search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகளை சீரமைக்க கோரி கம்யூ. உச்சக்கட்ட போராட்டம்
    X

    சாலைகளை சீரமைக்க கோரி கம்யூ. உச்சக்கட்ட போராட்டம்

    • ராஜபாளையம் நகரில் சாலைகளை சீரமைக்க கோரி கம்யூனிஸ்டு சார்பில் உச்சக்கட்ட போராட்டம் நடந்தது.
    • பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது.

    ராஜபாளையம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜபாளையம் நகர குழு கூட்டம் சுப்பிரம–ணியன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலா–ளர் அர்ஜூனன், நகரச் செயலா–ளர் மாரியப்பன் உள்ளிட்ட நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜபாளையத்தில் பிரதான சாலையான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, தாமரபரணி திட்டத் திற்காக தோண்டப்பட்ட சாலை மேற்படி பணிகள் நிறைவு பெற்றது என தடை–யில்லா சான்று வழங்கி ஓராண்டுக்குப் பின்பும் கூட இன்னும் சாலை சீரமைக்கப் படவில்லை.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட் டத்தை நடத்தியது. அன்றைய தினம் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை–யும் நடத்தியது.

    அதன் பின்பு அந்தச் சாலையில் தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் பார்ப்பது எனவும், வெகு விரைவில் தேசிய நெடுஞ்சாலைத்து–றையில் அனுமதி பெற்று நிதி பெற்று முழுமையாக சாலை அமைப்பது எனவும் அப்போது அரசு நிர்வாக தரப்பில் கூறப்பட்டு பேட்ச் ஒர்க் நடைபெற்றது.

    பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது. தற்போது கிடைத் துள்ள தகவல்படி கிருஷ் ணன் கோவில் முதல் அமிழ் ஓட்டல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் இந்தச் சாலை ஒப்படைக்கப்பட்டி ருப்பதாகவும், நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த பின்பு தான் சாலை அமைக்க முடியும் என கூறி வருகின்ற–னர்.

    கடந்த ஓராண்டு காலமாக ராஜபாளையம் மக்களும், இந்த வழியாகச் செல்லும் பயணிகளும் மிகப்பெரும் துன்ப துயரங்களை சந்திப்ப–தோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் நடை–பெற்று உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சா–லைத்துறை காலம் கடத்தா–மல் ராஜபாளையம் நகரின் பிரதான சாலையான தென் காசி சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் முதல் வாரம் கவன ஈர்ப்பு உச்சகட்ட போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறை–வேற்றி உள்ளது.

    மேலும் காந்தி கலை மன்றம் முதல் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரு–கிறது. குறிப்பாக சங்க–ரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலை–கள் தோண்டப்பட்டு இருப்ப–தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேற்படி சாலைகளையும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உட–னடியாக சரி செய்ய வேண்டுகிறோம்.

    நகராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே பீடர் சாலையில் மூன்று பிரதான பள்ளிகள் உள்ளது. தினசரி ஆயிரக்க–ணக்கான மாணவ, மாணவி–களும் பொதுமக்களும் பயணிக்க கூடிய இந்த சாலை மிக மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள் ளது. நகராட்சி நிர்வாகம் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ–னிஸ்ட் கட்சி ராஜபாளையம் நகர் குழு தீர்மானம் நிறை–வேற்றியுள்ளது.

    Next Story
    ×