search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boxing match"

    • பாராட்டி பதக்கங்களை வழங்கினார்
    • 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றனர்

    அரக்கோணம்:

    செங்கல்பட்டில் கடந்த 5-ந் தேதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. குத்துச்சண்டை போட்டிக்கு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அரக்கோணம் அம்பேத்கர் பாக்சிங் கிளப் மாணவ மாணவிகள் 15 பேர் குத்துச்சண்டை பயிற்சியாளர் பிரேம்குமார் தலைமையில் கலந்து கொண்டனர். அப்போது போட்டியில் மாணவ மாணவிகள் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

    வெற்றி பெற்று ஊர் திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு அரக்கோணம் 6வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே.எம்.பி.பாபு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்து அவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.

    • தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
    • பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.

    அதில் இசக்கி சந்துரு 53 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், பால் மணி 60 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும்,கோமதி சங்கர் 90 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், சுகுமார் 45 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், கிஷோர் கவிஷ் வெண்கல பதக்கமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களை பயிற்சியாளர் மாஸ்டர் கணேஷ் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
    • குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.

    திருப்பூர்:

    வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ வா்ஷினி (16). குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.

    திருப்பூா் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற திருப்பூா் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா். இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றாா். மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

    • சுதந்திர தினத்தையொட்டி நடக்கிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வாழப்பந்தல் சாலையில் உள்ள குத்து சண்டை பயிற்சி பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் சமீபத்தில் பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

    மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தன்று வாலாஜா மேல்நிலைப் பள்ளியில் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது.

    அதை முன்னிட்டு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் அப்துல் அக்கீம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜா, பயிற்சியாளர்கள் கிருஷ்ணன், ரகு, கலவை தாசில்தார் ஷமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்

    ×