search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appreciation"

    • இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.
    • படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ''மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற பெயரில் மலையாள திரைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

    இப்படத்தில் " நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றியதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப் படுத்தி உள்ளனர்.

    இப்படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கினார். கடந்த பிப்ரவரி 22-ந் தேதி இப்படம் வெளியானது. அனைத்து மாநில தியேட்டர்களிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ.200 கோடி வசூலை குவித்து உள்ளது.மேலும் இப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.




    தமிழக ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படக்குழுவினர், 'குணா' படத்தின் கதாநாயகன் கமலை சந்தித்து சமீபத்தில் வாழ்த்துகள் பெற்றனர்.

    இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.

    மேலும் இப்படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

    இது குறித்து 'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழு தங்களது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் ''சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாழ்க்கை இனிமையாக செல்ல 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர்.
    • 'நன்றி' என்ற எளிய வார்த்தை பல அற்புதங்களைச் செய்யும்.

    கணவன்-மனைவிக்கு இடையிலான அந்தரங்க நெருக்கமும், அது சார்ந்த அன்யோன்ய செயல்பாடுகளும் தான் ரொமான்ஸ் வாழ்க்கை அலுக்காமலும், சலிக்காமலும் இனிமையாகச் செல்ல இந்த 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு எப்படி நீரூற்றுவது என்று பார்க்கலாமா...?

    நன்றியும், பாராட்டும்:

    முன்பின் தெரியாத யார் யாருக்கோ அவ்வப்போது நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் பலர், வீட்டுக்குள் அதை கடைப்பிடிப்பதில்லை. நம்மவர்தானே... வழக்கமாக செய்யும் வேலைதானே... என்று அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிடுகிறார்கள். மாறாக, மனைவி விசேஷமாக ஒன்றை சமைக்கும்போது, அவருக்காக கணவர் வேலையில் உதவி செய்யும்போது யோசிக்காமல் பரஸ்பரம் பாராட்டு தெரிவிக்கலாம். 'நன்றி' என்ற எளிய வார்த்தை பல அற்புதங்களைச் செய்யும்.

     நேர ஒதுக்கீடு:

    இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலின் மீது குற்றச்சாட்டை போட்டு விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் இந்த ஓட்டம் என்று எவரும் யோசிப்பதில்லை. வாழ்க்கை முழுவதும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும் துணைக்கு நேரம் ஒதுக்கி, மனம் திறந்து பேசுவதும், அவர் கூறுவதை கேட்பதும் முக்கியம். முடிந்தால் இருவரும் வெளியிலும் சென்று வரலாம்.

     இன்ப அதிர்ச்சி:

    திடீர் இன்ப அதிர்ச்சி எவருக்கும் ஒரு 'திரில்'லை ஏற்படுத்தும். அது பரிசுப் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எதிர்பாராத நேரத்தில் ஒரு அன்பான பார்வை, நெகிழ்ச்சியான சொல் போன்றவை உங்கள் வாழ்க்கைத்துணையின் மனமார்ந்த வரவேற்பை பெறும். உறவினர்கள் சூழ்ந்திருக்கையில், "நான் அவளிடம் கூட சொன்னதில்லை... பசங்களை அவளைப் போல யாரும் பொறுப்பா பார்த்துக்க முடியாது' என்ற வார்த்தைகூட மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்.

     வெளிப்படையான பேச்சு:

    வெளிப்படையான பேச்சும், நேர்மையான தகவல்தொடர்பும் இல்லற வாழ்வின் வலுவான அஸ்திவாரமாகத் திகழும். கணவன்-மனைவி தங்களுக்கு இடையிலான பேச்சை மேம்போக்காக வைத்துக்கொள்ளாமல், தமது உணர்வுகள், கனவுகள்... ஏன், பயங்களை கூட பகிர்ந்து கொள்ளலாம். இது உணர்வு ரீதியாக இருவரும் நெருக்கமாக உதவும்.

    காது கொடுத்து கேட்பது:

    கணவன், மனைவியிடமும், மனைவி, கணவனிடமும் தங்கள் எண்ணங்களை, தேவைகளை முதலில் கூற முற்படுவார்கள். அப்போது, 'சும்மா தொண தொணக்காதே..' என்றோ, ஆரம்பிச்சுட்டீங்களா?' என்று முட்டுக்கட்டை போடாமல், பொறுமையாக, காது கொடுத்து கேளுங்கள். துணையின் பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதுகூட இல்லை. கவனமாக கேட்டு, ஆறுதலாக கூறும் இரண்டு வார்த்தைகளே அவருக்கு மிகுந்த நிம்மதியை தரும்.

     அரவணைப்பும், அன்பு முத்தமும்:

    தம்பதியர் இடையில் நெருக்கத்தை வளர்ப்பதில் ஸ்பரிசத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. கைகளை ஆதரவோடு பற்றுதல், அரவணைத்தலுடன், திடீர் அன்பு முத்தமும் அதிசயங்களை நிகழ்த்தும்.

    • மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும் முக்கியமானது.
    • நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளை உள்ளடங்கிய குடும்பம் என்கிற கட்டமைப்பு இருப்பதாலேயே இன்பத்துடன் துன்பங்களை எதிர்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் மனித வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது. அத்தகைய குடும்ப வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். கொண்டாட்டம் என்றால் புன்னகைத்துக்கொண்டு இருப்பது மட்டுமல்ல.

    எல்லா சூழல்களையும் ஏற்றுக்கொள்வதும், எதிர்கொள்வதும், கடந்துசெல்வதும் தான். இதனை நமது அன்றாட வாழ்வில் பொருத்திப்பார்க்கும்போது வாழ்க்கை அழகாக தெரியும். இன்றைய இயந்திர வாழ்க்கை சூழலில் அதனை செயல்முறை பயிற்சி வழியாக கற்றுக்கொள்வதும், பின்பற்றுவதும் அவசியமானது.

    அது என்னவெனில் 1.நன்றி சொல்தல் 2.பாராட்டுதல் 3.மன்னித்தல். இந்த மூன்று வார்த்தைகளை அன்றாடம் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயன்படுத்த வேண்டும். அதாவது கணவன் - மனைவி, பெற்றோர், பிள்ளைகள், சகோதர - சகோதரிகள் என எல்லோர் மட்டத்திலும் பயன்படுத்தினால் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் கொண்டாட்டமாகவே அமையும்.

    முதலாவது, நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் மற்றவரை மதிக்கிறோம் என்ற உணர்வை அது வெளிப்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு செய்த உதவி சிறியதாக இருந்தாலும் நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் அவர்களையும், அவர்களது செயல்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என்ற நம்பிக்கையை இது உருவாக்கும்.

    இரண்டாவது, பாராட்டுதல். குடும்ப உறுப்பினர்கள் முன்னின்று செய்யும் செயல்களுக்கு மனதார பாராட்ட வேண்டும். அதற்கு தயங்கக்கூடாது. பாராட்டுவது அந்த நபரின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம். குறிப்பாக மனைவியின் ஒவ்வொரு செயல்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். `சாப்பாடு நல்லா இருந்துச்சு' என்று சொல்லும்போது அது அவருக்கு மாபெரும் மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்.

    அதுபோல் மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும் முக்கியமானது. எதிர்பாராதவிதமாக சிறு தவறுகள் நடக்கலாம். அதனை உணர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்பு கேட்கும் போது மன்னித்துவிட வேண்டும். தவறுகளை மன்னிக்கும் போதுதான் அவர் மீது நல்ல புரிதல் ஏற்படும். சில சமயங்களில் மன்னிக்க முடியாத தவறை செய்திருந்தாலும் கூட கோபத்தை வெளிப்படுத்தாமல் அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த மன நிலையே மன்னிக்கும் பக்குவத்தை நமக்கு கொடுக்கும். மன்னிப்பு என்பது அன்பின் உச்சகட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த மூன்று வழிமுறைகளையும் செயல்முறை பயிற்சியாக அன்றாடம் பின்பற்றும்போது என்ன நடந்தாலும் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும். இந்த செயல்முறை பயிற்சி நம்மிலும், குடும்பத்திலும் ஆரோக்கியமான உளவியல் மாற்றத்தை தரும் என்பது உளவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை அன்றாடம் பயிற்சி செய்வோம்... மகிழ்ச்சியாக வாழ்வோம்!

    • கம்பன் கலையரங்கில் நடந்தது
    • மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரி செயலர் ராஜீவ் குமாரர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திண்டிவனம் கம்பன் கழகம் அறக்கட்டளை சார்பில் அமுதவிழா காணும் வேரை விழுதுகள் வணங்கும் விழா இன்று காலை புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிக்கு பாராட்டு மடல் மற்றும் நினைவு பரிசு வழங்கி ஆசி ெபற்றார்.

    விழாவில் முன்னாள் சபாநாயகரும் புதுவை கம்பன் கழக தலைவருமான வி.பி. சிவக்கொழுந்து மற்றும் எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரி செயலர் ராஜீவ் குமாரர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். மயிலம் ஸ்ரீமத் சிவன்யான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஞானஜோதி சரவணன் நோக்க உரையாற்றினார்.

    விழாவில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தேசிய விருதாளர்கள், தமிழ் பேராசிரியர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வாழ்த்து உரை வழங்கி மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் மகா சந்நிதானம் சிவஞான பாலய சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவினரான ஆதிகேசவன், முத்து, முருகசாமி, வேல்முருகன், வேணுகோபால், நெய்தல் நாடன், துரை.ராசமாணிக்கம், கோவிந்தராசு, ரமணன், பாலசுப்பிரமணியன், சீனு மோகன்தாஸ், திருநாவுக்கரசு, ஞான ஜோதி, வேல்கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது.

    மதுரை

    நாடு முழுவதும் கிராமப்புறங்களை மேம்படுத்த, 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், பின்தங்கிய கிராமங்களில் கல்வி நிறுவனங்கள் மூலம் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இதில் நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய, மக்கள் தொகை, 30 ஆயிரத்துக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட கிராமங்களை தேர்வு செய்து அக்கிராமத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

    இதன்படி திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு மத்திய அரசு நிதி உதவியுடன் நடந்தது. இதில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ் துறை தலைவர் முனியாண்டி கலந்துகொண்டு பயிற்சி பெற்றார். அவரை கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், சக பேராசிரியர்கள் ராமுத்தாய், ஜோதி, ஆறுமுக ஜோதி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • ராமநாதபுரத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது.
    • சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கமும், சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் வேல்முருகன், மேளாளர் கண்ணன், பொது மேலாளர் போஸ் உள்ளிட்டோரிடம் கூட்டுறவு சங்கங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், இணைப்பதிவாளர் மனோகரன் ஆகியோர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் சிறந்த நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடையத்தை அச்சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகன் மற்றும் செயலாளர் முகமது யூசுப் பெற்றுக்கொண்டனர்.

    • அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிட மிருந்து 434 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டிலான தேய்ப்பு பெட்டியும், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.15 ஆயிரத்து 30 மதிப்பீட்டில் பல்வேறு வகையான உபகரணங் களையும் கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் அரசு குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கான வானவில் கொண்டாட்ட போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட காரைக்குடி அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சிவகங்கை அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தங்கி படிக்கும் 4 மாண வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார்
    • போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    புதுச்சேரி:

    காரைக்காலில் சாலை யில் கிடந்த ரூபாய் 2000 பணத்தை பள்ளி சிறுமி உரியவரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா (வயது7) தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரம் 2000 ரூபாய் (4-500 நோட்டு கள்) கிடந்ததை கண்ணெடுத் துள்ளார். அச்சமயம் அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.

    பணத்தை தவறவிட்டவர் அங்கு தேடி கொண்டு வந்த போது, அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்து அவரது பணம் தான் என்பதை உறுதி செய்த பின்னர், அந்தப் பணத்தை கொண்டு வந்து கொடுத்த சிறுமியிடம் கொடுத்து பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் செலவுக்கு அதிக மாக பணம் உள்ள சூழ்நிலை யில், பணத்திற்கு ஆசைப் படாமல் அப்பணத்தை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறுமிக்கு விதைத்த பெற்றோர்க ளையும், சிறுமியையும் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    • பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் மற்றும் கட்டுமான அமைப்பு மாநில தலைவருமான வி.என். கண்ணன் மற்றும் அமைப்பாளர் எழில் சம்பத் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.1000 பென்சன் தொகை வழங்கப்பட்டு வந்தது.

    இந்த பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

    இந்நிலையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பென்சன் தொகையை ரூ.1000த்தில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தொழிலாளர்கள் நலனின் கருத்தில் கொண்டு பென்சன் தொகையை உயர்த்தி வழங்கிய இந்தியா போற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு விருதுநகர் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குருதி பரிமாற்று குழுமம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான தின நிகழ்ச்சி நடந்தது. இதில் 140 ரத்ததான முகாம் அமைப்பா ளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து, தமிழ்நாட்டில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

    சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம்.எனவே, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) யசோதாமணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மாவட்ட திட்ட மேலாளர் வேலய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர்.
    • திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாடும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சமூக நலன் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பின்னலாடை தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு, பின்னர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்க உறுப்பினர்கள் குழு தலைவர் சிவசுப்பிரமணியம், தொழிலாளர்கள் குழு தலைவர் லோகநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர். அப்போது அவர்களிடம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கி கூறினோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளிட்ட திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலைகள் குறித்தும் அவர்களிடம் தெரிவித்தோம். பசுமை சார் உற்பத்தியை கவுரவித்து, அங்கீகார சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அப்போது திருப்பூர் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பதாக சுவிட்சர்லாந்து குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர்.
    • கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கணபதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 150 பவுன் தங்க நகை ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி கொள்ளை போனது. சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கொ ள்ளையனை தேடி வந்தனர்.

    இதில் 2 ஆயிரம் சி.சி.டி.வி கேமிரா பதிவுகள், ஆயிரக்கணக்கான பழங்குற்றவாளிகள் நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்ற வாலிபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    அவரை பிடிக்க ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர். இறுதியில் கடந்த 1-ந் தேதி ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான கொள்ளையன் ஆனந்தகுமார் மீது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள லும் சேர்த்து 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்கும் குழுவில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோம சுந்தரம், சண்முகம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட க்ரைம் டீம் போலீ சார் இருந்தனர்.

    இவர்களுக்கு ஏற்கனவே ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி உள்ளிட்ட 14 பேரையும் கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    ×