என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money laundering"

    • 2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் மீது குற்றச்ட்டு எழுந்தது.
    • பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கடன் மோசடி வழக்கு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    நவம்பர் 14 ஆம் தேதி அவர் முன்பு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 2025 இல் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

    • அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது
    • அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.

    சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அசோக் குமார் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அசோக் பால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI- (Solar Energy Corporation of India) சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாக ED குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அசோக் பாலுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் திங்கள்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.

    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.

    இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

    விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

    மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.

    • அனில் அம்பானிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.
    • அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.

    ஜூலை 24 ஆம் தேதி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அனில் அம்பானி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தினார்கள். 66 வயதான தொழில் அதிபர். அனில் அம்பானி மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள்.

    • ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனுப்பப்பட்டது.
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மூன்று நாள் சோதனை நடத்தப்பட்டது.

    ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் இந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜூலை 24 ஆம் தேதி, அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 

    • தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார்.
    • இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக உ.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் மீது அந்த அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    குடும்ப அவசர நிலை எனக் கூறி ஆருஷியும் அவரது தாயாரும் தன்னிடம் இருந்து இருந்து பணம் வாங்கி ஏமாற்றியதாக தீப்தி சர்மா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆக்ராவில் உள்ள தனது குடியிருப்பில் புகுந்து தங்கம், வெள்ளி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் ரொக்கத்தை ஆருஷி கோயல் திருடிச் சென்றதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்களை அனுப்பி வாலிபரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 21). இவர் டிப்ளமோ மெரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவரது நண்பர் வாஞ்சிநாதன் கப்பலில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பேஸ்புக்கில் தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து இளங்கோவன், பேஸ்புக்கில் தெரிவித்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசியவர் தனது பெயர் தீபக் மிஸ்ரா என்றும் கப்பலில் என்ஜினீயரிங் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அது தொடர்பான ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளார்.

    கடந்த 7-ந் தேதி இளங்கோவனை வேலைக்கு அனுப்புவதாக தெரிவித்து, தூத்துக்குடி வரும்படியும், அதற்கு முன்பு ரூ.2 லட்சத்தை அனுப்பும் படி கூறியதின் பேரில், ஜி-பே மூலம் இளங்கோவன் பணம் அனுப்பி வைத்தார்.

    இது போன்று வாஞ்சி நாதனின் நண்பர்களான பெரம்பலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் ஆகியோரும் தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பேஸ்புக்கில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த 8-ந் தேதி காலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 3 பேரும் சென்றனர். அங்கிருந்து குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, மீண்டும் மீண்டும் பணம் கேட்டதால், மூவரும் சந்தேகம் அடைந்தனர். மேலும் மோசடி நபர் அனுப்பிய ஆவணங்களை தூத்துக்குடி துறைமுக அதிகாரியிடம் காட்டியுள்ளனர். ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்தனர்.

    அதிர்ச்சியடைந்த இளங்கோவன் இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பண்ருட்டியில் சீட்டு பண மோசடி செய்த ரேசன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • பாக்கியம் என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை யை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த சீட்டு நிறுவனத்தில் ஏராள மான பெண்கள் உள்பட பலர் பணம் கட்டி வந்தனர். இதற்கிடையில் சீட்டு நிறு வனம் நடத்தி வந்த மாரிமுத்து கொரோனாவுக்கு பலியானர். இதனால் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த இவரது மனைவி, மாமனார், ஆகியோரிடம் சீட்டுகட்டியவர்கள் பணம் கேட்டுவந்தனர். இதற்கிடையில் திருவதிகை சக்கரபாணி நகரில் உள்ள மாரிமுத்துவின் மாமனார் பழனியின் வீட்டுக்கு திருவதிகை ஓறையூரான் சந்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி பாக்கியம் (57) என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர். பழனி, பாக்கியத்தை ஆபாசமாக திட்டிகொலைமிரட்டல்விடுத்துள்ளார். இது பற்றி பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரேஷன் கடை ஊழியர் பழனியை கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • ரூ.2 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட பஸ் கண்டக்டர், மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 35). இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    பைக்காரா, முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் இளங்கோவன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் பொன்மேனி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரும், மனைவி கவிதாவும் மாத சீட்டு வசூலித்து வந்தனர். நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் சீட்டு போட்டிருந்தேன். மாத சீட்டு முதிர்வடைந்தது. இளங்கோவன் தரப்பினர் எனக்கு ரூ.1.44 லட்சம் மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை கேட்டேன். அவர்கள் தர மறுத்து விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார்
    • வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் அடகு கடை கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதனை வினோத் நடத்திவருகிறார். கடந்த 10-ந் தேதி இந்த கடைக்கு வந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் வளையல்கள் என பொய் சொல்லி 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார் பின்னர் வினோத் அதனை மாற்றி அருகில் உள்ள வங்கியில் அடகு வைக்க முயன்றபோது அது போலி நகை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அதே பெண்மணி மீண்டும் வேறுஒரு போலி நகையை வைக்க மீண்டும் அதே அடகு கடைக்கு வந்தார். அப்போது அந்த நகையை சோதித்த பார்த்த போது அது போலி நகை என தெரியவந்தது. உடனே உரிமையாளர் வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் இந்த பெண்ணுடன் மேலும் 2பேர் வந்து உள்ளனர். பிடிபட்ட பெண்ணின் பெயர் சத்யா(வயது38)சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததுபின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பெண்ணுடன் வந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ராமநாதபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.60 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
    • இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள டி.இரணியன் வலசை கிராமத்தைச் சேர்ந்த பவித்ரன் (வயது 22) இவர் டிப்ளமோ மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    முகநூல் பக்கத்தில் கோவா துறைமுகத்தில் கப்பலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வ தாகவும், அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தங்களது சுய விவரத்தை அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய பவித்ரன் ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார்.

    பிறகு தனது மின்னஞ்சல் முகவரியில் சென்ற பார்த்தபோது குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக தகவல் வந்தது. இந்த தகவலை நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, பேடிஎம் மூலம் 2 தவணைகளில் ரூ.65 ஆயிரம் அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு பவித்ரனை கோவாவிற்கு வரும்படி அழைத்தனர். அங்கு சென்று மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட போது, மேலும் சில காரணங்களை தெரிவித்து கூடுதலாக பணம் செலுத்தினால்தான் வேலை வழங்க முடியும் என்று கூறினர்.

    சந்தேமடைந்த பவித்ரன் அவர்களது பாஸ்போர்ட், ஆதாரை ஆய்வு செய்த போது அனைத்தும் போலியானது என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாட்ஸ் அப் எண்ணுக்கு கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது.
    • முன்பணமாக ரூ.6 லட்சம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட தேவஸ்தான புதூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48). ரிக் வண்டி மேலாளர்.

    இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது.

    இதனை நம்பிய அவர், சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தனது மகளுக்கு சீட் வாங்கி தருமாறு கேட்டார்.

    அதற்கு எதிர்முணையில் பேசிய நபர் சில ஆவணங்களை வாங்கிக்–கொண்டு சம்மதம் தெரிவித்தார். சில நாட்கள் கழித்து, போனில் பேசிய அந்த நபர், முத்துசாமியிடம், உங்கள் மகள் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

    எனவே முன்பணமாக ரூ.6 லட்சம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். மீண்டும் சில நாட்கள் கழித்து மருத்துவ சீட் கிடைத்து விட்டது. எனவே மேலும் ரூ. 6 லட்சம் கட்ட செல்லி உள்ளார்.

    அவரது பேச்சை நம்பிய முத்துசாமி, ரூ.12 லட்சத்தையும் கட்டி–யுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

    அத்துடன் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துசாமி, இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×