என் மலர்
நீங்கள் தேடியது "Mamata Banerjee"
- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
- வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.
சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில், "வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.
இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 லட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
- இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.
டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார்.
- பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது.
- ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.
தமிழ்நாடு, மேற்குவங்க உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் இன்று 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி "SIR 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமைதியான, கண்ணுக்குத் தெரியாத மோசடிக்கான அரசியல் கருவி" என விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் (EC) நடத்திய SIR இன் போது, ஒரு உண்மையான வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜக அரசு அடியோடு ஆட்டம் காணும். இந்த அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.
பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது. ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.
அடுத்த வருடம் அசாமிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த பாரபட்சம்?. இது தெளிவான பாகுபாடு. மத்தியில் ஆளும் கட்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
- லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம்.
- மம்தா பானர்ஜி பேரணியில் உரையாற்றுவார் எனத் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.
SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை கடுமையான எதிர்க்கின்றன.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த மாதம் SIR-க்கு எதிராக கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. பேரணி இறுதியில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தீபாவளியைத் தொடர்ந்து காளி பூஜை, பாய் தூஜ் பண்டிகை வரவிருக்கிறது. இந்த பண்டிகைகள் முடிவடைந்த பின்னர், இந்த பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
- மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் இதேபோல் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சம்பவம்.
மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேவேளை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தை குறிவைப்பது சரியல்ல. மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் எவ்வளவு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஒடிசாவில், கடற்கரைகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.
நாங்கள் 1-2 மாதங்களுக்குள் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். மேலும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது"" என முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு மம்தா பேசினார்.
- மாநில அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரி மிரட்டியதாக மம்தா குற்றச்சாட்டு.
- மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்ற்சாட்டை வெளியிடுவதாக மம்தா எச்சரிக்கை.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆனால், மம்தா பானர்ஜி SIR-ஐ கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் தலைமை செயலாளர், மந்திரி அரூப் விஸ்பா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மேற்கு வங்க மாநில தேர்தல் ஆதிகாரி மாநில அதிகாரிகளை மிரட்டியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். அத்துடன், எல்லையை மீறினால் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முதல்வரானார். அதில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக மாநில தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் மம்தா பேசியது மற்றும் அதை மொழிமாற்றம் செய்யப்பட்ட வீடியோவை அனுப்புமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாநில தேர்தல் அதகாரி மீது எந்தவொரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக இருந்தாலும், ஆதாரங்களுடன் லோக்பாலில் முறையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய சென்றபோது பாஜக எம்.பி. மீது கொடூர தாக்கு.
- மூக்கு உடைந்து ரத்தம் சொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
மேற்கு வங்கம் மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டார்ஜிலிங்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் எம்.பி.யை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனை சென்று பாஜக எம்.பி.யை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.
தற்போது துர்கா பூஜை காலம். பேரழிவு காரணமாக இந்த விழைவை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியது. ஆனால், துர்கா பூஜை உரிய நேரத்தில் நடைபெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
- நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன்.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். ஆசிரியையான இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட ஸ்வாகதா பெயின் தனது ஊரில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூரில் பணியமர்த்தப்பட்டார்.
அவர் குடும்பத்தை பிரிந்து உத்தர் தினாஜ்பூரில் வேலை செய்து வந்தார். தொடர் விடுமுறை வந்தால் மட்டும்தான் தனது சொந்த ஊருக்கு வந்து கணவன்- மகனை பார்த்து செல்வார்.
இந்த நிலையில் அவரது 5 வயது மகன் ஐதிஜ்யா மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தனது தாய்க்கு இடமாற்றம் செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அவர் முதல்-மந்திரியை "அன்புள்ள மம்தா திதுன்" என்று அழைத்து, எனது வீடு அசன்சோலில் உள்ளது. என் அம்மா உத்தர் தினாஜ்பூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
எங்களிடமிருந்து விலகி அங்கு வசிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வருகிறார். நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
அவர் இல்லாமல் வாழ்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் அம்மாவை விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும், அவர் இனி எங்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்."
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
ஸ்வாகதா இடமாற்றத்திற்காக முயற்சித்து வருவதாகவும், ஆனால் பல அலுவலகங்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 2021-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுமார் 16,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநில அரசிடம் பணியிட மாற்றம் நிவாரணம் கோரி வருகின்றனர்.
இதுகுறித்து ஐதிஜ்யா கூறுகையில்:-
முதல்-மந்திரி தனது கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். மம்தா திதுன் எனது வேண்டுகோளை நிறைவேற்றினால் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதுவேன் என்றார்.
- பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகிறது.
- யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம் என்றார்.
கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசியதாவது:
பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில், மேற்கு வங்கத்தில் நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழுக்களை கணக்கெடுப்புகளை நடத்த பாஜ அனுப்பி வைத்துள்ளது.
யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம். அவர்கள் அந்தத் தரவைப் பயன்படுத்தி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். அதற்கு பதிலாக, வாக்குச் சாவடிகளில் நேரடியாகச் சரிபாருங்கள்.
நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விட மாட்டேன் என தெரிவித்தார்.
- நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன்.
- நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன் என்கிறார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியதவாது:-
நான் பல பிரதமர்களை அருகில் இருந்து பார்த்துள்ளேன். தற்போது, யார் யார் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து புத்தகம் எழுதப்போகிறேன். அடுத்த வருடம் நடைபெறும் புத்தக திருவிழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படும்.
நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன். ரெயில்வேத்துறை, நிலக்கரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைகளை கையாண்டுள்ளேன். நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு சுமார் 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணியில் இணைந்து பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 1998 முதல் 2006 வரை என்டிஏ அரசில் இடம் பிடித்துள்ளார். 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான 2ஆம் முறை ஆட்சியில் இடம் பிடித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிந்த நிலையில், வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.
- டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது
- வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை" என கூறியிருந்தனர்.
அதில், டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் வங்காள மொழியை வங்கதேச' மொழி என குறிப்பிட்டுள்ளனர்.
வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி.
வங்காள மொழியை வங்கதேச மொழியாக குறிப்பிடுவது தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது.
இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்" என்று பதித்துள்ளார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கண்டன பதிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று குறிப்பிட்டுள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் ஏற்படுத்துவதாகும்.
இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன.
இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்காள மொழிக்கும் மக்களுக்கும் மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்.
- பாஜக "ஜெய் ஸ்ரீ ராம்" என்பதற்கு பதிலாக "ஜெய் மா காளி" என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கியுள்ளது.
- நாங்கள் பாதிப் போரில் வென்றுவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினார்.
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வா உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் ஜூலை 21 கொல்கத்தாவின் தர்மதாலாவில் நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது வங்காளி சமூகத்திற்கு எதிரான சதி என்றும், மேற்கு வங்கம் இதை பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், "வங்காள மொழி மீதான பாஜகவின் பயங்கரவாதத்திற்கு எதிராக மற்றொரு மொழி இயக்கம் நடத்தப்படும். ஜூலை 27 முதல், வங்காளிகள், வங்காள மொழி மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளத்தில் ஒரு இயக்கம் தொடங்கும்" என்று தெரிவித்தார்
தேர்தல் நெருங்குவதால் சமீப காலமாக பாஜக "ஜெய் ஸ்ரீ ராம்" என்பதற்கு பதிலாக "ஜெய் மா காளி" என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கியுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், "ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு பதிலாக ஜெய் மா காளி கோஷத்தை எழுப்ப வைத்தபோதே, நாங்கள் பாதிப் போரில் வென்றுவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினார்.






