன்னீர் செல்வத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து சகாய பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.