என் மலர்
இந்தியா

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்
- அனில் அம்பானிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.
- அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.
ஜூலை 24 ஆம் தேதி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அனில் அம்பானி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தினார்கள். 66 வயதான தொழில் அதிபர். அனில் அம்பானி மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள்.






