கட்சி தொண்டரை கன்னத்தில் ஓங்கி அறைந்த மம்தா பானர்ஜி

காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்ய பானர்ஜி தலையிட்டார்.
கட்சி தொண்டரை கன்னத்தில் ஓங்கி அறைந்த மம்தா பானர்ஜி
Published on

மேற்கு வங்க முன்னாள் முதலவரும், திரிணாமூல் காங்கிரஸ் (மம்தா பிரிவு) தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் கட்சியின் இளைஞர் பிரிவு பேரணிக்கு பிறகு அரங்கேறிய குழப்பமான காட்சிகளுக்கு மத்தியில், ஆத்திரமடைந்து தனது கட்சி தொண்டர்களில் ஒருவரை அறைந்தார் .

காளிகாட்டில் உள்ள பானர்ஜியின் இல்லத்திற்கு வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்தது. கட்சி வட்டாரங்களின்படி, பேரணியின் போது பல தொண்டர்களும் தலைவர்களும் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்ய பானர்ஜி தலையிட்டார்.

மேலும், வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, தனது இல்லத்திற்கு வெளியே உள்ள பாதையை காலி செய்யுமாறு கட்சி தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்துவதும் காணப்பட்டது.

இந்தக் கூச்சலுக்கு மத்தியில், பானர்ஜி தன் நிதானத்தை இழந்து, தனக்கு பின்னால் நின்று தன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முயன்ற கட்சி தொண்டர் ஒருவரை அறைந்தார்.

இந்த தருணம் கேமராவில் பதிவானதுடன், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் (மம்தா பிரிவு) அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இது குறித்த மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com