search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை
    X

    பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை

    • ரூ.2 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட பஸ் கண்டக்டர், மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 35). இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    பைக்காரா, முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் இளங்கோவன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் பொன்மேனி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரும், மனைவி கவிதாவும் மாத சீட்டு வசூலித்து வந்தனர். நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் சீட்டு போட்டிருந்தேன். மாத சீட்டு முதிர்வடைந்தது. இளங்கோவன் தரப்பினர் எனக்கு ரூ.1.44 லட்சம் மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை கேட்டேன். அவர்கள் தர மறுத்து விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×