என் மலர்

    நீங்கள் தேடியது "agitation"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதி விவசாயி கள், தாங்கள் அறுவடை செய்த நெல்லினை செஞ்சி ஒழுங்கு முறை விற்ப னைக் கூடத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வந்த னர். அப்போது இ.நாம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து நெல் வியாபாரி களுக்கு ஆதரவாக, எடை போடும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நெல் மூட்டைகள் தேங்கியது. இதையடுத்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இதனையறியாத விவசாயி கள் நெல் மூட்டைகளுடன் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வந்தனர். நெல் கொள்முதல் செய் யப்படாததை கண்டித்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்களை நடு ரோட்டில் விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து, விவ சாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை மேல்மலை யனூர் அருகேயுள்ள வளத்தி, அவலூர்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனையேற்ற விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அருகில் உள்ள மற்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சென்றனர். இந்நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்றும் நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை. இ-நாம் திட்டத் திற்கு எதிர்ப்பு தெரி வித்து 3-வது நாளாக இன்றும் எடைபோடும் தொழி லாளர்கள் பணிக்கு வர வில்லை. இவர்களுக்கு ஆதரவாக நெல் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மற்றும் நெல் வியாபாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.

    இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    தர்ணா போராட்டம்

    எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர்.
    • திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 1982-ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் 24 சென்ட் நிலம் வழங்கப் பட்டது. இதனை அந்த பகுதியில் பள்ளி நடத்தி வரும் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.

    இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பான வழக்கிலும் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது. 30 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி யும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அந்த நிலம் எங்களுக்கு கிடைக்கவில்லை

    இதனால் வீட்டுமனை இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே உடனடியாக இந்த நிலத்தை மீட்டு எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காத்திருப்பு போராட்டங்களை கடந்த 17 நாட்களாக நடத்தி வருகிறது.
    • விவசாயத்தை மேம்படுத்த துணை நிற்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு காலத்தே நிறைவேற்ற வேண்டும்.

    குறிப்பாக தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,000, கரும்பு டன்னுக்கு ரு.5,000 நிர்ணயம் செய்யவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தவும், உழவர்களின் நில உரிமையை உறுதி செய்யவும், வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கவும், அனைத்து உழவர்களுக்கும் தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கவும், ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், அப்பர் அமராவதி அணை திட்டத்தை செயல்படுத்தவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்கு முன்வைத்து, நிறைவேற்றக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் காத்திருப்பு போராட்டங்களை கடந்த 17 நாட்களாக நடத்தி வருகிறது.

    எனவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் காலத்தே நிறைவேற்றி விவசாயத்தை மேம்படுத்த துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜபாளையம் நகரில் சாலைகளை சீரமைக்க கோரி கம்யூனிஸ்டு சார்பில் உச்சக்கட்ட போராட்டம் நடந்தது.
    • பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது.

    ராஜபாளையம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜபாளையம் நகர குழு கூட்டம் சுப்பிரம–ணியன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலா–ளர் அர்ஜூனன், நகரச் செயலா–ளர் மாரியப்பன் உள்ளிட்ட நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜபாளையத்தில் பிரதான சாலையான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, தாமரபரணி திட்டத் திற்காக தோண்டப்பட்ட சாலை மேற்படி பணிகள் நிறைவு பெற்றது என தடை–யில்லா சான்று வழங்கி ஓராண்டுக்குப் பின்பும் கூட இன்னும் சாலை சீரமைக்கப் படவில்லை.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட் டத்தை நடத்தியது. அன்றைய தினம் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை–யும் நடத்தியது.

    அதன் பின்பு அந்தச் சாலையில் தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் பார்ப்பது எனவும், வெகு விரைவில் தேசிய நெடுஞ்சாலைத்து–றையில் அனுமதி பெற்று நிதி பெற்று முழுமையாக சாலை அமைப்பது எனவும் அப்போது அரசு நிர்வாக தரப்பில் கூறப்பட்டு பேட்ச் ஒர்க் நடைபெற்றது.

    பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது. தற்போது கிடைத் துள்ள தகவல்படி கிருஷ் ணன் கோவில் முதல் அமிழ் ஓட்டல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் இந்தச் சாலை ஒப்படைக்கப்பட்டி ருப்பதாகவும், நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த பின்பு தான் சாலை அமைக்க முடியும் என கூறி வருகின்ற–னர்.

    கடந்த ஓராண்டு காலமாக ராஜபாளையம் மக்களும், இந்த வழியாகச் செல்லும் பயணிகளும் மிகப்பெரும் துன்ப துயரங்களை சந்திப்ப–தோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் நடை–பெற்று உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சா–லைத்துறை காலம் கடத்தா–மல் ராஜபாளையம் நகரின் பிரதான சாலையான தென் காசி சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் முதல் வாரம் கவன ஈர்ப்பு உச்சகட்ட போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறை–வேற்றி உள்ளது.

    மேலும் காந்தி கலை மன்றம் முதல் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரு–கிறது. குறிப்பாக சங்க–ரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலை–கள் தோண்டப்பட்டு இருப்ப–தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேற்படி சாலைகளையும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உட–னடியாக சரி செய்ய வேண்டுகிறோம்.

    நகராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே பீடர் சாலையில் மூன்று பிரதான பள்ளிகள் உள்ளது. தினசரி ஆயிரக்க–ணக்கான மாணவ, மாணவி–களும் பொதுமக்களும் பயணிக்க கூடிய இந்த சாலை மிக மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள் ளது. நகராட்சி நிர்வாகம் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ–னிஸ்ட் கட்சி ராஜபாளையம் நகர் குழு தீர்மானம் நிறை–வேற்றியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.

    நீலாம்பூர்:

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை விவசாயத்தை காக்க வலியுறுத்தியும், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர், செஞ்சேரி மலை பச்சாபாளையத்திலும் விவசாயிகள், தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

    விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

    ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாள் போராட்டத்தின் போது, விவசாயிகள், கோவை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் வேலு மந்திராச்சலம் தலைமையில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி காய்ச்சி அதனைக் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று 9-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடிப்படை வசதி இல்லாததால் ரேசன் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர்.
    • ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள காணிக் கூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்றும் வாங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ரேசன் பொருட்களை கொடுக்கா மல் கைரேகையை மட்டும் வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் போட வேண்டிய ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் பொதுமக்கள் தங்கள் ரேசன் அட்டைகளை சாலை யில் வீசி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஒச்சத்தேவன் கோட்டை கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்கு நிறுத்தப்பட்ட ரேசன் பொருட்களை மீண்டும் விநியோகம் செய்ய வேண்டும். எங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கா மல் காலம் தாழ்த்திய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்காத பட்சத்தில் ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் பலவேசம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து பகுதிகளிலும் ஆண்கள் பெண்களுக்கு தனி தனியாக சுகாதார வளாகங்கள் அமைத்து, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகத்தால் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.

    உங்களுடைய பிரச்சினைகள் அவரிடம் எடுத்துரைக்கப்படும்.

    முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களதுமகள் சொர்ணவள்ளிக்கு பட்டினம்காத்தான் பகுதியில் 1.37 ஏக்கர் சொந்த நிலம் இருந்தது. அதனை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997ம் ஆண்டு 1 செண்ட் ரூ.5 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியது.

    ஆனால் அதற்கு ரிய பணத்தை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சொர்ணவள்ளி, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட சொர்ணவள்ளி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் சொர்ணவள்ளிக்கு தர வேண்டிய அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.39 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன் பின்னரும் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த ராமநாதபுரம் சப்-கோர்ட் நீதிபதி கதிரவன், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து ராமநாதபுரம் சப்-கோர்ட் ஆமினா ராமநாதபுரம் பெரிய கடை வீதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print