என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court Collegium"

    • ஐந்து புதிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
    • 22 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    3 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    உச்ச நீதிமன்ற தலைமையே நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று கூடியது.

    இந்த கூட்டத்தின் முடிவில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது.

    மேலும், ஐந்து புதிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கவும் 22 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    • உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அபய் எஸ். ஓஹா ஓய்வு பெற்றுள்ளார்.
    • உச்சநீதிமன்ற கொலிஜியத்திலும் ஓஹா இடம் பெற்றிருந்தார்.

    உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் அபய் எஸ். ஓஹா. இவர் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்திலும் இடம் பெற்றிருந்தார். தற்போது ஓய்வு பெற்றுள்ளதால் கொலிஜியத்திலும் ஒரு இடம் காலியாகிறது.

    இந்த நிலையில் முதல் பெண் தலைமை நீதிபதியாக தகுதியுள்ள வி.பி. நாகரத்னா, தற்போது உச்சநீதிமன்றத்தின் 5ஆவது தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் கொலிஜியத்தில் இடம் பெறுகிறார்.

    நாளையில் இருந்து இவரது பெயர் கொலிஜியத்தில் இடம் பெறுகிறது. இவர் ஓய்வு பெறும் 2027 அக்டோபர் 29ஆம் தேதி வரை கொலிஜியத்தில் இடம் பிடித்திருந்தார்.

    இனிமேல் நீதிபதி நாகரத்னா தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஷ்வரி ஆகியோருடன் கொலிஜியத்தில் இணைகிறார்.

    வருகிற திங்கட்கிழமை புதிய கொலிஜியம் பி.ஆர். கவாய் தலைமையில் கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது காலியிடங்கள் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

    • உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 34 நீதிபதிகளில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • தற்போது உள்ள 28 நீதிபதிகளில் 9 பேர் 2023ல் ஓய்வு பெற உள்ளனர்

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்துவதற்காக உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 5 நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்புவது தொடர்பாக இன்று தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில், பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிக்கும். ஒரு இடம் மட்டுமே காலியாக இருக்கும்.

    உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ள 28 நீதிபதிகளில் 9 பேர் 2023ல் ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.

    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. இதையடுத்து புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பரிந்துரை செய்யப்பட்ட நீதித்துறை அலுவலர்கள்:

    1. பெரியசாமி வடமலை

    2. ராமச்சந்திரன் கலைமதி

    3. கோவிந்தராஜன் திலகவதி

    பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்:

    1. வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன்

    2. லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி

    3. பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி

    4. ராமசாமி நீலகண்டன்

    5. கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன்

    கடந்த 17ம் தேதி நடந்த கொலிஜியம் கூட்டத்தில், மேற்கண்ட பரிந்துரை தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.

    • ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
    • புதிய நீதிபதிகள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும்.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்.

    • தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது
    • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும்

    புதுடெல்லி:

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும்படி உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் அளித்த பரிந்துரையில் இடம்பெற்ற 4 மாவட்ட நீதிபதிகள் பெயர்கள்:

    1. ஆர்.சக்திவேல்

    2. பி.தனபால்

    3. சின்னசாமி குமரப்பன்

    4. கே.ராஜசேகர்

    சென்னை உயர் நீதிமன்ற கொலிஜியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தது.

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயரும்.

    • நீதிபதிகள் நியமனம் குறித்து புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார்.
    • புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உத்தரவு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. அதன்பின்னர், புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் அறிவித்தார்.

    இதையடுத்து, இரண்டு புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருந்தனர். அவர்களில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்திருந்தது. இன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.

    ×