search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரை சர்க்கரை ஆலை விவசாயிகள் 8-ந்தேதி சந்தித்து பேச ஏற்பாடு-அமைச்சர் தகவல்
    X

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

    முதல்-அமைச்சரை சர்க்கரை ஆலை விவசாயிகள் 8-ந்தேதி சந்தித்து பேச ஏற்பாடு-அமைச்சர் தகவல்

    • சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகத்தால் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.

    உங்களுடைய பிரச்சினைகள் அவரிடம் எடுத்துரைக்கப்படும்.

    முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×