என் மலர்
இந்தியா

இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் இது இருண்ட நாள்: திரிணாமுல் எம்.பி. சாடல்
- மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
- மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:
இங்கு வெறும் ஐம்பது வாக்கு வித்தியாசம் மட்டுமே உள்ளது, இந்த மசோதா எவ்வளவு பிரபலமற்றது மற்றும் பொதுமக்களின் ஆணைக்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
கட்சியின் கொறடா மற்றும் இரு கூட்டாளிகளால் மட்டுமே அவர்களால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடிந்தது.
இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் இது மிகவும் இருண்ட நாள். அரசாங்கம் நியாயமற்ற மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.






