என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சசிகலாவை சந்தித்தேனா?- செங்கோட்டையன் விளக்கம்
- திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அ.தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கே.ஏ. செங்கோட்டையன் 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போவதாக கூறியுள்ளாரே? என கேள்வி கேட்டபோது, செங்கோட்டையன் 5-ந்தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறுவார் என பார்ப்போம் என தெரிவித்து விட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து திருமண விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் நிருபர்கள், நீங்கள் சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் 5-ந்தேதி பதில் கூறுகிறேன் என தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜய குமாரும், செங்கோட்டையனுடன் முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் அரைமணி நேர இடைவெளியில் ஒருவரை ஒருவர் சந்திக்காத வண்ணம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றனர்.






