என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTV Dhinakaran"

    • தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.
    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.

    மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள்.

    * தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.

    * முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.

    * தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம்.
    • திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
    • அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய், திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது, அவரது தனிப்பட்ட விமர்சனம். இருந்தாலும் அவர் தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. மகளிர் உரிமை தொகை ரூ.5 ஆயிரம் அல்ல, ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும், அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். தி.மு.க. அரசு முடிவுக்கு வந்துவிடும்.

    கூலிப்படை தான் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் நடக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் உண்மையில் தி.மு.க. கூட்டணியில் இருக்க போகிறார்களா, இல்லையா என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது. அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில் போட்டியிடும், அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கட்டிஷனில் இல்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் தோற்கடிக்க சபரீசன் திட்டமா என்ற கேள்விக்கு, சபரீசன் அல்ல மாரீஸ்ஸன் வந்தாலும் கவலை இல்லை, தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் அனுமதி தந்ததில்லை, இந்த தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம் என்றார். 

    • பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது.
    • சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் விஜய் கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். விஜய்யின் வருகை தி.மு.க. கூட்டணிக்கு மிகப் பெரிய பாதிப்பாகவும், அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.

    தமிழகம் தற்போது போதை வஸ்துக்களின் சர்வதே சந்தையாகவும், சர்வதேச துறைமுகமாகவும் மாறி விட்டது. பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டதால், அது தி.மு.க.விற்கு சாதகமாக போனது. இம்முறை அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அ.ம.மு.க. இணைந்துள்ளதால் அந்த வாய்ப்பு தி.மு.க.விற்கு கிடைக்காது

    எனவே வரும் தமிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.

    திடீர் சாம்பார், துரித உணவுகளை போல, சில கட்சிகள் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக மாற்று கட்சியில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வேட்பாளர்களை தேடி வருகின்றனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கொள்கை கூட்டணி என்கிறார்கள். கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு தனித்தனி கட்சி தேவை இல்லை. காங்கிரசை எதிர்த்து தான் தி.மு.க. உருவாக்கப்பட்டது. அதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரசும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லை என்றார்.

    • எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
    • ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

    இது தொடர்பாகவும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்க போகிறீர்களா? என்பது பற்றி நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.

    இதனிடையே அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

    • விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது.

    சென்னை:

    அண்ணா நினைவிடத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொண்டு அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார்.

    இது பற்றி அவரது கட்சியில் சேர்ந்து உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 1988-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுபட்ட போது 1989-ம் ஆண்டு தேர்தலில் எங்கள் வாக்குகள் ஜெயலலிதா அணிக்கும் ஜானகி அணிக்கும் தான் சென்றது.

    இப்போதும் அ.தி.மு.க. வாக்குகள் என்றும் எங்களுக்குதான் கிடைக்கும். விஜய் நினைப்பதை போல அவருக்கு கிடைக்காது. விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதே நேரத்தில் அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கப்போவது இல்லை.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எனது அருமை அண்ணன்தான். எடப்பாடி பழனிசாமி எப்படி எனக்கு அருமை அண்ணனோ அதே போன்று தான் ஓ.பன்னீர் செல்வமும். செங்கோட்டையன் கூட எனக்கு அருமை அண்ணன் தான்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது. தமிழகம் கஞ்சா சந்தையாக விளங்கி வருகிறது. போதை பொருள் புழக்கம் பட்டி தொட்டி எங்கும் இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    வருகிற தேர்தலில் உறுதியாக தி.மு.க. ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க.வினர் எண்ணுகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா? என்பதே தெளிவாக தெரியவில்லை. ஆனால் தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    எங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்தவே அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் முழு மனதுடன் இணைந்துள்ளோம்.

    விஜய் தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான்.

    தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எங்களுக்கும் சொல்லி கொடுத்த பாடம். அதை தான் நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.

    இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.

    • பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம்.

    பெரியகுளம்:

    2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ள நிலையில் மேலும் சிலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வந்த நிலையிலும் ஓ.பி.எஸ். மவுனமாகவே இருந்து வருகிறார்.

    இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாளாக ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பலர் தமிழகம் முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொண்டனர்.

    ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இணைந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்றும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்து வருவதால் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதப்படுத்தி வந்தார். அ.ம.மு.க. அணியில் குக்கர் சின்னத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட்டு வழங்கப்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம், போடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு இதுவரை தோல்வியே காணாத தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    எனவே வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது தமிழக வெற்றிக்கழகம் ஆகிய அணிகளில் ஓ.பி.எஸ். இணைவார் என்று பரவலாக கருத்துகள் வெளியாகின. இன்று பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது நிர்வாகிகள் அனைவரும் நாம் அடுத்து எந்த அணியில் இடம்பெற வேண்டும்? எவ்வாறு தேர்தலில் பங்காற்ற வேண்டும்? என்ற கருத்தை துண்டுச்சீட்டில் எழுதி தருமாறும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அளிக்கும் ஆலோசனைகளின் முடிவை வைத்து தான் முடிவு எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வதாகவும், துண்டுச்சீட்டு மூலம் கருத்தை வைத்து முடிவு எடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

    அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ராமநாதபுரம் தொகுதியில் நான் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க மட்டுமே.

    ஆனால் அங்கும் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டனர். தற்போது வரை அ.தி.மு.க. வலிமையாகவே உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும். இதைத்தான் நான் இன்றும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில யூடியூப் சேனல்களில் நான் வெவ்வேறு அணியில் இணையப்போவதாக அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

    தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம். மீண்டும் நான் இணைய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரது நல்லெண்ணைத்தை காட்டுகிறது. அதைத்தான் நானும் கூறி வருகிறேன். அவர் நினைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வில் என்னை இணைக்க முடியும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு ரெடியாக உள்ளாரா? என்று கேட்டுச் சொல்ல வேண்டும். நான் இணைய தயாராகத்தான் உள்ளேன். எனவே ஒன்றிணைப்புகான முயற்சியில் டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
    • நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

    நான்கரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் சென்றடையவில்லை. இதனை பெண்கள் புரிந்து கொண்டு உள்ளனர். மகளிருக்கு ரூபாய் 1000 கொடுத்துவிட்டு டாஸ்மாக், மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ரூ. 5 ஆயிரம் செலவு செய்யக்கூடிய குடும்பம் தற்போது ரூ.10 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.

    தி.மு.க. அளிக்கும் ரூ.1000 சென்று சேரும்பொழுது நாங்கள் கொடுக்கும் ரூ.2000 சென்று சேராதா? சென்ற தேர்தலில் ரூ.1500 அறிவித்து அது மக்களிடம் சென்று சேரவில்லை அதனால் தற்போது அறிவித்துள்ளார். கட்டாயம் இல்லங்களுக்கு சென்று சேரும்.

    ஆளும் கட்சியாக தி.மு.க. உள்ளது. யாரை உருட்டுவது, மிரட்டுவது. எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. பா.ஜ.க.வுடன் ஏற்கனவே இருந்த கூட்டணி தான், டி.டி.வி. அவருடன் தான் இருந்தார். தற்போது வந்துள்ளார். பொய்யான தகவலை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.

    நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மக்களிடம் வரவேற்பும் உள்ளது. ஆளுங்கட்சியிடம் பணம் உள்ளது. பல தவறான வழிகளில் இருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது.

    ஓய்வூதியம் என்று அறிவித்திருப்பது ஊதியத்தின் 10 சதவீதம் பிடித்தம் செய்து பின்பு கொடுப்பது. அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவில்லை. தி.மு.க.வில் உள்ள சிலர் இனிப்பு வழங்கி வெற்றி பெற்றதாக தெரிவித்து வருகின்றனர். இன்று வரை இடைநிலை ஆசிரியர் போராடி வருகின்றனர். இப்படி இருக்க எப்படி வெற்றியடையும்.

    கஞ்சா விற்பவர்களை காவல்துறை பிடித்தால் உடனடியாக அமைச்சர் பேசுகிறார். அனைவருக்கும் பங்கு செல்வதால் யாரும் கண்டு கொள்வதில்லை.

    காவல்துறையினரே கஞ்சா விற்பனை செய்தார் என செய்தி வருகிறது. அரசாங்கமும் காவல்துறையும் கூட்டாக செயல்படுகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலம் என சான்றிதழ் பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு எங்கு உள்ளது. கனிமொழி பங்கேற்ற கூட்டத்திலேயே பாதுகாப்பு இல்லை.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். அதிகாரப்பூர்வமாக விரைவில் செய்தி வெளிவரும். லாட்டரி வியாபாரி மார்ட்டின் மருமகனை அருகில் வைத்துக் கொண்டு விஜய் ஊழலை ஒழிப்பதாக பேசி வருகிறார். லஞ்சம் வாங்க மாட்டேன் என அவர் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணம் தினகரன், சசிகலாவிடம் இருப்பதாக பேசிய பேச்சுகள் உண்மை. அவர்கள் பேசியதும் உண்மை. தற்போது இணைந்து விட்டதால் எல்லாம் முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ள நிலையில் திண்டுக்கல் சி.சீனிவாசனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வர முடியாது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைவர் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவரும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற விடக்கூடாது என்பது தான் டி.டி.வி. தினகரன் மாறி மாறி பேசி வருகிறார். தமிழகத்தில் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை.

    நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது. கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது விஜய்யின் பேராசையை காட்டுகிறது. தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாததை தமிழகம் மறக்கவில்லை.

    இ.பி.எஸ். மீது எவ்வளவு குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என கூறி வந்த டி.டி.வி. தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லையென்று கூறுகிறார். பங்காளி சண்டை என்று கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. படர் தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம். பா.ஜ.க.வின் தாமரை நாட்டுக்கே நாசம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் .
    • கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும்.

    தமிழக வெற்றிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம், ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன்,

    யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் . என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தானே தெரியும். யாருடன் கூட்டணி பேச்சு என்பதை சொல்லாமல் இருப்பது தான் சரி.

    டி.டி.வி. தினகரன் சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்.

    ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இப்போதுதான் செய்தி வந்தது. கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும் என்றார். 

    • தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது.
    • நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அ.தி.மு.க.வின் ஒரு பகுதியும், அதேபோல பா.ஜ.க.வும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை, அது பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க. வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர, கூட்டத்தைக் கூட்டி காட்டி யாராலும் வெல்ல முடியாது.

    தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தை மோடியாலோ, வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

    கிரைம், மாபியா, கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும், அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். துணை முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டி ருக்கிறார். தமிழ்நாட்டில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொல்லுகின்ற அளவிற்கு பலவீனமான ஆட்சி கிடையாது. பலமான ஆட்சியில் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

    தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள், அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். தங்களுக்கு எந்த ஆட்சி உதவி செய்யும் என்பது தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்லலாம், குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம், குறிப்பாக பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு அதைவிட தமிழ்நாட்டில் ஏதாவது குற்றங்கள் கூட என்று சொன்னால் அப்போது நாங்கள் பதில் அளிக்கிறோம்.

    யார் வந்தாலும் வந்தவர்களை வரவேற்கின்ற இயக்கம் தான் தி.மு.க. அவர்களுக்கு உரிய மரியாதை தருகிற தலைவர் தான் மு.க.ஸ்டாலின். எங்களை நம்பி வருகின்றவர்கள் கெட்டுப் போபவர்கள் கிடையாது. மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

    எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் நாங்கள் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே பீட் செய்து விடுவோம். பகுதி பகுதியாக மக்கள் அலையை கொண்டு செல்கின்ற சக்தி இந்தியாவிலேயே தி.மு.க.வுக்கு இருப்பதைப் போல வேறு எந்த இயக்கத்துக்கும் கிடை யாது.

    நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள், ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம், அதை தந்துள்ளோம்.

    நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறி ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்புவார்களா, அல்லது ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்புவார்களா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கள் வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×