என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamata Banerjee"

    • மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
    • மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசினார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மஸ்ரீ' க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

    மத்திய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு "விபி ஜி ராம் ஜி" எனப் பெயர் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய மம்தா, "தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரியாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமானமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

    மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.

    இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.

    மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    இதற்கிடையே நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் விரைவில் அகற்றப்படும் என பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துச் சென்றார். 

    • காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
    • முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணை ஆணையம் அமைத்தார்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்கள் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை செலவு செய்து டிக்கெட்டுகளை வாங்கினர்.

    அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.

    அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதற்கிடையே நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி ஜாவேத் சமீம் உறுதிப்படுத்தியுள்ளார். 

    • மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் ரசிகர்கள் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.
    • மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.

    மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இந்நிலையில் நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடந்த நிர்வாகக் குறைபாட்டுக்கு நான் மிகவும் வருத்தமடைந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

    • பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
    • முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள் நீக்கப்பட்டன.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    அதன்படி, பாஜக மாநில தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள், அதாவது, நந்திகிராமை விட 4 மடங்கு அதிக வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.  

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ள சௌரிங்கியில் 74,553 வாக்குகளும், கொல்கத்தா துறைமுக தொகுதியில் 63,730 வாக்குகளும் அதிகபட்சமாக நீக்கப்பட்டன.

    மாவட்ட வாரியாக, திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,16,047 வாக்குகளுடன் நீக்கப்பட்டன.

    இறப்புகள், வாக்காளர்கள் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் போலி வாக்குகள் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த மாதம் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

    • நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை
    • உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்றார் மோடி

    வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயை 'பங்கிம் டா' என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி அவமதித்தற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியறுத்தி உள்ளார்.

    நேற்று, கூச் பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா, நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை, ஆனால் வங்காளத்தின் முக்கிய கலாச்சார முகங்களில் ஒருவரை அவர் குறைத்து மதிப்பிட்டார்.

    அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையையும் காட்டவில்லை. இதற்காக நீங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தை அது அழித்துவிடும்" என்று மம்தா கூறினார்.

    தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திங்களன்று மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, கவிஞர் பங்கிம் சந்திராவைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டதில் இருந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

    பங்கிம் உடன் 'டா' சேர்ப்பதை எதிர்த்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்.பி. சவுகதா ராய், 'பங்கிம் பாபு' என்று சொல்லுமாறு மோடியை வலியுறுத்தினார்.

    மோடி உடனடியாக, "நான் பங்கிமை 'பாபு' என்று அழைக்கிறேன். நன்றி, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்" என்றார். அதே நேரத்தில், ராய்-ஐ 'தாதா' என்று அழைக்கலாமா என்று மோடி சந்தேகம் கேட்டார். டா என்பது வங்காள மொழியில் சாதாராண சம்பாஷணையின்போது குறிப்பிடும் விளிச் சொல்லாகும். 

    • SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள்.
    • அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள்.

    பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால் படிவத்தை விநியோகித்து, திரும்பப்பெற்று, பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் SIR எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,

    "பாஜக SIR ஐ வைத்து குறித்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே (இந்துக்கள்) வெட்ட வேண்டாம்.

    நான் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமை பதிவேட்டை (NRC), மக்களை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

    என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும்.

    மேலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனது பொறுப்பு என்றும் உறுதியளிக்கிறேன்.

    சில விஷமிகள், மாநில அரசு மத வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் அல்லது கல்லறைகளாகப் பதிவு செய்ததாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது ஒரு பொய்.

    ஏஐ தொழில்நுட்பம் இப்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒருபோதும் கூறாத அறிக்கைகளைப் பரப்ப என் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

    அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள். பீகாரில், அவர்கள் தந்திரமாக ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தினர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சுயேச்சைகள் வாக்குகளைப் பிரித்தால், இழப்பு உங்களுடையது, நன்மை அவர்களுடையது.

    நான் இன்னும் SIR படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னரே நான் அதை செய்வேன். உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.  

    • எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.
    • எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது என மம்தா பானர்ஜி சாடினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை நிறுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அடிப்படை தயார் நிலை, போதுமான திட்டமிடல், தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல், அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மீதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது எனவு அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

    அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், அவர்கள் என்னை காயப்படுத்தினால், என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பேன்.

    நீ உண்மையான வாக்காளர் என்றால் பயப்படாதே. இப்போது நீ வங்காளதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், நீ இந்தியனாக இருக்க விரும்புகிறாய் என்றும் எழுத வைப்பார்கள்.

    பிறகு என்ன நடக்கும்? பயப்படாதே. நான் இங்கே இருக்கும்போது, உன்னை ஒதுக்கி வைக்க அனுமதிக்க மாட்டேன்.

    இந்த நிலம் இந்த பா.ஜ.க.வுக்கு பயப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் இங்கே இருக்கும் வரை, அவர்கள் உன்னைத் தொட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பதுதான், பாஜகவின் ஆணையமாக இருப்பது அல்ல.

    டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கு வங்கத்துக்கு துணிச்சல் உண்டு. 2029ல் மத்தியில் இருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ( SIR ) அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி , நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ( BLOக்கள் ) கொல்கத்தாவின் தெருக்களில் இன்று பேரணி நடத்தினர் .

    BLOக்கள் , மத்திய கொல்கத்தாவின் கல்லூரித் தெருவிலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். BLO அதிகார ரக்ஷா குழுவின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் SIR தொடங்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் மூன்று பெண் BLOக்கள் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் BLOக்கள் தற்கொலை மற்றும் திடீர் மரணங்கள் பதிவாகி உள்ளது.

    கடந்த வாரம், ஜெய்ப்பூரில் 45 வயதான முகேஷ் ஜாங்கிட் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR தொடங்கியதிலிருந்து அவர் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி ஓம் பர்வா (34), கடந்த வாரம் மயங்கி விழுந்து இறந்தார். SIR நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பேசிய BLO அதிகார ரக்ஷா குழுவின் அதிகாரி, "குறுகிய காலத்தில் பணியை முடிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்று கூறினார்.

    தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் அல்லது BLOக்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தை தொடங்குவோம் என்று BLO குழு எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, BLOக்கள் மனிததன்மையற்று அதிக வேலை வாங்கப்படுவதாக கூறி SIR செயல்முறையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த செயல்முறையால் இதுவரை நாடு முழுவதும் 16 BLOக்கள் இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.  

    • ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.
    • தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கு வங்கத்திலும் நடைபெற்று வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்முறையை கடுமையாக கண்டித்து வருகிறது.

    இருந்தபோதிலும், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் தேர்தல் ஆணையம் பணியை தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் இரண்டு விசயங்கள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். "மாநில தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு SIR தொடர்பான பணிகள் அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கு ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் பங்க்ளா சகாயத கேந்திரா (BSK) ஸ்டாஃப்களை ஈடுபடுத்தக் கூடாது என கடிதம் எழுதியுள்ளார்.

    அதே நேரத்தில், தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் ஒரு வருட காலத்திற்கு 1,000 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் 50 மென்பொருள் உருவாக்குநர்களை பணியமர்த்துவதற்கான முன்மொழிவு கோரிக்கையை (RfP) வெளியிட்டுள்ளது. மேலும், தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.

    இது தொடர்பாக தலையிட வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    • இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
    • வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.

    இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.

    சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து மம்தா கூறுகையில், "வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.

    கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.

    இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறினார். 

    மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 லட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    • இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.

    டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார். 

    • பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது.
    • ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.

    தமிழ்நாடு, மேற்குவங்க உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் இன்று 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி "SIR 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமைதியான, கண்ணுக்குத் தெரியாத மோசடிக்கான அரசியல் கருவி" என விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் (EC) நடத்திய SIR இன் போது, ஒரு உண்மையான வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜக அரசு அடியோடு ஆட்டம் காணும். இந்த அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.

    பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது. ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.

    அடுத்த வருடம் அசாமிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த பாரபட்சம்?. இது தெளிவான பாகுபாடு. மத்தியில் ஆளும் கட்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.

    ×