என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சசிகலாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன்?
    X

    சசிகலாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன்?

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி சசிகலாவை சந்தித்துள்ளார்.
    • செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

    இதனால் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும்பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க.வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி அவரை சந்தித்துள்ளார். செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியுள்ள செங்கோட்டையன், சந்திப்பின்போது அணிகள் இணைப்பு பற்றியே பேச வாய்ப்பு உள்ளது.

    சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.விற்குள் கொண்டுவர செங்கோட்டையன் காய் நகர்த்துவதாகவும், சசிகலாவுடனான செங்கோட்டையனின் நெருக்கமே இ.பி.எஸ். கோபத்திற்கு காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

    சசிகலா - செங்கோட்டையன் சந்திப்பை அறிந்தே இ.பி.எஸ். புறக்கணித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×