என் மலர்
நீங்கள் தேடியது "mamata banerjee s"
- இது மூன்று ஆண்டுகள் எடுத்து மெதுவாக செய்யப்பட்டால் என்ன பிரச்சனை?
- இவ்வளவு காலமாக சட்டவிரோத குடியேறிகள் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு?
மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என்ற பாஜக தலைவர்களின் கூற்றை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று மதியம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்ககோனில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எதிர்ப்புப் பேரணியில் மம்தா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நான் ஒன்றைக் கணிக்கிறேன். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக தோற்கப் போகிறது. வங்காளத்தை வெல்ல அவர்கள் குஜராத்தில் தோற்க நேரிடும்" என்று தெரிவித்தார்.
மேலும் SIR பணிகள் குறித்து பேசிய அவர், "SIR ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது? தேர்தலுக்கு முன்பு யாரால் அதை முடிக்க வேண்டும்? இது மூன்று ஆண்டுகள் எடுத்து மெதுவாக செய்யப்பட்டால் என்ன பிரச்சனை? இவ்வளவு காலமாக சட்டவிரோத குடியேறிகள் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு?
எல்லையைப் பாதுகாப்பதற்கு யார் பொறுப்பு? விமான நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தேர்தல் ஆணையம் இப்போது ஒரு பாஜக ஆணையம் ஆகிவிட்டது. முறையான பயிற்சி கூட பெறாமல் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் பி.எல்.ஓ.க்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்" என்று கூறினார்.
- புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும்
- ஓராண்டிற்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 'ஷ்ரமஸ்ரீ' என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேற்கு வங்கத்தில் வேலை கிடைக்கும் வரையிலோ அல்லது ஓராண்டிற்கோ இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் என்று அத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் சுமார் 22 லட்சம் மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் 'துன்புறுத்தப்படுகிறார்கள்' என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன்.
- வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும்.
கொல்கத்தா:
வக்பு திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதை தொடர்ந்து இது சட்டமானது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள் மேற்கு வங்காளத்தில் பிரித்து ஆட்சி செய்யக்கூடிய எதுவும் நடக்காது. வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
- ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் 2 நபர்களுக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அட்டை EPIC எண்கள், ஹரியானா, குஜராத் மற்றும் பஞ்சாபில் வசிக்கும் மக்களின் வாக்காளர் அட்டை EPIC எண்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
EPIC எண்கள் என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் 10 இலக்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணாகும்.
இந்நிலையில், மமதா பானர்ஜி குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
"வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. EPIC எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும். ஆகவே ஒரே ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இருந்தாலும் ஒருவர் அவருடைய தொகுதியில் உள்ள நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க முடியும்" என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.







