search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலூர் புலிப்பட்டி-வெள்ளிமலை சாலையை சீரமைக்க கோரிக்கை
    X

    புலிப்பட்டி-வெள்ளிமலை சாலை மோசமாக இருப்பதை படத்தில் காணலாம். 

    மேலூர் புலிப்பட்டி-வெள்ளிமலை சாலையை சீரமைக்க கோரிக்கை

    • மேலூர் புலிப்பட்டி-வெள்ளிமலை சாலையை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.
    • னியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் யூனியனைச் சேர்ந்தது புலிப்பட்டி ஊராட்சி. இதனை அடுத்துள்ளது வெள்ளிமலைபட்டி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இங்கிருந்து வள்ளா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மற்றும் மேலூர் பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் ரோடு சிதிலமடைந்து ஜல்லி கற்களாக பெயர்ந்து கிடக்கிறது.

    வெள்ளிமலை பட்டிக்கு தினசரி மேலூரில் இருந்து அரசு டவுன் பஸ் 3 முறை இயக்கப்படுகிறது. தற்போது ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் பஸ்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    அதேபோல் இருசக்கர வாகனங்களை இயக்கவே முடியவில்லை. மேலும் அவசர சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

    மேலும் புலிப்பட்டி ஊராட்சியில் தெருக்களில் சாக்கடைகள் ரோடுகளில் ஆங்காங்கே செல்கின்றன. இதனால் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு அடிப்படை தேவைகளை உடனடியாக மேலூர் யூனியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×