search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mamata"

    • மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்ல இருந்த நிலையில் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
    • நாளை புறப்படுவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

    2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 27-ந்தேதி டெல்லி பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களில் பலர் புறக்கணித்துள்ளனர்.

    நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காள மாநில முதல்வர் இன்று டெல்லி செல்வதாக இருந்தார். கடைசி நேரத்தில் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

    "இன்று மதியம் மம்தா பானர்ஜி டெல்லி புறப்பட இருந்தார். ஆனால் இன்று டெல்லி புறப்படமாட்டார். எந்த காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை" என திரணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

    நாளை டெல்லி புறப்படுவாரா? என்ற கேள்விக்கு, "தற்போது வரை அதுகுறித்து ஏதும் தெரியாது. இது குறித்து நாளைக்குதான் தெரியவரும்" எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. மம்தாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தால் ஏறக்குறைய இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் (மாநிலங்களில் ஆட்சி) புறக்கணித்ததாகும்.

    • மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
    • ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளில் 10-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.

    ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேரத்ல் நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

    மேற்கு வங்காளத்தில் நான்கு தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகள் பாஜக-விடம் இருந்தது. இந்த நான்கு தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக நிலை உள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில் "நாடு முழுவதும் பாஜவுக்கு எதிரான நிலை உள்ளது. மத்திய பிரதேசத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு சாதகமான முடிவு இல்லை. மக்களவை தேர்தலில் பாஜக முழு மெஜாரிட்டி பெறவில்லை.

    மக்கள் முடிவு அவர்களுக்கு எதிராக உள்ளது. இதனால் தற்போது மீண்டும் ஏஜென்ஸி ராஜ்ஜியத்தை கையில் எடுத்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவு மக்களின் வெற்றி. இந்த வெற்றி, மக்கள் மீதான சமூகப் பொறுப்புக்கான கட்சியின் அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கும்" என்றார்.

    • முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொள்ள மும்பை செல்கிறார்.
    • நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை வரும் வெள்ளிக்கிழமை (நாளை) சந்திக்க இருப்பதாக மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அப்போது நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள இன்று மேற்கு வங்காளத்தில் இருந்து மும்பை புறப்பட்டார். அப்போது இவ்வாறு தெரிவித்த மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதவையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக நான் மும்பை செல்ல இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் பலமுறை அழைப்பு விடுத்தனர். முகேஷ் அம்பானி வங்காளத்தின் அழைப்பின் பேரில் பிஸ்வா பங்களா மாநாட்டில் பலமுறை கலந்து கொண்டார். நான் போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் முகேஷ் ஜி, அவரது மகன் மற்றும் நீடா ஜி ஆகியோர் என்னை வருமாறு பலமுறை கேட்டுக் கொண்டதால், நான் செல்ல முடிவு செய்தேன்.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு நான் சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்தது கிடையாது. இதனால் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அகிலேஷ் யாதவும் மும்பை வருகிறார். அவரையும் சந்திக்க இருக்கிறேன் என்றார்.

    மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    • பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.

    தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கருத்துக் கணிப்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
    • ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்து கணிப்பு பொய்யாகும் என உறுதியாக கூறினார்.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்ல செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.

    தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

    கடந்த முறை 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

    • கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
    • படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார்.

    மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறார்.

    கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.

    தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என திமுக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.

    இந்நிலையில், பிரதமரின் தியான நிகழ்ச்சி குறித்து பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். தியானம் செய்ய அல்ல. கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, "பிரதமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி வருகிறார்.
    • தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக தியானத்தில் ஈடுபட இருப்பதால் எதிர்க்கட்சிகள் கேள்வி.

    மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி செல்கிறார்.

    கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.

    தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    பிதரமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். அவரால் தியானம் செய்ய முடியும். ஆனால், அது டிவில் ஒளிபரப்ப முடியாது. ஒளிபரப்பப்பட்டால் அது தேர்தல் விதியை மீறுவாகும். தியானம் செய்யும் யாருக்கும் கேமரா தேவையா?. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக 48 மணி நேர அமைதியான காலத்தில் வாக்கு சேகரிப்பதற்கான வழியாகும்.

    இந்த முறை பாஜக அதிகாரத்திற்க வந்தால் எந்த அரசியல் கட்சியோ, தேர்தலோ, சுதந்திரமோ, மதமோ, மனிதாபிமானமோ அல்லது கலாசாரமோ இருக்காது.

    மேற்கு வங்காளத்தில் சிறந்த முடிவை எட்டுவோம் என பிரதமர் மோடி கூறுகிறார். இதன் அர்த்தம் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதுதான். மேற்கு வங்காளத்தில் அவர்கள் ஜீரோதான் பெறுவார்கள்.

    நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்காமல் இருந்திருந்தால், இன்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்திருக்க முடியாது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும்.
    • மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள்.

    சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கும் முர்ஷிதாபாத், ஜாங்கிபுர் மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி அடுத்தடுத்து தேர்தல் பிரசார பேரணியில் கலந்த கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் ஒரு விசயத்தை பயன்படுத்துவார்கள் அல்லது வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை எடுத்துள்ளார்கள். அது குறித்து பரப்புரை செய்கிறார்கள். தேர்தல் சொல்லாடலைத் தவிர அதில் வேறு ஏதும் இல்லை. இதனால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடையமாட்டார்கள்.

    வாக்குமுறை மற்றும் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும். மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். பா.ஜனதாவுக்கு பயம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது காவி முகாம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    யாராவது ஒருவர் தவறில் ஈடுபட்டால், அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், 26 ஆயிரம் வேலைகளை (ஆசிரியர்கள் வேலை நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது) பறித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பா.ஜனதாவின் சூழ்ச்சி. உங்களின் வேலைகளை பறித்த அவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.

    சிஏஏ சட்டப்பூர்வமான குடிமக்களை வெளிநாட்டினர்களாக்குவதற்கான பொறியாகும். சிசிஏ-வை அமல்படுத்தினால், என்.ஆர்.சி. பின்பற்றப்படும். நாங்கள் இரண்டையும் மேற்கு வங்காளத்தில் அனுதிக்கமாட்டோம். அவர்கள் என்ஆர்சி-யை பயன்படுத்த விரும்புகிறார்கள். நான் அனுதிக்கமாட்டேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது.
    • பிரதமர் மோடியின் உத்தரவாதம் தேர்தல் பொய்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஜால்பைகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது. வடக்கு பெங்காலுக்கு அவர்கள் செய்தது என்ன?. பிரதமர் மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தேர்தல் பொய். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நாட்டின் அரசமைப்பை பா.ஜனதா அழித்து விட்டது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களில் கூட வெற்றி பெறாது எனக் கூறி வருகின்றனர்.

    அதேவேளையில் தேர்தல் கருத்துக் கணிப்பில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம்.
    • காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள தக்சின் தினாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி ஊடுருவலை தடுக்கமாட்டார். ஏனென்றால் ஊடுருபவர்கள் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவல் ஊடுருவலை தடுக்க முடியும். நாங்கள் அசாம் மாநிலத்தில் ஊடுருவலை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    ஏப்ரல் 17-ந்தேதி ராம் நவமி. கடவுள் ராமர் பிறந்த தினம். ஐந்து வருடத்திற்குள் ராமர் கோவில் விசயத்தை பிரதமர் மோடி முடித்து வைத்தார். பூமி பூஜை நடத்தப்பட்டு கோவில் கட்டப்பட்டது. 500 வருடத்திற்குப் பிறகு கடவுள் ராமர் அவரது பிறந்த இடத்தில் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ராம நவமி அவரது பிரமாண்ட வீட்டிற்குள் நடைபெற இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லிம் தனிச்சட்டம் கொண்டு வரப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது எனச் சொல்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தாய்லாந்தின் போட்டோ இடம் பிடித்துள்ளது. ஏனென்றால், ராகுல் பாகா தொடர்ச்சியாக விடுமுறைக்காக அங்கே செல்கிறார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.
    • விவசாயிகளின் போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜக தலைமையிலான மத்திய அரசு, தனது அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்களை பொது மக்கள் பெறாத வகையில், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டையை முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கவனமாக இருங்கள், அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்கிறார்கள்.

    வங்காளத்தின் பல மாவட்டங்களில் பல ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) தேர்தலுக்கு முன் மக்கள் பலன்களைப் பெறக்கூடாது என்பதற்காக ஆதார் அட்டைகளை நீக்குகிறார்கள்.

    ஆனால், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், திட்டங்களின் பயனாளிகளுக்கு நாங்கள் தொடர்ந்து பணம் செலுத்துவோம். ஒரு பயனாளி கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.

    அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு உத்தரவாதம் அளிக்கக் கோரி நடத்திய போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை வழங்காமல இழுத்தடிக்கிறது என மம்தா குற்றச்சாட்டு.
    • மாநில அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக பேசினர்.

    மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.

    உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். பிப்ரவரி 1-ந்தேதிதான் கடைசி நாள் என மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்திருந்தார் மம்தா பானர்ஜி.

    இந்தநிலையில் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்காவிடில் நாளை முதல் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "மத்திய அரசுக்கு பிப்ரவரி 1 வரை (இன்று) காலக்கெடு விதித்திருந்தேன். இன்றைக்குள் நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் நாளையில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். அவர்கள் நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால், அதை எப்படி பெற வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

    இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எல்லோருடைய ஆதரவையும் விரும்புகிறேன்" இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    ×