search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judges"

    • 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு.
    • கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.

    உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை வரும் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

    கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு, திரைப் பிரபலங்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் புதுவை வக்கீல் சங்கத்தினர் மனு
    • புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் சமர்ப்பித்தார் .

    புதுச்சேரி:

    புதுவை வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காப்பூர் வாலாவை பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரன் சந்தித்து சால்வை அணிவித்தார்.

    சந்திப்பின் போது தலைமை நீதிபதியிடம் புதுவையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இபைலிங் முறையில் தற்போது வழக்கறிஞர் சங்கத்திற்கு உள்ள பல்வேறு இடர்பாடுகள் பற்றியும், மேலும் இ ஃபைலிங் செக்ஷன் அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்க வேண்டும் என்றும், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும் புதுவையில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் மற்றும் வெகு நாட்களாக காலியாக உள்ள நீதிமன்ற ஊழியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் நடந்து முடிந்த புதுவை மாநிலத்திற்கான நீதிபதி பணிக்கான தேர்வு மூலம் அனைத்து நீதிபதி பணியிடங்களையும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் சமர்ப்பித்தார் .

    மனுவை பெற்ற தலைமை நீதிபதி கனிவுடன் பரிசினை செய்வதாக உறுதியளித்தார். பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருமலைவாசன், மற்றும் அரசு வழக்கறிஞர் ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்தது
    • நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிதாக தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் தலைமை நீதிபதி சந்திரசேகர் மற்றும் நீதிபதியாக பொறுப்பேற்கும் அம்பிகா, ராஜசேகர், சுகந்தி. ஆகியோருக்கு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியக்கு சங்கத் தலைவர் எம். குமரன். தலைமை தாங்கினார். அனைத்து மாவட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ரங்கநாதன், கோவிந்தசாமி, சுப்பிர மணியன், திருக்கண்ண செல்வன், அமாவாசை, ராமன், தாமோதரன், அரசு வழக்கறிஞர்கள் ஸ்ரீதர், ராஜு, தனசேகரன் கார்த்திக் சுந்தர்ராஜன் தனசேகரன், கார்த்திக், சுந்தர், ரீனா ஐஸ்வர்யா, திலகவதி முத்துக்குமரன், பொதுச் செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமி நாராயணன் இணை செயலாளர்கள் சம்பத், பாலசுந்தரம் செயற்குழு உறுப்பினர் சதீஷ், மற்றும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டாணா சென்று மீண்டும் பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.

    பேரணியின் முடிவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதிவதனி வணங்காமுடி ஆகியோர் மாணவர்களிடையே கூறியதாவது:-

    பீடி, சிகரெட், புகையிலை இவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களின் பிறப்பிடமாகவும், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்,பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் சிலரில் தங்களது பெற்றோர்கள் போதை பொருட்களுக்கு இலக்கானவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதை பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்–போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    பேரணியின் போது தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
    • தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம்.

    சென்னை:

    முதன்மை மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வந்த ஆர். சக்திவேல், பி. தனபால், சி. குமரப்பன், கே .ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 4 புதிய நீதிபதிகளும் இன்று காலையில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ் அமல்ராஜ் , வக்கீல் சங்க தலைவர்கள் ஆகியோர் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றினர்.

    நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

    நீதிபதி பி.தனபால் பேசும்போது, நான் பள்ளிப்படிப்பு தமிழ்வழியில் படித்தேன். அதனால், தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம். முயற்சித்தால் இயலாதது என்று எதுவுமில்லை என கூறினார். மேலும் தனக்கு கல்வி கற்க உதவிய தன் சொந்த கிராமத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மூத்த வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் .

    நீதிபதி சி. குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நான் பணியாற்றுவேன் என்றுஉறுதி அளித்தார்.

    நீதிபதி ராஜசேகர் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தன்னுடன் பணியாற்றிய வக்கீல்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

    • நீதிபதிகள் நியமனம் குறித்து புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார்.
    • புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உத்தரவு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. அதன்பின்னர், புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் அறிவித்தார்.

    இதையடுத்து, இரண்டு புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருந்தனர். அவர்களில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்திருந்தது. இன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.

    • தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம்
    • ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது

    திருப்பூர் : 

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்ைன ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.நாகராஜன் கிருஷ்ணகிரி குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், காங்கயம் நீதிபதி பி.ராஜா வாணியம்பாடிக்கும், பல்லடம் நீதிபதி எஸ்.சந்தானகிருஷ்ணசாமி காங்கயத்திற்கும், காங்கயம் ஜூடிசியல் மாஜிஸ்திேரட்டு டி.பிரவீன் குமார் சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கும், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. ஆதியன் சங்கராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
    • பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.

    சர்வதேச தேக்வோண்டோ நடுவர் முகமது ஆஷிக் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி பட்டறையில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தை சேர்ந்தவர் சர்வதேச நடுவர் பரத்சிங், தேசிய நடுவர்களான பாலசுப்பிரமணியன், பஞ்சுநாதன், நந்தகுமார், சார்லஸ், கீர்தன், அரவிந்த் செல்வன், ஜெயசூர்யா, மதன் மற்றும் தஷ்னபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • மதுரை ஐகோர்ட்டில் 3 மாதங்களில் 6 ஆயிரத்து 300 வழக்குகளை நீதிபதிகள் விசாரித்தனர்.
    • இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு, பிரதான அமர்வாக இருந்து, பொது நல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிபதிகள், கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம்.

    இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறி ஞர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர்.

    எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணிடம் இருந்து 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்ட மூத்த மகளை, அவரிடமே மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று ஒப்படைத்தனர். #HighCourtMaduraiBench #HIVBlood
    மதுரை:

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துக்குமார், அப்பாஸ்மந்திரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கவும், தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக பெற கடும் விதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எச்.ஐ.வி. பாதித்த பெண்ணை நேரில் அழைத்து தனி அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது, தன்னுடைய மூத்த மகளை 2 மாதமாக பார்க்காமல், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மூத்தமகள் ஆகியோரை ஆஜராகும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி அவர்களும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதிபதிகளின் தனி அறையில் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையும், மூத்த மகளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று (நேற்று) ஆஜராகினர். பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்ததும், அவரது கணவர் சேர்ந்து வாழ முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் தன்னை பார்த்துக்கொள்ள மாட்டார் என்று அந்த பெண் தெளிவாக கூறியுள்ளார்.

    தற்போது தன் குழந்தைகளுடன் அந்த பெண் தனது பெற்றோருடன் இருந்து வாழ்நாளை கழிக்க விரும்புகிறார். அங்கு தனது கணவர் வந்து பார்க்க எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. எனவே 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த சிறுமி, அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இந்த வழக்கில் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியின் மனநலத்துறை உதவி பேராசிரியர் கீதாஞ்சலி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் ஆகியோரும் ஆஜரானார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, வேலை, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் கேட்டு, அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனுக்கு உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜராக, வக்கீல் ஆர்.வெங்கடேசன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணத்தை சுகாதாரத்துறை செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பெண் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இந்த பெண்ணை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களே உரிய முடிவை எடுக்கலாம். இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #HighCourtMaduraiBench  #HIVBlood
    உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் இன்று பதவியேற்றனர். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    புதுடெல்லி:

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    புதிய நீதிபதிகள் நியமனத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.



    இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக  இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நாளை காலை பதவியேற்றுக் கொள்கின்றனர். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    புதுடெல்லி:

    டெல்லி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்தார்.



    இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.  #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    ×