search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sasikala"

    • ரங்கநாயகர் மண்டபத்தில் சசிகலாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    • புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

    திருப்பதி:

    சசிகலா நேற்று இரவு திருப்பதி வந்தார். அங்குள்ள வராஹ சாமியை வழிபட்டார். தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன் பின் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் ஏழுமலையான் கோவில் எதிரில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.

    புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

    • சசிகலா புதிய வீட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.
    • அங்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது.

    இந்நிலையில், நேற்று அந்த வீட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சசிகலா கொண்டாடினார். கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியாததால் நேற்று சசிகலா வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், புதிய வீடு கோவில் மாதிரி உள்ளது. இந்த வீடு அவருக்கு பெயர், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

    • பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன.
    • நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம்.

    தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் நிறைவுற்ற நிலையில், பொருட்களை ஏலம் விடுமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது.

    அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகளை மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதன்படி பெங்களூருவில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் மொத்தமாக 6 பெட்டகங்களில் தமிழகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தற்போது தமிழகம் வரவிருக்கும் ஜெயலலிதா நகைகளின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும். இந்த வழக்கில், வழக்கு கட்டணமாக ரூ. 5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சசிகலாவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன்.
    • பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கியபோது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் எவர் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம் என்று விதியை உருவாக்கி இருந்தார்.

    பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற அந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று மாற்றினார்.

    அப்படி என்றால் பணம் படைத்தவர்களால் மட்டும் தான் பொது செயலாளராக முடியும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். அதற்காக தான் இந்த உரிமை மீட்பு கூட்டமும் நடைபெறுகிறது.

    அண்ணா நினைவு நாளன்று சசிகலாவை சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசவில்லை.

    பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார். அவரை 3-வது முறையும் பிரதமராக்க வேண்டும் என்று அந்த கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க.வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அதை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.
    • தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது.

    சென்னை:

    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் மரியாதை செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்

    செல்வம், சசிகலா ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு காரில் திரும்பியபோது எதிரே சசிகலா காரில் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ஓ.பி.எஸ். காரை நிறுத்திவிட்டு இறங்கினார். பின்னர் சசிகலாவின் காரை நோக்கி அவர் நடந்து சென்றார். இதனை பார்த்ததும் சசிகலாவும் தனது காரில் இருந்து இறங்கினார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இதன் பின்னர் அண்ணா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களிடம்

    கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான்ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். அதற்கான காலம் வரும் பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.

    மத்திய மந்திரியாக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் புரட்சித்தலைவரை பற்றி தவறாக விமர்சித்துள்ளார். அவருக்கு பல வரலாறுகள் தெரியாது. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கருணாநிதியும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்கள். அப்போது நிறைய கடன் வாங்கி கஷ்டத்தில் இருப்பதாகவும் தங்களுக்காக எங்களது நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படம் நடித்து தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    அதனை ஏற்று எம்.ஜி.ஆர். நடித்து கொடுத்த படம்தான் எங்கள் தங்கம். அந்த படத்தில் புரட்சி தலைவிதான் கதாநாயகியாக நடித்து இருந்தார். படத்தின் வெற்றி விழாவில் பேசிய முரசொலிமாறன், எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்ததால் தான் கடனை எல்லாம் அடைத்து கோபாலபுரம் வீட்டையும் அடமானத்தில் இருந்து மீட்டு விட்டோம் என்று பேசினார். இந்த வரலாறு கூட தெரியாமலேயே அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சசிகலாவிடம் ஓ.பி.எஸ்.சுடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்கள், இருவரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த சசிகலா, ஓ.பி.எஸ். கட்சிக்காரர் மட்டுமல்ல எனது குடும்பத்திலும் ஒருவர். அ.தி.மு.க.வினர் ஒற்றுமையோடு இருந்து தீய சக்தி என்று அம்மா குறிப்பிட்ட தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கும் வீழ்த்துவதற்கும் என்னென்ன வழிமுறைகளை யெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வேன் என்றார்.

    • இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்.
    • தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பா.ஜ.க.வினரிடம் தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் கூறமுடியாது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம், அதன் பின் சொல்கிறேன்.

    கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும். ஓ.பி.எஸ்.சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பயணிக்கிறோம். அது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. கவர்னரின் செயல்பாடு என்பது அந்த பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது, அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.


    அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. இணைப்பு குறித்து அவர் எதன் அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்கள் நிர்வாகிகளும், எனது நண்பர்களும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    கூட்டணி என்பது உறுதியான பிறகு தான் நாங்கள் சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்

    தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.


    ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிக விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தனர், கட்டப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராமர் கோவில் விவகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.

    எந்த கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்து விடும். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார்.
    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் சசிகலா. அவரது மரணத்துக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறை தண்டனை முடிந்து அவர் வெளியில் வருவதற்குள் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்களால் அந்த கட்சிக்குள் சசிகலாவால் அதிகாரம் செலுத்த முடியாமல் போய் விட்டது. இருப்பினும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிகலா அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    தனது ஆதரவாளர்களை அடிக்கடி சந்தித்து பேசி வரும் சசிகலா சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை ஒன்றிணைப்பேன் என்று கூறி வரும் சசிகலா தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார். வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சில நாட்கள் முடக்கி வைத்திருந்தனர். கோர்ட்டு நடவடிக்கைகள் முடிவடைந்து சிக்கல்கள் தீர்ந்து உள்ள நிலையில் சசிகலா நேற்று புதிய வீட்டில் பால் காய்ச்சினார். அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை. நேற்று காலையில் கிரகபிரவேசம் முடிவடைந்துள்ள நிலையில் சசிகலா இனி போயஸ்கார்டனில் உள்ள புதிய வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2 மாடிகளை கொண்ட வீட்டில் மாடியின் ஒரு பகுதியில் 500 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை வீட்டிலேயே கூட்டி ஆலோசித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலேயே சசிகலா தனது வீட்டில் அரசியல் கூட்ட அரங்கை கட்டி உள்ளார்.

    இதனால் சசிகலாவின் அரசியல் பணிகள் போயஸ் கார்டனில் இருந்து இனி வேகமெடுக்கும் என்றே சசிகலா ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.
    • சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

    இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிதாக வீடு ஒன்றை கட்டி இன்று அதிகாலை கிரகபிரவேசம் செய்துள்ளார்.


    சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    • கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
    • ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    கோத்தகிரி:

    தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.

    இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

    அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.

    கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.

    இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.

    3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.

    • ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார்.
    • அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று சசிகலா சென்றிருந்தார். அங்கு, பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க பூமி பூஜையில் பங்கேற்றார்.

    சசிகலா, கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கியிருந்தனர்.

    2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா இங்கு வராமலேயே இருந்தார். இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா இன்று கொடநாடு சென்றார்.

    அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-

    கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்தேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை!

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.

    கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்.

    அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்!

    அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்தனர்.
    • 2017-ம் ஆண்டு இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா அங்கு செல்லாமலேயே இருந்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக சசிகலா இன்று மாலை கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்கிறார்.

    எஸ்டேட் பங்களா முன்பு ஜெயலலிதாவின் சிலையை வைக்க நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்க உள்ளார். ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி சசிகலா திறந்து வைக்க உள்ளார்.

    கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்தனர். 2017-ம் ஆண்டு இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா அங்கு செல்லாமலேயே இருந்தார்.

    7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு இன்று மாலை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக்கடனுடன் இருப்பேன்.
    • பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.

    ல்லடம்:

    பல்லடம் அருகே திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கொங்கு மண்டல அதிமுக கோட்டையை மீட்கவே இந்த கூட்டம். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்காக உருவாக்கினார். தொண்டர்களின் உரிமையை காக்கும் இயக்குமாக இருக்க வேண்டும் என்று, பல்வேறு சட்ட விதிகளை அவருடைய காலத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தினார். மிட்டா, மிராசுதாரர்கள் தான் பதவிக்கு வர முடியும். இனி தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் தான் அந்த பதவிக்கு வரமுடியும். ஜெயலலிதா 2 முறையும், சசிகலா 1 முறையும் என்னை முதலமைச்சர் ஆக்கினார்கள். சசிகலா பாவம். இன்றைக்கு சின்ன குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துகொண்டிருக்கிறார். ராஜமாதாவாக இருக்க வேண்டிய சசிகலா, இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நம்பிக்கை துரோகி யார்? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக்கடனுடன் இருப்பேன். ஒன்றரை கோடி தொண்டர்களை, இரண்டரை கோடி தொண்டர்களாக மாற்றுவோம்.



    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    பழனிசாமி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால், அவர்களுக்கும் எந்த பயனும் கிடையாது. மக்களுக்கும் பயன் கிடையாது. 10 ஆண்டு காலம் இந்தியாவை வலிமையாக மாற்றியுள்ள பிரதமர் மோடிக்கு ஆதரவு தருவது தான் எங்கள் நிலைப்பாடு. கழகத்தின் சட்ட விதிகள் காற்றில் பறந்துள்ளன. ஜன.19-ம் தேதி வரும் நீதிமன்றத்தீர்ப்பு, முக்கியமானதாக இருக்கும். அதன் மூலம் பழனிசாமிக்கு ஒரு முடிவு வரும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் முக்கியமானதாக கருதுகிறோம். நானும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×