search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money laundering"

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா
    • கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார்.

    இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது.

    ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி, அந்த சம்மனை நிராகரித்தார்.

    இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 46). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வங்கி லோன் மற்றும் கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதையடுத்து பெருமாநல்லூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொது மக்கள் கடன் பெற்று தரும்படி சின்னையாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் சிலர் பணம் கொடுத்துள்ளனர்.

    இதேபோல் வங்கியில் வேலை , மத்திய மாநில அரசு அலுவலக வேலை , ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏராளமானோரிடம் பணம் பெற்று ள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்ட சின்னையா யாருக்கும் லோன் மற்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் திடீரென தலை மறைவாகி விட்டார்.

    இந்நிலையில் லோன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 50ஆயிரத்தை வாங்கி கொண்டு மோசடி செய்த சின்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட 6 பேர் திருப்பூர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சின்னையாவை கைது செய்தனர்.

    விசாரணையில் இவர் இதேபோல் ஏராளமானவரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
    • ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஹை-ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் (வயது 38).

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் வைத்திருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பரத்தை பார்த்து நியூசிலாந்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கருதி அதில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார்.

    அதில் பேசிய சிவகங்கை மாவட்டம் டி.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த ரகுபதிராஜன் (48) என்பவர், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.4 லட்சம் ஆகும் என்று கூறி உள்ளார்.

    இதை நம்பிய பசும்பொன் முத்துராமலிங்கம் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி முதல் இந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் ரூ.4 லட்சம் பணத்தை அவருக்கு அனுப்பி உள்ளார்.

    அதனை ரகுபதி ராஜன் பெற்றுக்கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பசும்பொன் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதில் ரகுபதிராஜன் இதே போன்று பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். 

    • இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
    • மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    களக்காடு:

    கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தின் கிளை நெல்லை மாவட்டம் களக்காடு அண்ணா சாலையில் உள்ளது. இங்கு மேலாளர் மற்றும் நிதி நிறுவன ஊழியர்களாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    சமீபத்தில் இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், களக்காடு கிளையில் கணக்கு விபரங்கள் மற்றும் நகை இருப்பு குறித்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து அதே போல் போலியாக நகைகளை தயாரித்து உள்ளே வைத்துவிட்டு ஒரிஜினல் தங்க நகைகளை நிதிநிறுவன ஊழியர்கள் எடுத்து கொண்டதும், அதனை வேறு ஒரு அடகு கடை நடத்திவரும் நபரின் மூலமாக விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வாறாக சுமார் ரூ.7 1/4 கோடி வரையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை அலுவலக அதிகாரிகள், நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தனுசியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தெரிந்த மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் தொடர்புடைய 5 பேரையும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று நள்ளிரவு வரையிலும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் முக்கிய நபர் ஒருவரை போலீசார் பிடித்து வந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது அந்த நபர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
    • மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு ஹோஹ் துர்க்கை பகுதியை சேர்ந்தவர் குளத்திங்கல் ஷானு. கால்பந்து வீரரான இவர் கொச்சியில் தங்கியிருந்து தனியார் கிளப் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

    அதனை பயன்படுத்தி பிரபல கால்பந்து லீக் அணியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக காட்டிக்கொண்ட அவர், விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

    இது தொடர்பாக கொட்டாரக்கரையை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் வேலை வாங்கித் தருவதாக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் ஷானு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கஜக்கூட்டம், பூஜப்புரா, கன்னியாபுரம், கொட்டாரக்கரை, கோட்ட யம் கிழக்கு, எர்ணாகுளம் சென்ட்ரல், மானந்தவாடி. ஹோஸ்துர்க், வெள்ளரிக் குண்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஷானு மும்பையில் பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். அங்கு புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக நடன பார் நடத்திய ஷானுவை கைது செய்தனர்.

    பின்பு அவரை விசாரணைக்காக கேரளா அழைத்து வந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ‌.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    மதுரை ராமகிருஷ்ணா புரம் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்த் (வயது 36). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவிக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது நண்பர்கள் மூலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள பந்தல்குடி நெடுங்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் தேவபிரியம் என்பவர் அறிமுகமானார்.

    அவர் ஜெயகாந்த்திடம் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஜெயகாந்த் 2018-ம் ஆண்டு ரூ.6 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. அப்போது ஜான் தேவ பிரியம் சுகாதா ரத்துறையில் அரசு வே லைக்கான ஆணை வீடு தேடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்ற மும் இல்லை.

    இதுகுறித்து ஜெயகாந்த் கேட்டபோது, கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் வேண்டுமென தெரி வித்துள்ளார்.

    அதையும் நம்பிய ஜெய காந்த் ஜான் தேவபிரிய னின் பெற்றோரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரி கிறது. மொத்தம் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகாந்த் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பண த்தை தராமல் மோசடி செய்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து அவர் பந்தல்குடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி ரூ.9 லட்சம் மோ சடி செய்த ஜான் தேவப்பிரியம், அவரது தந்தை பால்துரை சிங், தாயார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.
    • மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கற்பக வள்ளி (50). கணவரை இழந்தவர். ஒரு மகனுடன் வசித்து வருகிறார்.

    கணவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் காப்பீடு தொகையாக வந்த பணத்திலும், சேமிப்பு பணத்திலும், மகன் வேலைக்கு சென்றதால் வந்த ஊதியத்தில் செலவு போக மீதமுள்ள பணத்தையும் சேமித்து வைத்திருந்தார்.

    வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.

    இதற்காக இவர் வில்லியனூர் என்.எஸ்.பி. போஸ் நகரில் ரூ.35 லட்சம் கொடுத்து வீட்டுமனை வாங்கினார்.

    அந்த இடத்தில் வீடு கட்ட பூஜை செய்ய கற்பகவள்ளி சென்றபோது அந்த இடம் வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமானது என்பதும் போலி பத்திரம் தயாரித்து தன்னை ஏமாற்றி வீட்டு மனையை விற்று விட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கற்பகவள்ளி, வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மனையை உருளையன்பேட்டை சரவணன் மனைவி அனிதா, உழவர்கரையை சேர்ந்த வீட்டுமனை தரகர் கோபி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து கற்பக வள்ளி விற்றது தெரியவந்தது. இதற்கு அவர்களுக்கு முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்த வேணிமூர்த்தி, மற்றும் மூலகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது.
    • மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் விஜய் (24). இவரது செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் அந்த குறிப்பிட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அந்த மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் ரூ.5 லட்சத்து 71ஆயிரத்து 280 பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தியுள்ளார்.ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி பணம் மீண்டும் இவரது வங்கி கணக்கில் வராததால் அதிர்ச்சி அடைந்த விஜய் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.5 ½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    சிவகாசி சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது62). பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி.

    பட்டதாரியான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் உரிமையாளர் முத்து பாண்டியராஜனுக்கு அறிமுகமானவர்.

    அதனால் முத்துவிடம் தான் அரசு பொதுத் தேர்வுக்காக தயார் செய்து வருவதாக மகாலெட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியராஜனை சந்தித்த முத்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ரவி என்பவரை தெரியும் என்றும், அவருக்கு தலைமை செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், பலருக்கு ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

    இதை நம்பிய பாண்டிய ராஜன் ரவியிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தர முடியும் என்றும் ரூ.5½ லட்சம் செலாகும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 தவணைகளில் ரூ.5 ½லட்சம் ரவிக்கு பாண்டியராஜன் கொடுத்தார். அதன்பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியிடம் விசாரித்த போது விரைவில் ஆர்டர் வரும் என்று கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி வணிக வரித்துறையில் பணி கிடைத்திருப்பதாக மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்துள்ளது. மகாலெட்சுமி அது குறித்து விசாரித்த போது அந்த ஆர்டர் போலியானது என தெரியவந்தது.

    இதையடுத்து ரவி, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது அப்துல் மஜீத் (34). இவரது செல்போன் வாட்ஸ்அப்-க்கு கடந்த மாதம் 17-ந் தேதி குறுச்செய்தி வந்தது.
    • அதில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து பணம் கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் தர்மநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் மஜீத் (34). இவரது செல்போன் வாட்ஸ்அப்-க்கு கடந்த மாதம் 17-ந் தேதி குறுச்செய்தி வந்தது.

    அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் வந்த செல்போன் எண்ணை முகமது அப்துல் மஜீத் தொடர்பு கொண்டு பேசினார்.

    அதில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து பணம் கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    இதைதொடர்ந்து முகமது அப்துல் மஜீத் பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் வரை பணம் பட்டியுள்ளார்.

    இதனிடையே கட்டிய பணம் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது அப்துல் மஜீத் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து அந்த மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
    • மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.

    காங்கயம்,

    நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.

    அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.

    எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் 

    ×