search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி தொடக்கம்
    X

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி தொடக்கம்

    • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது
    • அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவையை தொடங்குவதற்கு எந்திரங்களை தயார்படுத்துவதற்கான இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி ஆலையின் தலைமை நிர்வாகி தலைமையில் நடைபெற்றது. நடப்பு பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3,60,000 டன் கரும்பை பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரைப்பதற்கு திடடமிடப்பட்டுள்ளது. கரும்பு அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. அரைவைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஆலையில் பழுதடைந்த இணை மின் உற்பத்தி நிலையத்தின் ரோட்டார் எந்திரம் உள்ளிட்ட சில எந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு, சில எந்திரங்கள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன.

    Next Story
    ×