என் மலர்
நீங்கள் தேடியது "Mamata Banerjee"
- 'மறுஆய்வு' பட்டியலில் உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீதிபதிகள் சரிபார்க்க உள்ளனர்.
- 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.04 கோடியாக குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் பட்டியலை வெளியிட்டார். இறுதி பட்டியலில் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு போன்ற காரணங்களால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் 7.04 கோடியாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது 58 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 5 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
1.82 லட்சம் புதிய வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், 'மறுஆய்வு' பட்டியலில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.
இந்த சரிபார்ப்புக்கு பின்னர் கூடுதலாக 8 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாக்குகளும், கொல்கத்தா தெற்கில், 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் வரையும் நீக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் சுமார் 11,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- இந்தியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.
- சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உள்ளிட்ட 10 மாநிலங்களில், காலியாகவுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், மேற்கு வங்கத்தில் இருந்து 5 மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
அதில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடமும், பாஜகவுக்கு 1 இடமும் வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.
தங்களின் மாநிலங்களவை வேட்பாளர்களாக, அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் மாநில டிஜிபி ராஜீவ் குமார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி மற்றும் பிரபல நடிகை கோயல் மாலிக் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த நால்வரில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

யார் இந்த மேனகா குருசாமி?
2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ( இயற்கைக்கு மாறான உறவு) என்பதில் இருந்து தன்பாலின சேர்க்கையை நீக்கி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்பின் மூலமே, இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.
இந்த வழக்கில் மனு மானுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்களில் மேனகாவும் ஒருவர்.
இந்த தீர்ப்பிற்கு பிறகு, தனது சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான பல வழக்குகளிலும் அவர் வாதிட்டுள்ளார்.
ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் தனது எல்.எல்.எம். முடித்த மேனகா குருசாமி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரோட்ஸ் ஸ்காலர் ஆவார்.
2019 ஆம் ஆண்டு டைம் பத்திரிகை அறிவித்த உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இவரும் ஒருவர்.
மாநிலங்களவை தேர்தலில் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்குள் நுழையும் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் என்ற பெருமையை மேனகா குருசாமி பெற உள்ளார்.
- கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியே காரணம்.
- ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்
கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவிற்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, "மாநிலத்தின் பெயர் 'West Bengal' என்று 'W' எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான கூட்டங்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் கடைசியாகவே அழைக்கப்படுகின்றனர்.
நானும் கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பையே பெறுகிறேன்.
மேற்கு வங்க சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை Bangla (வங்காளம்) என மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
இருப்பினும், மத்திய அரசு அதனை நிலுவையில் வைத்துவிட்டு, கேரளாவின் கோரிக்கையை மட்டும் விரைவாக நிறைவேற்றியிருப்பது வஞ்சகமானது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, அம்மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு உடனே சம்மதித்துள்ளது.
பாஜக தேர்தலின் போது மட்டும் 'Bangla' என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் பெங்காலிகளை அவமதிக்கிறது.
ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
- நாகேன் ராய்க்கு பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.
- ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் உள்ளார்.
பாஜக மாநிலங்களவை எம்பியான நாகேன் ராய்க்கு மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.
மேற்குவங்கத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, நாகேன் ராய்க்கு விருது வழங்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமாக உள்ள வடக்கு வங்கதேசத்தில் உள்ள ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் இருப்பதால் இந்த விருது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்திய தேர்தல்களில் வடக்கு வங்கதேசத்தில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எந்த நாற்காலியும் நிரந்தரமானது அல்ல
- இந்த அரசாங்கம் [மத்திய அரசு] 2026 க்கு மேல் நீடிக்காது.
தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட கட்சியால் நடத்தப்படும் 'துக்ளக் ஆணையமாக' மாறிவிட்டது என செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையத்தால் மேற்குவங்கம் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வங்காள அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டால், நாங்கள் அவர்களை 100 சதவீதம் பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார்.
"ERO-க்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ERO-க்களிடம், அவர்களின் குற்றம் என்ன, அவர்களின் தவறு என்ன என்று கேட்டீர்களா? என ஏழு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காரணம் காட்டி, ஜனநாயக உரிமைகளைப் பறித்து, சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்து, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டில் தலையிடுகிறார்கள். எந்த நாற்காலியும் நிரந்தரம் அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் பாஜக ஐடி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
- தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு மம்தா நன்றி தெரிவித்தார்
- பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.
அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.
பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மம்தா பானர்ஜி மனு மீது 2 நாட்களில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. .
இதனையடுத்து தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த மம்தா மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டுகோள் விடுத்தார்.
- உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுனார்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.
அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.
SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
- பாதிக்கப்பட்டவர்களுடன் டெல்லியில தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தார்.
- தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு இடைத்தரகராக செயல்படுவதாக குற்றச்சாட்டு.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம்சாட்டியுனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.
தேர்தல் ஆணையம் பாஜக-வின் இடைத்தரகராக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-
* எங்களுக்கு பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் SIR-ஆல் பாதிக்கப்பட்டவர்கள். இதுபோன்ற நான் லட்சக்கணக்கான மக்களை இங்கு அழைத்து வர முடியும்.
* SIR-ஆல் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை.
* தேர்தலுக்கு சற்று முன்னதாக SIR நடத்தப்படுவது ஏன்?
* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமெ நடத்தப்படுகிறது. 4 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 3 மாநிலங்களில் SIR நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் அசாமில் நடத்தப்படவில்லை.
* எந்தவித திட்டமும் இல்லாமல் 2 முதல் 3 மாதங்களில் நடத்தி முடிப்பது சாத்தியமாகுமா?
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
- SIR-ஐ மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
- இன்று தலைமை தேர்தல் ஆணையர் சந்தித்து பிரச்சனைகளை எடுத்துரைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR பணியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். SIR நடவடிக்கைக்கு பயந்து பலர் தற்கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். அத்துடன் SIR பாஜக உருவாக்கிய செயலியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களை சந்தித்தனர்.
இவர்களை சந்தித்த பிறகு, மம்தா பானர்ஜி கடுங்கோபத்துடன் வெளியேறினார். வெளியில் வந்த அவர், தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு இடைத்தரராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையருடன் பேசிக் கொண்டிருந்த மம்தா பானர்ஜி, திடீரென கோபத்துடன் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
சட்டத்தின் ஆட்சி வெல்லும். சட்டத்தை கையில் எடுக்கும் எவரும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய சட்டம் மற்றும் அதிகாரத்தின்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்து.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறியது முறையாக குறித்துக் கொள்ளப்பட்டது. கூட்டத்தின்போது பலமுறை இடைமறித்து பேசினர். பின்னர் மம்தா பானர்ஜி கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே கோபத்துடன் வெளியேறினார் எனத் தெரிவித்துள்ளது.
- விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
- அஜித் பவார் மரணத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த 3 பேரும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடைம் பேசிய மம்தா பானர்ஜி, "பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன? அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்"
- SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பதற்றம் காரணமாக தினசரி 4 முதல் 5 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தனை வருங்களுக்குப் பிறகு, நாம் நாட்டின் குடிமக்களா? என நிரூபிக்க வேண்டியுள்ளது.
சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட திட்டக்குழுவை, மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக நிதி ஆயோக்கை கொண்டு வந்துவிட்டது. போஸின் பிறந்தநாள் இன்னும் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
- நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்
மத்திய அரசு அமைப்புகளிடம் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மேடையில் பேசிய அவர், "மத்திய ஏஜென்சிகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஜனநாயகத்தைச் சீர்குலைக்கின்றன.
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகளில் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள்.
நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்." என்று தெரிவித்தார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பாக் தேர்தல் வியூக அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, மம்தா பானர்ஜி நேரில் சென்று அந்தச் சோதனையைத் தடுத்ததாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மம்தா பானர்ஜி மற்றும் டிஜிபி ராஜீவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.






