என் மலர்
நீங்கள் தேடியது "Judges"
- கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- ஜனாதிபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்தார்.
புதுடெல்லி:
கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜய் விஷ்னோய், மும்பை ஐகோர்ட் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 26-ம் தேதி கொலீஜியம் பரிந்துரை செய்தது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் செய்த இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
- மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
- திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.
இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்தனர்.
அப்போது, இஸ்லாமியர்கள் பலர் பக்தர்களுக்கு சாதி, மத பாகுபாடு இன்றி நீர், மோர், உணவு வழங்கினர்.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை பாராட்டி நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூரில் பட்டியலின மக்கள் வழிபட பாகுபாடு காட்டியதாக எழுந்த புகார் மீதான வழக்கதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
அதன்படி" வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில், எங்கும், எதிலும் சாதி பாகுபாடு கிடையாது.
மதுரை சித்திரை திருவிழாவை போல, எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல், அனைத்து பகுதிகளிலும் விழா நடத்தலாமே.
மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று குறிப்பிட்டனர்.
- சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
- 21 நீதிபதிகளின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முடிவு செய்தது. அதன்படி தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருக்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.55.75 லட்சம் உள்ளது.
தெற்கு டெல்லியில் 3 படுக்கை அறைகள் கொண்ட டி.டி.ஏ. பிளாட் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு (4 படுக்கை அறை) ஆகியவை அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது.
மேலும், குர்கான், இமாச்சலபிரதேச வீடுகளில் பங்கும் இருக்கிறது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.1.06 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். 250 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி இருக்கிறது. 2015 மாருதி சுவிப்ட் கார் உள்ளது.
அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பி.ஆர்.கவாய் வங்கி கணக்கில் ரூ.19.63 லட்சம் இருக்கிறது. மராட்டிய மாநிலம் அமராவதி, மும்பை பாந்த்ரா, டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது. ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கிறது.
எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்.
- சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர்.
குறிப்பாக, அந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் தனது தீர்ப்பில் கூறினார்கள்.
இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கவர்னர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்கி, ராகேஷ் திவேதி, வில்சன் எம்.பி. ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.
வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் சொத்து விபரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
- மதுரை ஐகோர்ட்டில் 3 மாதங்களில் 6 ஆயிரத்து 300 வழக்குகளை நீதிபதிகள் விசாரித்தனர்.
- இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு, பிரதான அமர்வாக இருந்து, பொது நல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிபதிகள், கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம்.
இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறி ஞர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர்.
- தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
- பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
சர்வதேச தேக்வோண்டோ நடுவர் முகமது ஆஷிக் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி பட்டறையில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தை சேர்ந்தவர் சர்வதேச நடுவர் பரத்சிங், தேசிய நடுவர்களான பாலசுப்பிரமணியன், பஞ்சுநாதன், நந்தகுமார், சார்லஸ், கீர்தன், அரவிந்த் செல்வன், ஜெயசூர்யா, மதன் மற்றும் தஷ்னபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம்
- ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது
திருப்பூர் :
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்ைன ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.நாகராஜன் கிருஷ்ணகிரி குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், காங்கயம் நீதிபதி பி.ராஜா வாணியம்பாடிக்கும், பல்லடம் நீதிபதி எஸ்.சந்தானகிருஷ்ணசாமி காங்கயத்திற்கும், காங்கயம் ஜூடிசியல் மாஜிஸ்திேரட்டு டி.பிரவீன் குமார் சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கும், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. ஆதியன் சங்கராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நீதிபதிகள் நியமனம் குறித்து புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார்.
- புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.
புதுடெல்லி:
உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உத்தரவு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. அதன்பின்னர், புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் அறிவித்தார்.
இதையடுத்து, இரண்டு புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருந்தனர். அவர்களில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்திருந்தது. இன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.
- ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
- தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம்.
சென்னை:
முதன்மை மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வந்த ஆர். சக்திவேல், பி. தனபால், சி. குமரப்பன், கே .ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 4 புதிய நீதிபதிகளும் இன்று காலையில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ் அமல்ராஜ் , வக்கீல் சங்க தலைவர்கள் ஆகியோர் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றினர்.
நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
நீதிபதி பி.தனபால் பேசும்போது, நான் பள்ளிப்படிப்பு தமிழ்வழியில் படித்தேன். அதனால், தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம். முயற்சித்தால் இயலாதது என்று எதுவுமில்லை என கூறினார். மேலும் தனக்கு கல்வி கற்க உதவிய தன் சொந்த கிராமத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மூத்த வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
நீதிபதி சி. குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நான் பணியாற்றுவேன் என்றுஉறுதி அளித்தார்.
நீதிபதி ராஜசேகர் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தன்னுடன் பணியாற்றிய வக்கீல்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
- பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.
தாராபுரம் :
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரணியை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியான எம்.தர்ம பிரபு தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டாணா சென்று மீண்டும் பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.
பேரணியின் முடிவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதிவதனி வணங்காமுடி ஆகியோர் மாணவர்களிடையே கூறியதாவது:-
பீடி, சிகரெட், புகையிலை இவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களின் பிறப்பிடமாகவும், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்,பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் சிலரில் தங்களது பெற்றோர்கள் போதை பொருட்களுக்கு இலக்கானவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதை பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்–போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பேரணியின் போது தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்தது
- நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிதாக தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் தலைமை நீதிபதி சந்திரசேகர் மற்றும் நீதிபதியாக பொறுப்பேற்கும் அம்பிகா, ராஜசேகர், சுகந்தி. ஆகியோருக்கு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியக்கு சங்கத் தலைவர் எம். குமரன். தலைமை தாங்கினார். அனைத்து மாவட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ரங்கநாதன், கோவிந்தசாமி, சுப்பிர மணியன், திருக்கண்ண செல்வன், அமாவாசை, ராமன், தாமோதரன், அரசு வழக்கறிஞர்கள் ஸ்ரீதர், ராஜு, தனசேகரன் கார்த்திக் சுந்தர்ராஜன் தனசேகரன், கார்த்திக், சுந்தர், ரீனா ஐஸ்வர்யா, திலகவதி முத்துக்குமரன், பொதுச் செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமி நாராயணன் இணை செயலாளர்கள் சம்பத், பாலசுந்தரம் செயற்குழு உறுப்பினர் சதீஷ், மற்றும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.






