என் மலர்
நீங்கள் தேடியது "Mamata Banerjee"
- SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள்.
- அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள்.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால் படிவத்தை விநியோகித்து, திரும்பப்பெற்று, பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் SIR எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,
"பாஜக SIR ஐ வைத்து குறித்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே (இந்துக்கள்) வெட்ட வேண்டாம்.
நான் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமை பதிவேட்டை (NRC), மக்களை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும்.
மேலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனது பொறுப்பு என்றும் உறுதியளிக்கிறேன்.
சில விஷமிகள், மாநில அரசு மத வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் அல்லது கல்லறைகளாகப் பதிவு செய்ததாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது ஒரு பொய்.
ஏஐ தொழில்நுட்பம் இப்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒருபோதும் கூறாத அறிக்கைகளைப் பரப்ப என் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள். பீகாரில், அவர்கள் தந்திரமாக ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தினர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சுயேச்சைகள் வாக்குகளைப் பிரித்தால், இழப்பு உங்களுடையது, நன்மை அவர்களுடையது.
நான் இன்னும் SIR படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னரே நான் அதை செய்வேன். உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.
- எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது என மம்தா பானர்ஜி சாடினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை நிறுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அடிப்படை தயார் நிலை, போதுமான திட்டமிடல், தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல், அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மீதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது எனவு அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், அவர்கள் என்னை காயப்படுத்தினால், என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பேன்.
நீ உண்மையான வாக்காளர் என்றால் பயப்படாதே. இப்போது நீ வங்காளதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், நீ இந்தியனாக இருக்க விரும்புகிறாய் என்றும் எழுத வைப்பார்கள்.
பிறகு என்ன நடக்கும்? பயப்படாதே. நான் இங்கே இருக்கும்போது, உன்னை ஒதுக்கி வைக்க அனுமதிக்க மாட்டேன்.
இந்த நிலம் இந்த பா.ஜ.க.வுக்கு பயப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் இங்கே இருக்கும் வரை, அவர்கள் உன்னைத் தொட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பதுதான், பாஜகவின் ஆணையமாக இருப்பது அல்ல.
டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கு வங்கத்துக்கு துணிச்சல் உண்டு. 2029ல் மத்தியில் இருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்தார்.
- ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ( SIR ) அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி , நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ( BLOக்கள் ) கொல்கத்தாவின் தெருக்களில் இன்று பேரணி நடத்தினர் .
BLOக்கள் , மத்திய கொல்கத்தாவின் கல்லூரித் தெருவிலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். BLO அதிகார ரக்ஷா குழுவின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.
இந்த மாத தொடக்கத்தில் SIR தொடங்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் மூன்று பெண் BLOக்கள் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் BLOக்கள் தற்கொலை மற்றும் திடீர் மரணங்கள் பதிவாகி உள்ளது.
கடந்த வாரம், ஜெய்ப்பூரில் 45 வயதான முகேஷ் ஜாங்கிட் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR தொடங்கியதிலிருந்து அவர் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி ஓம் பர்வா (34), கடந்த வாரம் மயங்கி விழுந்து இறந்தார். SIR நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய BLO அதிகார ரக்ஷா குழுவின் அதிகாரி, "குறுகிய காலத்தில் பணியை முடிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்று கூறினார்.
தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் அல்லது BLOக்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தை தொடங்குவோம் என்று BLO குழு எச்சரித்துள்ளது.
இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, BLOக்கள் மனிததன்மையற்று அதிக வேலை வாங்கப்படுவதாக கூறி SIR செயல்முறையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த செயல்முறையால் இதுவரை நாடு முழுவதும் 16 BLOக்கள் இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.
- ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.
- தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கு வங்கத்திலும் நடைபெற்று வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்முறையை கடுமையாக கண்டித்து வருகிறது.
இருந்தபோதிலும், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் தேர்தல் ஆணையம் பணியை தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு விசயங்கள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். "மாநில தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு SIR தொடர்பான பணிகள் அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கு ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் பங்க்ளா சகாயத கேந்திரா (BSK) ஸ்டாஃப்களை ஈடுபடுத்தக் கூடாது என கடிதம் எழுதியுள்ளார்.
அதே நேரத்தில், தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் ஒரு வருட காலத்திற்கு 1,000 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் 50 மென்பொருள் உருவாக்குநர்களை பணியமர்த்துவதற்கான முன்மொழிவு கோரிக்கையை (RfP) வெளியிட்டுள்ளது. மேலும், தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக தலையிட வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
- வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.
சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில், "வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.
இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 லட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
- இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.
டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார்.
- பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது.
- ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.
தமிழ்நாடு, மேற்குவங்க உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் இன்று 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி "SIR 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமைதியான, கண்ணுக்குத் தெரியாத மோசடிக்கான அரசியல் கருவி" என விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் (EC) நடத்திய SIR இன் போது, ஒரு உண்மையான வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜக அரசு அடியோடு ஆட்டம் காணும். இந்த அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.
பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது. ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.
அடுத்த வருடம் அசாமிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த பாரபட்சம்?. இது தெளிவான பாகுபாடு. மத்தியில் ஆளும் கட்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
- லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம்.
- மம்தா பானர்ஜி பேரணியில் உரையாற்றுவார் எனத் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.
SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை கடுமையான எதிர்க்கின்றன.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த மாதம் SIR-க்கு எதிராக கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. பேரணி இறுதியில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தீபாவளியைத் தொடர்ந்து காளி பூஜை, பாய் தூஜ் பண்டிகை வரவிருக்கிறது. இந்த பண்டிகைகள் முடிவடைந்த பின்னர், இந்த பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
- மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் இதேபோல் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சம்பவம்.
மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேவேளை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தை குறிவைப்பது சரியல்ல. மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் எவ்வளவு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஒடிசாவில், கடற்கரைகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.
நாங்கள் 1-2 மாதங்களுக்குள் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். மேலும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது"" என முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு மம்தா பேசினார்.
- மாநில அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரி மிரட்டியதாக மம்தா குற்றச்சாட்டு.
- மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்ற்சாட்டை வெளியிடுவதாக மம்தா எச்சரிக்கை.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆனால், மம்தா பானர்ஜி SIR-ஐ கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் தலைமை செயலாளர், மந்திரி அரூப் விஸ்பா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மேற்கு வங்க மாநில தேர்தல் ஆதிகாரி மாநில அதிகாரிகளை மிரட்டியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். அத்துடன், எல்லையை மீறினால் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முதல்வரானார். அதில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக மாநில தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் மம்தா பேசியது மற்றும் அதை மொழிமாற்றம் செய்யப்பட்ட வீடியோவை அனுப்புமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாநில தேர்தல் அதகாரி மீது எந்தவொரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக இருந்தாலும், ஆதாரங்களுடன் லோக்பாலில் முறையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய சென்றபோது பாஜக எம்.பி. மீது கொடூர தாக்கு.
- மூக்கு உடைந்து ரத்தம் சொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
மேற்கு வங்கம் மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டார்ஜிலிங்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் எம்.பி.யை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனை சென்று பாஜக எம்.பி.யை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.
தற்போது துர்கா பூஜை காலம். பேரழிவு காரணமாக இந்த விழைவை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியது. ஆனால், துர்கா பூஜை உரிய நேரத்தில் நடைபெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
- நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன்.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். ஆசிரியையான இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட ஸ்வாகதா பெயின் தனது ஊரில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூரில் பணியமர்த்தப்பட்டார்.
அவர் குடும்பத்தை பிரிந்து உத்தர் தினாஜ்பூரில் வேலை செய்து வந்தார். தொடர் விடுமுறை வந்தால் மட்டும்தான் தனது சொந்த ஊருக்கு வந்து கணவன்- மகனை பார்த்து செல்வார்.
இந்த நிலையில் அவரது 5 வயது மகன் ஐதிஜ்யா மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தனது தாய்க்கு இடமாற்றம் செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அவர் முதல்-மந்திரியை "அன்புள்ள மம்தா திதுன்" என்று அழைத்து, எனது வீடு அசன்சோலில் உள்ளது. என் அம்மா உத்தர் தினாஜ்பூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
எங்களிடமிருந்து விலகி அங்கு வசிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வருகிறார். நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
அவர் இல்லாமல் வாழ்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் அம்மாவை விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும், அவர் இனி எங்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்."
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
ஸ்வாகதா இடமாற்றத்திற்காக முயற்சித்து வருவதாகவும், ஆனால் பல அலுவலகங்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 2021-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுமார் 16,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநில அரசிடம் பணியிட மாற்றம் நிவாரணம் கோரி வருகின்றனர்.
இதுகுறித்து ஐதிஜ்யா கூறுகையில்:-
முதல்-மந்திரி தனது கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். மம்தா திதுன் எனது வேண்டுகோளை நிறைவேற்றினால் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதுவேன் என்றார்.






