என் மலர்
நீங்கள் தேடியது "சர்க்கரை ஆலை"
- வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் காஞ்சிபுரம் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சர்க்கரை ஆலையின் வங்கி கணக்குகள் மற்றும் ஆலையின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதும் அதில் சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகுதான் சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2019-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சசிகலா வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர். ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியது தொடர்பாக உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- 2021-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ 297 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க. கடந்த மாதத்தில் எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைச் சார்ந்த 5,920 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி கரும்பு கிரயத் தொகை வழங்கப்பட்டது. மேலும், கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, 2021-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முன்எப்போதும் இல்லாத அளவிற்கு. 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 16 தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது, கரும்பிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/- வழங்கிடும் வகையில், ரூ.297/-கோடி நிதியினை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, 2024-25 அரவைப் பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16/-கோடி வழங்கப்பட்டுள்ளது.
2024-25 அரவைப்பருவத்திற்கு கரும்பு வழங்கிய சுமார் 1,30,000 விவசாயிகளுடன் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1.145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், வரலாற்றில் முதன்முறையாக சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரய நிலுவைத் தொகை வழங்க சுமார் 1,945.25/- கோடி வழங்கப்பட்டுள்ளது.
- பெரம்பலூர் சர்க்கரை ஆலையில்
- கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர்களுடனான கூட்டம் நடந்தது. இதற்கு ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்தை டிசம்பர் 5-ந் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
130 நாட்கள் அரைப்பது எனவும், 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பை அரைப்பது என்றும், 9.75 சதவீதம் சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பூஞ்சாண நோயால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் டன் வரை கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட பதிவு செய்யப்படாத கரும்பையும் அரவைக்கு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற 21-ந்தேதி ஆலையில் கரும்பு அரவைக்கான சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கு வெட்டும் கரும்புக்கு கொடுக்கும் வெட்டுக்கூலியாக முன்பணம் தொகை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இணைமின் திட்டத்திற்கு பிடித்தம் செய்த பங்கு தொகைக்கான பங்கு பத்திரத்தை வழங்காததால், வரும் பேரவை கூட்டத்திற்குள் பங்குத்தொகையையும் அதற்கான வட்டியையும் வழங்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தால் கரும்பு ஏற்றும் டிராக்டர்களுக்கு டீசல் போடுவதற்கு தொகையை உயர்த்தி தரவேண்டும். வருவாய் பங்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆலையின் முகப்பில் இருந்து எடை மேடை வரை உள்ள மோசமான சாலையை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். கூடுதல் எடை மேடை அமைக்க வேண்டும்.
சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். இந்த ஆண்டுக்கு 450 டிராக்டர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆலை அரவை கடைசி நேரத்தில் கரும்புகள் தேக்கமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கான தொகையை தாமதமடைவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
- பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது
- அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவையை தொடங்குவதற்கு எந்திரங்களை தயார்படுத்துவதற்கான இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி ஆலையின் தலைமை நிர்வாகி தலைமையில் நடைபெற்றது. நடப்பு பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3,60,000 டன் கரும்பை பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரைப்பதற்கு திடடமிடப்பட்டுள்ளது. கரும்பு அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. அரைவைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஆலையில் பழுதடைந்த இணை மின் உற்பத்தி நிலையத்தின் ரோட்டார் எந்திரம் உள்ளிட்ட சில எந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு, சில எந்திரங்கள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன.
- தடையை மீறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் நுழைய முயன்றனர்.
- போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு நுழைய முயன்றனர். இதனை அடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் சில விவசாயிகள் நுழைய முயன்ற போது அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
தொடர்ந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
- பேரணாம்பாட்டு, மேல்பட்டி பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்
- குடியாத்தத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
குடியாத்தம்:
குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட குடியாத்தம், கே.வி. குப்பம், பேர்ணாம்பட்டு தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் எம்.வெங்க டராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வருவாய்த்துறை மின்வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைதுறை, நீர்வளத்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, உழவர் சந்தை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.
விவசாயிகள் பேசுகையில்:-
பேர்ணாம்பட்டு, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கரும்புகளை திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும், பேர்ணாம்பட்டு பகுதியில் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது யானைகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை விவசாயிகள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் இதுவரை வழக்கு ரத்து செய்யப்படவில்லை வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு புகுவது தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை தொடர்ந்து இதே போல் இருந்தால் விரைவில் முதல்வர் அலுவலகம் முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.கவுரப்பேட்டை ஏரிக்கரையை உயர்த்த வேண்டும் தண்ணீர் செல்லும் பகுதியே உடைப்பு ஏற்படுத்தி விட்டனர் இதனால் தண்ணீர் நிற்பதில்லை அதை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்
மேல்ஆலத்தூர் ெரயில்வே பாலத்தின் கீழ் அடிக்கடி தண்ணீர் தேங்கி பள்ளங்களாக உள்ளன உடனடியாக சீர் செய்ய வேண்டும் கூட நகரம் ரயில்வே மேம்பால பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்த குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இக்கூட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- ஆலையில் எந்திரம் பழுது என்று லாரி வரவில்லை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜார்ஜ். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரும்பு நடவு செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கரும்புகளை வெட்டி திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிவந்தார். இந்நிலையில் வெட்டிவைத்த கரும்புகளை ஏற்றுவதற்கு கடந்த 4 நாட்களாக வண்டி வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி பீல்டுமேனிடம் கேட்டபோது, ஆலை ரிப்பேரில் உள்ளது. சரியானதும் ஏற்றிக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த விவசாயி கூறியதாவது:-
ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து தண்ணீர் இரைத்து மருந்து வைத்து காப்பாற்றி வெட்டும்போது ஒரு டன் கூலியாக ரூ.900மும், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ.400ம் செலவாகிறது.
இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே வரு கிறது. இதைவைத்துக்கொண்டு ஒன்று செய்யமுடியவில்லை என்றாலும் நெல் பயிர் வைத்தால் கைக்கு எட்டும்போது இயற்கை சீற்றங்களால் அழிந்துபோகிறது என்பதால் கரும்பை நடவு செய்தேன். ஆனால் 4 நாட்களாக ஆலை ரிப்பேர் என்று லாரியை அனுப்பவில்லை.
இதனால் வெட்டி வைத்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது. மேலும் ஆலை ரிப்பேர் என்றால் பீல்டுமேன்கள் கரும்பு வெட்டுவதை நிறுத்த சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் நடந்துவருகின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது.
தமிழக அரசின் சார்பில் விவசாயத்திற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது.
இந்த பிரச்சனையை நாங்கள் எங்கேபோய் சொல்வது? ஒரு விவசாயியின் கரும்பு 4 நாட்களாக தோட்டத்திலும், ரோடு ஓரத்திலும் கேட்பாரற்று கிடந்தால் இதற்கு காவல் காப்பது யார்? இங்கு எனது கரும்பு மட்டுமல்லாமல் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் விவசாயிகளின் கரும்பின் நிலையும் இதே நிலைதான் உள்ளது.
இதனால் கரும்பு பயிர் செய்வதை விட்டுவிடலாம் என்ற மனவேதனையுடன் கூறினார்.
- சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
- விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம் புகளூரில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது
இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் பாகு காய்ச்சி அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குழாய்கள் மூலம் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது தற்போது பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இன்று மீண்டும் சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
ஒரு வாரமாக தேங்கியிருந்த கழிவுகளில் இருந்து திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்களும் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடப்பாண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து அரவைக்கு 2,184 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு நடப்பா ண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவை துவக்கு வதற்காக, ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் பணி கடந்த 10ந் தேதி துவக்கப்ப ட்டு நேற்று முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமராவதி சர்க்கரை ஆலையிலுள்ள பழமையான எந்திரங்களை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் மாநில அரசு நிதி ஒது க்கவில்லை. நடப்பாண்டு, 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது. குறிப்பாக ஆலை அரவைக்கு, வாகனங்களி லிருந்து கரும்பு எடுத்து கன்வேயருக்கு வழங்கும் ரோப் வகை நவீன எந்திரங்கள் நிறுவும் பணி ரூ.2 கோடி மதிப்பில் துவங்கியது. நிதி வழங்குவதில் தாமதம் காரணமாக பணி முடியவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்த தேதியில் அரவை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. குறிப்பி ட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் எடை இழப்பு ஏற்படும். கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி அரவை துவக்கி யும், எந்திரங்கள் பழுது, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்க ளினால் மகசூல், சர்க்கரை கட்டுமானம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டும், அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக கரும்பு அரவை துவங்காமல் கரும்பு காய்ந்து நஷ்டமடைந்து வருகிறோம் என்றனர்.
இது குறித்து சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் சண்முகநாதன் கூறுகையில், எந்திரம் பொருத்தும் பணி வரும் 24-ல் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். வரும் மே 1-ந் தேதிக்குள் அரவை துவங்கும் என்றார்.
- சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகத்தால் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.
உங்களுடைய பிரச்சினைகள் அவரிடம் எடுத்துரைக்கப்படும்.
முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது.
- சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
உடுமலை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருணசாமி உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கரும்பு அரவை மற்றும் உற்பத்தி குறித்தும் ஆலையின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்
பின்பு செய்தியாளர்களிடம் கூறும் போது,
தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர் . ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு உள்ளனர் சர்க்கரை அலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- நடைபயணத்தில் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
சோழவந்தான்
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொண்டு வரு கிறார். நேற்று மாலை மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கினார். சோழவந்தானில் எம். வி. எம். மருது மஹால் அருகே பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா, மாநில நிர்வாகி மகாலட்சுமி, கவுன்சிலர் வள்ளிமயில் சிவகாமி, தொழிலாளர் அணி ராஜா ராம் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். நடை பய ணத்தின் போது அண்ணா மலை பேசியதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொருள் சிறப்பு. அந்த வகையில் சேலத்தை பொருத்தவரை மாம்பழம், மதுரையை பொருத்தவரை மல்லி, காஞ்சியைப் பொறுத்தவரை பட்டு. அதன்படி சோழ வந்தான் ஊருக்கு சிறப்பு வெற்றிலையாகும்.
அந்த வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்தவர் பிரதமர் மோடி.உலகம் முழுவதுமே நீங்கள் வெற்றிலையை ஏற்றுமதி செய்ய இந்த புவிசார் குறியீடு பயன் படும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி முழுவதுமாக நீக்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாங்க ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் மட்டுமே 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள்? என தெரிய வில்லை. அலங்கா நல்லூர் சர்க்கரை ஆலை கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இன்னும் திறக்கவில்லை. தி.மு.க. அரசு அதனை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் சார்ந்துள்ள பத்திர பதிவு துறையில் ஊழல் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
நடைபயணத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ சிம்மன், மாநில ஊடகத்துறை தலைவர் ரங்காஜி, ஓ.பி.சி. அணிமுன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முரளி ராமசாமி, மாவட்ட ஊடகத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பொரு ளாளர் முத்துராமன், வாடிப்பட்டி கண்ணன், சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






