search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Migrant workers"

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
    • அவர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றார் மம்தா பானர்ஜி.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பா.ஜ.க.வின் ரகசிய பங்காளிகள்.

    மாநில போலீசாரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்?

    மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடாது என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியா?

    மத்திய அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

    இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் கூட அதன் பலனைப் பெறமுடியாது.

    ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது.

    நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அவர்கள் (பா.ஜ.க) உங்கள் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறிப்பார்கள். நான் விடமாட்டேன் என தெரிவித்தார்.

    • தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
    • ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி தொழில், சேவைத்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளில், வட இந்திய தொழிலாளர்களின் பெரும்பங்கை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்பு பிரசாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், அனைத்து மக்களையும் வரவேற்று அரவணைத்து அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. வட இந்திய சகோதர-சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். ஆகவே, தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்படுவதை தமிழக பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரசாரம், தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான தி.மு.க. கலாசாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணம்.

    தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுக்கள் எத்தனை? வட இந்திய சகோதரர்கள் மேல் இத்தனை வன்மப் பிரசாரம் நடந்தும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இவர்களை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தி.மு.க. இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராக தொடர்ந்து செய்து வரும் இது போன்ற வெறுப்பு பிரசாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொலிகள் கூட உண்மையாக இருக்குமோ... என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்தை களைவது தி.மு.க.வின் பொறுப்பு. தமிழக பா.ஜ.க. சார்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர், வடமாநில சகோதரர்களை சந்தித்து இந்த பொய் பிரசாரங்களை எடுத்துக்கூறி, அவர்கள் பாதுகாப்புக்கு தமிழக பா.ஜ.க. என்றுமே உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வருகிறார்கள்.

    இனிமேலாவது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள், வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்பு பிரசாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பைக் காப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொழிலாளா்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
    • சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதல்படி புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் பழைய நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமில் குற்றவியல் நீதித்துறை நடுவா் புகழேந்தி, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, கூடுதல் மகிளிா் நீதிமன்ற நீதித்துறை நடுவா் காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

    இதில் தொழிலாளா்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் தொழிலாளா்களுக்கு வேலைக்கு தகுந்த ஊதியம், பணிப் பாதுகாப்பு, காப்பீடு வழங்கப்படுகிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனா்.

    சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல் முகமதுகான், திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் உதயகுமாா், 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தாமோதரன் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நேர்வில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை எந்தவித விடுதலும் இன்றி தொழிலாளர் துறை இணையதளமான labour.tn.gov.in/ism என்ற இணையதளம் முகவரியில் உள்ளீட்டு முகவரியினை புதிதாக உருவாக்கி அதன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உரியவாறு பதிவேற்றம் செய்யாமல் அவர்களை பணி அமர்த்தியது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது 1979-ம் ஆண்டு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெறும் தொழிலாளர் சட்டம் மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தேகம் இருந்தால்.

    அவ்வாறு பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடமோ அல்லது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.Tiruvannamalai News The details of migrant workers should be uploaded on the website

    புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

    தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

    சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நேர்வில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை எந்தவித விடுதலும் இன்றி தொழிலாளர் துறை இணையதளமான labour.tn.gov.in/ism என்ற இணையதளம் முகவரியில் உள்ளீட்டு முகவரியினை புதிதாக உருவாக்கி அதன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உரியவாறு பதிவேற்றம் செய்யாமல் அவர்களை பணி அமர்த்தியது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது 1979-ம் ஆண்டு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெறும் தொழிலாளர் சட்டம் மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தேகம் இருந்தால்.

    அவ்வாறு பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடமோ அல்லது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.

    ×