search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
    X

    தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

    • தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார்.
    • தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார். மாவட்ட இணை செய லாளர் அண்ணாமலை, மாவட்ட துணை செய லாளர் பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வர வேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கிருஷ்ண சாமி, மாநில செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியம் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 10- ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினர். அப்போது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகி கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள், தூய்மை பணியா ளர்கள், தூய்மை காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×