search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahua Moitra"

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா
    • கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார்.

    இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது.

    ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி, அந்த சம்மனை நிராகரித்தார்.

    இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

    • வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக ஆஜராக மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது.
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

    பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.

    பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

    இதற்கிடையே, வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் 19-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மஹுவா மொய்த்ராவுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    • மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • இதையடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

    பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.

    இதுகுறித்து பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியது.

    வீட்டை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மொய்த்ரா தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா இன்று காலி செய்தார்.

    • மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
    • மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்யுமாறு அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யாக இருந்த மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை 2023 நவம்பர் 9 அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

    இப்பரிந்துரையை ஏற்ற மக்களவை, மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

    எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசு எஸ்டேட் இயக்குனரகம் கேட்டுக்கொண்டது.

    மஹூவா மொய்த்ரா, தனது பங்களாவை காலி செய்யாத நிலையில், இது குறித்து மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால், அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், "விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில சிறப்புக் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு 6 மாதங்களுக்கு பங்களாவில் உறுப்பினர்கள் தங்க, விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் மஹுவாவின் கோரிக்கை மீது எஸ்டேட் இயக்குனரகம் சொந்தமாக முடிவு எடுக்கலாம். குடியிருப்பவர்களை காலி செய்ய கூறும் முன்பு, அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது. இவ்விவகாரத்தில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    மேலும் தனது மனுவை திரும்பப் பெற மஹுவாவிற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

    • மஹூவா மொய்த்ரா எம்.பி பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும்.
    • பாஜகவுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

    இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அப்போது, மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் என்பது இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலி கூத்தாக்கியுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்புச்சகோதரி மஹூவா மொய்த்ரா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான சனநாயக படுகொலையாகும்.

    பாராளுமன்றத்தில் சகோதரி மஹுவா மொய்த்ரா எழுப்புகின்ற அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மோடி அரசு, பழிவாங்கும் நோக்குடன் முறையற்ற வகையில் அவரை பதவி நீக்கம் செய்து இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலி கூத்தாக்கியுள்ளது. தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்ற பாஜகவின் இத்தகைய கொடும் மனப்பான்மை கோழைத்தனமானதாகும்.

    பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, முத்தலாக் தடைச்சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம், என்று நாட்டு மக்கள் மீதான பாஜக அரசின் அடுத்தடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள் மக்களின் மனச்சான்றாக நின்று, துணிச்சலாக ஓங்கி ஒலித்த ஒற்றைக்குரலையும் அதிகார கொடுங்கரம் கொண்டு நசுக்கியுள்ளனர் நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள்.

    சகோதரி மஹுவா மொய்த்ரா எழுப்பிய ஏதாவது ஒரு கேள்விக்கு பிரதமர் மோடியிடமோ அல்லது அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களிடமோ, பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ பதில் இருந்துள்ளதா? பாராளுமன்றத்தில் அதானிக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பினார் என்ற காரணத்திற்காகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் இந்த நாடும், அரசும் ஏழை, எளிய மக்களுக்கானதா? அல்லது அம்பானி, அதானிக்கானதா? மஹுவா மொய்த்ரா யார் சொல்லி கேள்வி கேட்டார் என்று நீதி விசாரணை செய்தவர்கள், அவர் கேட்ட கேள்விகள் சரியா? தவறா? என்பதற்கு எந்த விசாரணையும் இதுவரை செய்யாதது ஏன்?

    கௌரி லங்கேஷ், கல்புர்கி என்று தங்களது பாசிசப் போக்கிற்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களின் குரல்களை எல்லாம் படுகொலைகள் மூலம் நிரந்தரமாக நிறுத்தியவர்கள் தற்போது நாடாளுமன்றத்தின் குரல்வளையையும் நெரிக்க தொடங்கியுள்ளது வெட்கக்கேடானது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, அடிபணியாத எதிர்க்கட்சி உறுப்பினர்களை வரிமானவரித் துறை, அமலாக்கத் துறைகளை ஏவி மிரட்டி அடிபணியச்செய்வது என்ற பாஜகவின் அதிகார கொடும்போக்கின் அடுத்த படிநிலையே தற்போது சகோதரி மஹுவா மொய்த்ராவின் சிறிதும் அறமற்ற பதவி நீக்கமாகும்.

    அதிகாரம் நிலையானது என்ற மமதையுடன் பத்தாண்டு காலமாக பாஜக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய கொடுங்கோன்மை நடவடிக்கைகளுக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையில் நெறிமுறைக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுகுறித்து மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது. அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.


    இதற்கிடையே, மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அழிவுக்கான ஆரம்பம் இது என பா.ஜ.க.வை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சாடினார்.

    இதுதொடர்பாக, மஹுவா மொய்த்ரா கூறுகையில், நெறிமுறைக் குழுவுக்கு டிஸ்மிஸ் அதிகாரம் இல்லை. இது உங்கள் (பாஜக) முடிவின் ஆரம்பம். என்னை வாயை மூடிக்கொண்டு அதானி விவகாரத்தை ஒழித்துவிடலாம் என இந்த மோடி அரசு நினைத்திருந்தால் அது நடக்காது. இந்த கங்காரு நீதிமன்றம் இந்தியா முழுமைக்கும் காட்டியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். அதானி உங்களுக்கு முக்கியம். எந்த ஒரு பெண் எம்.பி.யை அடிபணிய வைக்கும்படி நீங்கள் எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    • பணம், பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொண்டு கேள்வி கேட்டதாக குற்றச்சாட்டு.
    • அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என நெறிமுறைக்குழு குறிப்பிட்டது.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

    இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    இதற்கிடையே, மக்களவையில் பா.ஜனதாவின் விஜய் சோங்கர் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பணம், பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொண்டு கேள்வி கேட்டதாக குற்றச்சாட்டு.
    • நெறிமுறைக்குழு 500 பக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், மக்களவை உறுப்பினருக்கு லாக்கின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தை பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவையின் நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபனைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது என நெறிமுறைக்குழு தெரிவித்தது. அத்துடன் எம்.பி. பதவியில் இருந்த நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் அவை தொடங்கியதும் பா.ஜனதாவின் விஜய் சோங்கர் அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை மீது விவாதம் நடைபெற்று வாக்குகள் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வந்த மஹுவா மொய்த்ரா, "துர்கா தேவி வந்தாள்! தற்போது நாம் பார்ப்போம். அழிவு வரும்போது, முதலில் மனசாட்சிதான் அழிகிறது. அவர்கள் வஸ்த்ரஹாரனை (பாஞ்சாலியின் துயில் உரிதல்) தொடங்கிவிட்டார்கள். தற்போது நீங்கள் மகாபாரத போர்க்களத்தை பார்ப்பீர்கள்." எனத் தெரிவித்தார்.

    குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நாளில் இருந்தே மஹுவா மொய்த்ரா அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் எழுப்ப பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.
    • மக்களவை உறுப்பினருக்கான லாக்கின், பாஸ்வேர்டுகளை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையில் கேள்விகள் எழுப்ப பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும், பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினருக்கான லாக்கின், பாஸ்வேர்டு ஆகியவற்றை தொழில் அதிபருக்கு பகிர்ந்ததாகவும், அவர் அதை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொர்டர்பாக பாராளுமன்ற மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மஹுமா மொய்த்ரா இந்த குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்காமல் மஹுமா மொய்த்ரா வெளியேறினார்.

    விசாரணைக்குப் பிறகு இன்று வினோத் குமார் தலைமையிலான நெறிமுறைக்குழு வரைவு அறிக்கை தயார் செய்கிறது. அப்போது மஹுமா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்களவை உறுப்பினர் உள்நுழைவுச் சான்றுகளை தொழில் அதிபருடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொய்த்ராவின் நடத்தை மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது மற்றும் குற்றமானது எனக் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசால் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    நெறிமுறைக்குழு அறிக்கை தாக்கல் செய்தபின், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் நடவடிக்கை மேற்கொள்வார். அரசு விசாரணை நடத்த உத்தரவிடுமா? என்பது அப்போதுதான் தெரியவரும்.

    • மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் நவம்பர் 2-ம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார்.
    • அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார்.

    இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

    மக்களவைக்கு கேள்விகளை நேரடியாக பதிவிடுவதற்காக, பாராளுமன்ற இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுவா மொய்த்ரா வழங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகார் மீது மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.

    மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் நவம்பர் 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.யின் கருத்துக்கு பஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது வீட்டுக்கு சிபிஐயின் வரவு நல்வரவு ஆகுக. அதானியை முதலில் விசாரிக்கட்டும், என்னிடம் உள்ள ஷுக்களை எண்ணிக் கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோரிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை
    • மஹுவா மொய்த்ராவை தவிர மற்ற நபர்களிடம் விசாரணை வேண்டியதில்லை எனக் கூறியுள்ளது நெறிமுறைக்குழு

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக பாராளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகிய இருவரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் மத்திய தொழில்நுட்பத்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது பாராளுமன்ற நெறிமுறைக்குழு. அதில் மஹுமா மொய்த்ராவின் பாராளுமன்ற மக்களவையின் லாக்கின் தொடர்பான விவரத்தை கேட்டுள்ளது.

    மேலும், துபாயில் இருந்து தயாரிக்கப்பட்ட தர்ஷன் ஹிராநந்தனியின் பிரமாண பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல் அளிக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

    மஹுவா மொய்த்ராவைத் தவிர மற்ற யாரிடமும் விசாரைணை நடத்த வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மீது குற்றச்சாட்டு
    • பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் இன்று ஆஜராகி அறிக்கை அளிக்க உள்ளனர்

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக குற்றம்சாட்டிய இருவரிடம் பாராளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி மக்களவை நெறிமுறைக்குழு இன்று விசாரணையை தொடங்குகிறது. குற்றம்சாட்டிய பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர், இன்று பாராளுமன்ற மக்களவை நெறிமுறைக்குழு முன் ஆஜராக இருக்கின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த விவாகரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது முதன்முறையாக விசாரணை தொடங்கப்படுகிறது.

    ×