search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road maintenance"

    • மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.

    இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.


    இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரபாளை யத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இப்பணியை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் நகரில் சாலைகளை சீரமைக்க கோரி கம்யூனிஸ்டு சார்பில் உச்சக்கட்ட போராட்டம் நடந்தது.
    • பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது.

    ராஜபாளையம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜபாளையம் நகர குழு கூட்டம் சுப்பிரம–ணியன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலா–ளர் அர்ஜூனன், நகரச் செயலா–ளர் மாரியப்பன் உள்ளிட்ட நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜபாளையத்தில் பிரதான சாலையான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, தாமரபரணி திட்டத் திற்காக தோண்டப்பட்ட சாலை மேற்படி பணிகள் நிறைவு பெற்றது என தடை–யில்லா சான்று வழங்கி ஓராண்டுக்குப் பின்பும் கூட இன்னும் சாலை சீரமைக்கப் படவில்லை.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட் டத்தை நடத்தியது. அன்றைய தினம் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை–யும் நடத்தியது.

    அதன் பின்பு அந்தச் சாலையில் தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் பார்ப்பது எனவும், வெகு விரைவில் தேசிய நெடுஞ்சாலைத்து–றையில் அனுமதி பெற்று நிதி பெற்று முழுமையாக சாலை அமைப்பது எனவும் அப்போது அரசு நிர்வாக தரப்பில் கூறப்பட்டு பேட்ச் ஒர்க் நடைபெற்றது.

    பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது. தற்போது கிடைத் துள்ள தகவல்படி கிருஷ் ணன் கோவில் முதல் அமிழ் ஓட்டல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் இந்தச் சாலை ஒப்படைக்கப்பட்டி ருப்பதாகவும், நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த பின்பு தான் சாலை அமைக்க முடியும் என கூறி வருகின்ற–னர்.

    கடந்த ஓராண்டு காலமாக ராஜபாளையம் மக்களும், இந்த வழியாகச் செல்லும் பயணிகளும் மிகப்பெரும் துன்ப துயரங்களை சந்திப்ப–தோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் நடை–பெற்று உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சா–லைத்துறை காலம் கடத்தா–மல் ராஜபாளையம் நகரின் பிரதான சாலையான தென் காசி சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் முதல் வாரம் கவன ஈர்ப்பு உச்சகட்ட போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறை–வேற்றி உள்ளது.

    மேலும் காந்தி கலை மன்றம் முதல் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரு–கிறது. குறிப்பாக சங்க–ரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலை–கள் தோண்டப்பட்டு இருப்ப–தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேற்படி சாலைகளையும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உட–னடியாக சரி செய்ய வேண்டுகிறோம்.

    நகராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே பீடர் சாலையில் மூன்று பிரதான பள்ளிகள் உள்ளது. தினசரி ஆயிரக்க–ணக்கான மாணவ, மாணவி–களும் பொதுமக்களும் பயணிக்க கூடிய இந்த சாலை மிக மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள் ளது. நகராட்சி நிர்வாகம் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ–னிஸ்ட் கட்சி ராஜபாளையம் நகர் குழு தீர்மானம் நிறை–வேற்றியுள்ளது.

    • மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
    • சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர்:

    ஊத்துக்குளி தாலுகா, மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து சிவசக்தி நகர், எம்.எஸ்.நகர், பொன்னியகவுண்டனூர், செம்பாவள்ளம், ஆர்.எஸ்.புதூர் வழியாக காங்கயம் சாலை வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த சாலை அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை மறுசீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் என்.பிரபு தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள கிராம பகுதிகளில் சேத மடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில், பல சாலைகள் சேத மடைந்துள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.விடம் பலமுறை எடுத்துகூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கிராம பகுதியில் சேதம டைந்துள்ள சாலை களை உடனே சீரமைக்க வலியுறுத்தி, காரைக்கால் விடுதலை சிறுத்தை கட்சியினர், 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திருநள்ளாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதனைத் தொடர்ந்து, வி.சி.க.வினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பாலமேடு அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் நடத்தினர்.
    • சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி-ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்த வழியாக குவாரி களுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் புழுதி பரவி காற்று மாசு ஏற்படுகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    ழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமான சாலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வாகனங்கள் செல்லும்போது வீடுகளுக்குள் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க தினமும் சாலையில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த புழுதி காரணமாக குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று 2-வது கட்டமாக போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

    கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி தெரியவந்ததும், பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • 2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது,
    • சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுவதாக தெரிகிறது,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை சுமார் 2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதோடு ஜல்லிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுந்து செல்வதாகக் கூறுகின்றனர். இவ்வழியாக கால்நடைகள் அதிக அளவில் சென்று வருவதால் அவைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை உள்ள சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
    • உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதில் தினமும் தூய்மை படுத்தும் பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரவீன் குமார், ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். திட்ட அலுவலர் ராஜாராமன் செயல் அறிக்கை வாசித்தார். இதில் டி.எஸ்.பி. விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சி யில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்த லைவர் சௌந்தர ராஜன், ஆலங்காடு பள்ளி தலைவர் கோபி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் உதவி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.

    • மேலூர் புலிப்பட்டி-வெள்ளிமலை சாலையை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.
    • னியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் யூனியனைச் சேர்ந்தது புலிப்பட்டி ஊராட்சி. இதனை அடுத்துள்ளது வெள்ளிமலைபட்டி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இங்கிருந்து வள்ளா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மற்றும் மேலூர் பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் ரோடு சிதிலமடைந்து ஜல்லி கற்களாக பெயர்ந்து கிடக்கிறது.

    வெள்ளிமலை பட்டிக்கு தினசரி மேலூரில் இருந்து அரசு டவுன் பஸ் 3 முறை இயக்கப்படுகிறது. தற்போது ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் பஸ்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    அதேபோல் இருசக்கர வாகனங்களை இயக்கவே முடியவில்லை. மேலும் அவசர சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

    மேலும் புலிப்பட்டி ஊராட்சியில் தெருக்களில் சாக்கடைகள் ரோடுகளில் ஆங்காங்கே செல்கின்றன. இதனால் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு அடிப்படை தேவைகளை உடனடியாக மேலூர் யூனியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்? ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    • விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை அய்யர்பங்க ளாவைச் சேர்ந்த கோவிந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறேன். மதுரை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளேன்.

    எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் ஆகும். மழையை நம்பித்தான் இந்த பகுதி விவசாயிகள் உள்ளனர். வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் கருவேல மரங்களால் ஆக்கிரமித்து ள்ளன. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் இந்த கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது.

    இங்குள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    இதே போல, பெரிய கோட்டையில் இருந்து முத்தனேந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கில் இருந்து சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது.

    இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இன்னும் சில மாதங்களில் வேளாங்குளம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.

    இங்குள்ள சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு வசதி செய்து தரும்படியும், கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எங்கள் மனுவின் அடிப்படையில் வேளா ங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சி.எம். ஆறுமுகம் ஆஜராகி, வேலாங்குளம் கிராமத்தினரின் வாழ்வா தாரம் விவசாயத்தை நம்பித்தான் உள்ளது. அதற்கு ஆதாரமாக உள்ள கண்மாய் வரத்து கால்வாய்களை தூர் வாருவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேளாங்குளம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை சாலை சீரமை க்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    பின்னர் நீதிபதிகள், சாலையை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கேள்வி எழுப்பினர்.

    பின்னர் இது தொடர்பாக மனுதாரர் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், சாலையை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பழைய குற்றாலம் - மத்தளம்பாறை சாலையை கடந்து செல்கிறது.
    • சாலை இப்போது மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் - மத்தளம்பாறை சாலை சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.

    இந்த சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. கடந்த காலங்களில் விசாலமாக இருந்த சாலையை இருபுறமும் உள்ள நில உரிமையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இன்றைக்கு சாலை மிகவும் குறுகலாக ஒரு வாகனம் மட்டுமே செல்லும் நிலையில் உள்ளது.

    இந்த சாலையில் ஆண்டு தோறும் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகிற முக்கியமான சாலையாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கிறது.

    மேலும் கடையம் - அம்பாசமுத்திரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தென்காசி நகருக்குள் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மத்தளம்பாறை, பழைய குற்றாலம், குற்றாலம் சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் அணிவகுத்து வருவதை காண முடிகிறது.

    இப்போது கடந்த சில மாதங்களாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு 16 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்கள் தென்காசி - நெல்லை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் இருந்து குண்டு கற்கள், ஜல்லிகற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு இந்த சாலை வழியாகவே கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள்.

    தூத்துக்குடி துறை முகத்தில் இறக்குமதியாகும் மரத்தடிகளை ஏற்றி வரும் கனரக லாரிகளில் இந்த சாலை வழியாகவே பிரானூர் பார்டர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்தி வரும் முக்கியமான சாலையாக இருந்து வரும் இந்த சாலை இப்போது மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் 50, 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் இந்த சாலையில் குற்றாலம் முதல் மத்தளம்பாறை வரை இருபுறமும் அதிக அளவில் நெருக்கமாக இருந்து வருகிறது.

    சாலை ஓரங்களில் இருந்து வரும் பழமையான மரங்களில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகி தொடர்ந்து உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பழமையான மரங்களின் கிளைகள் சாலை முழுவதும் படர்ந்து இருப்பதால் கனரக உயர்ந்த கண்டெய்னர் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு மரக் கிளைகளுக்கு பயந்து கண்டெய்னர் வாகன ஓட்டிகள் வாகனங்களை வேகமாக திருப்பும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    மரக்கிளைகள் எதிரில் வரும் வாகனங்களை மறைப்பதாலும் விபத்துகள் ஏற்படுகிறது. இந்தச் சாலையில் குற்றாலம் முதல் மத்தளம்பாறை வரை இரவு நேரங்களில் தெருவிளக்கு களும் இல்லை.

    மேலும் இந்தச் சாலையில் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வேகத்தடைகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு அந்த வேகத்த டையை அமைத்துக் கொடுக்க நெடுஞ்சாலைத்துறை இதுவரை முன்வரவில்லை.

    எனவே குற்றாலம் - புலியருவி - பழைய குற்றாலம் - மத்தளம்பாறை வரை உள்ள சாலையை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு பழமையான மரங்களை அப்புறப்படுத்தி விட்டு, சாலையை அகலப்படுத்தி, தரமான தார் சாலை அமைப்பதோடு, தேவையான இடங்களில் வேகத்தடையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பண்ருட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் சென்னை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி விரிவாக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக பஞ்சரான சாலையாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பண்ருட்டி எல் என் புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி முற்றிலுமாக நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் மோட்டார் சைக்கிலிள் செல்வோர் நடந்து செல்வோர் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    இது மட்டுமல்லாமல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் எல் என் புரம் பகுதியில் புழுதி புயலுடன் காற்று வீசும். இதனால் நடந்து செல்வோர் மோட்டார் சைக்கிலிள் செல்வோர்களின் கண்களை பட்டு நோய் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் குறிப்பாக இந்த சேதமான சாலையால் மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வாகன விபத்து ஏற்பட்டு பலர் இந்த சாலையில் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை திடீரென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,

    சேதமான சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் கலெக்டர் கூறிய அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். காலை 9:00 மணி முதல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. இதனால் போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி போக்குவரத்தை சரி செய்தனர். ஆனால் போலீசார் தொடர்ந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது.

    ×