search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  சீட்டு பண மோசடி செய்த  ரேசன் கடை ஊழியர் கைது
    X

    ரேஷன் கடை ஊழியர் பழனி

    பண்ருட்டியில் சீட்டு பண மோசடி செய்த ரேசன் கடை ஊழியர் கைது

    • பண்ருட்டியில் சீட்டு பண மோசடி செய்த ரேசன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • பாக்கியம் என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை யை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த சீட்டு நிறுவனத்தில் ஏராள மான பெண்கள் உள்பட பலர் பணம் கட்டி வந்தனர். இதற்கிடையில் சீட்டு நிறு வனம் நடத்தி வந்த மாரிமுத்து கொரோனாவுக்கு பலியானர். இதனால் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த இவரது மனைவி, மாமனார், ஆகியோரிடம் சீட்டுகட்டியவர்கள் பணம் கேட்டுவந்தனர். இதற்கிடையில் திருவதிகை சக்கரபாணி நகரில் உள்ள மாரிமுத்துவின் மாமனார் பழனியின் வீட்டுக்கு திருவதிகை ஓறையூரான் சந்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி பாக்கியம் (57) என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர். பழனி, பாக்கியத்தை ஆபாசமாக திட்டிகொலைமிரட்டல்விடுத்துள்ளார். இது பற்றி பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரேஷன் கடை ஊழியர் பழனியை கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×