search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamata Banerjee"

    • மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார்.
    • அந்த விபத்தில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெற்றியில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து நலமுடன் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நெற்றி காயத்துடன் மம்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா மேயர் மற்றும் மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியானது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியீடு.

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    நெற்றியில் ரத்த காயத்துடன் மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மம்தா விரைவில் குணம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.

    இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், " மேற்கு வங்க முதல்வரின் சாலை விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சியாக உள்ளது. அவள் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்றார்.

    • மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார்.
    • தலையில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில், மம்தா பானர்ஜி மருத்துவமனையில் நெற்றியில் காயத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன.
    • வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கான வேட்பளர்களை வெளியிட்டார்.

    மம்தாவின் இந்த அதிரடியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டார்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியுடன் இன்னும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்புவார் என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார். எனவே பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். நான் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் நிற்கவில்லை என்பதுதான் அந்த செய்தியாகும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விமர்சனம் செய்துள்ளார்.

    • இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.
    • இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் இருக்கின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. கடந்த மாதம் இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளும் தயாராக இருக்கின்றன என தகவல் வெளியானது.

    ஆனால், தனது முடிவில் மம்தா உறுதியாக உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில்தான் நேற்று 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கூட்டணி இல்லை என முடிவானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் "மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள விருப்பமாக உள்ளோம் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    ஜெய்ராம் ரமேஷ்

    பேச்சுவார்த்தை மூலம் இறுதி கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும முறையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. தனிப்பட்ட முறையில் ஒருதலைபட்சமாக அறிவிப்பு ஏதும் வெளியிடுவதில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றாக போட்டியிடுவதைத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதும் விரும்புகிறது" என்றார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில் "இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார். இந்தியா கூட்டணியில் இருந்து அவர் பிரிந்து தனியாக போட்டியிடுவதன் மூலம், என்னுடைய மனவருத்தத்துடன் இருக்க வேண்டாம், நான் பா.ஜனதாவுக்கு எதராக போட்டியிடும் அணியில் இல்லை என்ன செய்தியை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்" என்றார்.

    • மேற்கு வங்காளம் சென்ற பிரதமர் மோடி ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • பிரதமர் மோடியை மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி மாநில வாரியாக சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதன்மூலம் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ஜனாதிபதி அல்லது பிரதமர் யார் வந்தாலும் அவர்களை மாநில முதல் மந்திரி சந்திப்பது வழக்கம். எனவே இது ஒரு சம்பிரதாய சந்திப்பு. இந்த சந்திப்பில் எந்த அரசியலும் பேச நான் வரவில்லை. ஏனெனில் இது அரசியல் சந்திப்பு இல்லை என தெரிவித்தார்.

    • மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா- திரணாமுல் காங்கிரஸ்க்கு இடையில் நேரடி போட்டி.
    • பல்வேறு விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பா.ஜனதா.

    மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தல் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2 ஆயிரமாக உயர்த்தும். நாம் சமையல் செய்வதற்கு விறகு சேகரிக்கும் பழைய நடைமுறைக்கு மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். அவர்கள் கட்டித்தரவில்லை என்றால் மே மாதத்திலிருந்து மாநில அரசே அந்த வீடுகளை கட்டத் தொடங்கும்.

    ஒரு இளைஞரிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கான பணம் கிடைத்ததா? என்று கேட்டேன். சுமார் ₹30,000 கிடைத்ததாக கூறினார். இவரைப் போன்றவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காமல் இருந்த தொகை இதுவாகும். 59 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளோம்

    இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 11 லட்சம் வீடுகள் கட்டுக்கொடுக்க இருக்கிறது. இருப்பினும், சந்தேஷ்காளி பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜகான் ஷேக் நேற்று கைது செய்யப்பட்டது குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் கூறவில்லை.

    • பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள்.
    • என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். சீக்கியர்களை மோசமாகச் சித்தரிக்கும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடியோவை தனது X பக்கத்தில் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் காவல்துறை அதிகாரி, என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    அந்த வீடியோ பதிவில்,"பாஜகவின் பிரிவினைவாத அரசியல் அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    • மேற்கு வங்காளத்தில் பட்ஜெட் தாக்கலின்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • அப்போது பேசிய மம்தா பானர்ஜி, அரசியல் செய்ய இது இடமில்லை பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    எதிர்க்கட்சிக்கு ஏதேனும் கருத்து இருந்தால் பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம். கருத்து தெரிவிக்க இங்கு சுதந்திரம் உள்ளது.

    எதிர்க்கட்சிக்கு அரசியல் செய்ய இது இடமில்லை. நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. பா.ஜ.க.வின் இந்த கேவலமான அரசியலை கண்டிக்கிறோம். அவர்கள் மாநிலத்திற்கு எதிரானவர்கள், நல்லதை விரும்பவில்லை.

    பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் இருப்பதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் கருத்தை பேச்சில் சொல்லலாம். இது ஒன்றும் உங்கள் பா.ஜ.க. கட்சி அலுவலகம் அல்ல. இது சட்டசபை.

    பா.ஜ.க. 147 எம்.பி.,க்களை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தாலும், நாங்கள் அந்த வழியில் செல்ல விரும்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    நீங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதை எதிர்த்துப் போராடுவோம். தைரியம் இருந்தால், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேசுங்கள், அதற்கு முன் பேசவேண்டாம் என தெரிவித்தார்.

    • பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள்.
    • பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது, காங்கிரசுக்கு ஒன்றுமில்லை என்று பா.ஜ.க. சொல்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிரொலியாக காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைத்தாலும் போதும் என மம்தா பானர்ஜி கூறுகிறார்.

    பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். மம்தா பானர்ஜியும் அதையே சொல்கிறார்.

    பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள்? உங்களுக்கு (மம்தா பானர்ஜி) மாநிலம் பின்னர், ராகுல் காந்திக்கு நாடு முதலில், மற்ற அனைத்தும் பின்னர் என தெரிவித்தார்.

    • அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.

    கொல்கத்தா:

    மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று பிற்பகலில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதமந்திரி ஆவாஸ் யோஜனா உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேணடிய பல கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ளது. அந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி மத்திய அரசுக்கு எதிராக அவர் கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். குளிருக்கு மத்தியில் இரவு முழுவதும் தொடர்ந்து. தர்ணா நடைபெற்று வரும் இடத்திலேயே இரவில் தங்கினார் .

    அவர் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் 2-வது நாள் போராட்டத்தில் குதித்தார். மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.

    • நிலுவை தொகையை விடுவிக்க கோரி தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா கூறினார்.
    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு மாநிலத்தின் பாக்கிகள் 7,000 கோடி ரூபாய் எனவும், இதற்கான நிதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி தர்ணாவில் ஈடுபட உள்ளேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் , "கொல்கத்தா ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் தர்ணா போராட்டம் தொடங்கும். எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு தலைமை தாங்குவார். இதில் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், கொல்கத்தா ரெட் ரோட்டில் மைதான பகுதியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தொடங்கினார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    ×