என் மலர்
நீங்கள் தேடியது "Minister Regupathy"
- ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.
- பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னை 'பி' டீம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் எது பி டீம், எது 'சி' டீம், எது சிலீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்து விட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றமும் கிடையாது.
ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் இல்லை.
நான் தி.மு.க.விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர், மாவட்டச் செயலாளர்தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார்.
- த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.
- தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்.
* த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.
* அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றைக்கும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருப்பவர்.
* செங்கோட்டையனை பா.ஜ.க. ஏமாற்றி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு செல்ல வேண்டும்?
* செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவிற்கு வந்த பிறகு நட்பு ரீதியில் வாருங்கள் என்று சேகர்பாபு அழைத்து இருக்கலாம்.
* தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது பழனிசாமி எங்கிருந்தார்?
- மதுரைக்கு எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் கொட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண தூக்கம் போடும் பழனிசாமிக்கு, திமுக அரசு என்றால் வீராவேசம் வந்துவிடுகிறது. பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள்தான்!
நெல்மணிகள் நனைந்துவிட்டது என ஸ்பாட்டுக்கு போய் ஓரங்க நாடகம் போட்ட பழனிசாமி, ஒன்றிய அரசு நெல் ஈரப்பத அளவினை 22 சதவிகிதமாக உயர்த்தாததைக் கண்டிக்காமல் எங்கே போனார்?
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது பழனிசாமி எங்கிருந்தார்? மோடி அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, சாகுபடி, பயிர்க்காப்பீடு பற்றியெல்லாம் பேச அருகதை இருக்கிறதா? கஜா புயலின் போது பயிர்கள் எல்லாம் நாசம் ஆன நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்ட பழனிசாமி எல்லாம் விவசாயியா?
நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சிப்பது ஒன்றிய பாஜக அரசு. அதை எதிர்த்துக் கேட்கத் திராணியில்லாத, தைரியமில்லாத துரோகி பழனிசாமி வீணாகத் தமிழ்நாடு அரசின் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் மீதும் அவதூறை பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா என்ன?
விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்!
பல்லுயிர்ப் பெருக்கத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் காரணமான கனிம வளச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்த வரலாறு தானே உங்களுடையது.
'மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குச் செய்தன என்னவென்று!' எனக் கேட்கிறார். 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்கடித்து பழனிசாமிக்கு மக்கள் அளித்த பதில் தெரியவில்லையா?
கோவை, மதுரை மெட்ரோவுக்கு வர வேண்டும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதையே பெரும் சாதனையாகத் தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சியில் இருந்த போது அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.
டிவி-யை பார்த்து ஆட்சி நடத்திய கையாலாகாத, நிர்வாகத் திறனற்றவர் என்று இந்தியாவே சிரித்த முதல்வர்தானே பழனிசாமி. கால்கள் மாறுவதையும் கார்கள் மாறுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பழனிசாமிக்கு ரோசம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பார்த்துவிட்டு வரும் போது ஏசி காரிலும் 'குப்' என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.
- களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* த.வெ.க. தலைவர் விஜய் தரக்குறைவாக விமர்சித்து தரம் தாழ்த்திக்கொள்கிறார்.
* மக்கள் மத்தியில் தனது தரத்தை விஜயே தாழ்த்திக் கொள்ளும் நிலையில் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை.
* விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.
* எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரி இல்லை.
* தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை.
* விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை.
* எங்களுக்கு போட்டி என்று யாரும் இல்லை.
* பா.ஜ.க.வின் 'C' டீம்தான் விஜய். முன்பு ஸ்லீப்பர்செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.
* களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.
* திராவிட இயக்க வரலாற்றை இளைய தலைமுறை அறியச் செய்யும் திருவிழா.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான்.
- கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தான் பா.ஜ.க. அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை காப்பாற்றி வருகிறார்.
அது டி.ஜி.பி. விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பா.ஜ.க. அரசு அது டி.ஜி.பி. மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் டி.ஜி.பி. மூலம் நடக்க முடியவில்லை.
தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான். 2011-ம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டி.ஜி.பி. ஆகவும், சட்ட-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் அ.தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது.
ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டி.ஜி.பி.யாக கொண்டு வந்ததும் அ.தி.மு.க. தான். தற்போது இதை பற்றி பேசி பா.ஜ.க. அரசின் விசுவாசி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டு வருகிறார். பொறுப்பு டி.ஜி.பி. பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.
அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கோலமாக கடந்த சட்ட ஒழுங்கை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக கொண்டு வந்துள்ளது.
கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும். சென்னையில் சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. எங்களுக்கு எந்த அளவு போட வேண்டும் என்பது சரியாக தெரியும். யார் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். போலியான தருணங்களை சொல்லி நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவிலேயே SIR-ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.
- இ.பி.எஸ். தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சரியான வாக்காளர் பட்டியலுடன் முறைகேடுகள் இல்லாத தேர்தலை நடத்தவும், அதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் தி.மு.க.வுக்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், போதுமான கால அவகாசம் தராமல், அவசர அவசரமாக SIR பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதாலேயே தி.மு.க. எதிர்க்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்காளர்களை நீக்கம் செய்யும் சதியைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், SIR-க்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடத்தியிருக்கிறது தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையைப் பறிக்கும் SIR -ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆரியம், திராவிடம் பற்றிக் கேட்டால், "அதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும்" எனச் சொன்ன பழனிசாமிக்கு, ஜனநாயகம் பற்றி மட்டும் தெரிந்துவிடுமா? ஜனநாயகத்தின் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத அ.தி.மு.க., தமிழர்களின் வாக்குரிமையைப் பற்றியா கவலைப்படும்? தமிழர்களின் வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும் எனத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடங்கி, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவது வரை திமுக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வோ SIR-ஐ ஆதரித்து வழக்கு தொடருந்திருக்கிறது.
'உங்க ஓட்டு உங்களுக்கு இல்லை' எனச் சொல்லி வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். பா.ஜ.க. கூட SIR-ஐ ஆதரித்து வழக்கு போடாத நிலையில், பா.ஜ.க.வின் கிளைக் கழகமாகவே செயல்படும் அ.தி.மு.க.வும் அதன் 'சிறந்த அடிமை'யான பழனிசாமியும் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். ''இந்தியாவிலேயே கார் வைத்திருக்கும் கரகாட்டக் கோஷ்டி நாம்தான்'' என்ற காமெடி போல, இந்தியாவிலேயே SIR-ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற உண்மை தெரிந்துவிட்டதால், SIR மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ.க.வை நம்பி, சித்து விளையாட்டில் இறங்கியிருக்கிறார் துரோகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்ற பழனிசாமி. கூவத்தூரில் 'ஊர்ந்தெடுக்கப்பட்டு' முதல்வர் ஆனது போல, SIR மூலம் கொள்ளைப்புற முதலமைச்சராகத் துடிக்கிறார். பா.ஜ.க.வின் வாக்கு திருட்டு வியூகம் அ.தி.மு.க.வுக்குப் பயன்படும் என்ற நப்பாசையில் SIR-ஐ ஆதரிக்கிறார் பழனிசாமி.
முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை ஆதரித்துவிட்டு, ''முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" எனப் பச்சைப் பொய் சொன்ன பழனிசாமிதான், அந்த CAA சட்டத்தை SIR வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பா.ஜ.க.வுக்குத் துணை போகிறார். SIR நடவடிக்கையால் தமிழர்களின் வாக்குரிமைக்கு மட்டுமல்ல; அவர்களின் குடியுரிமைக்கே ஆபத்து ஏற்படலாம் என்கிற பேராபத்து சூழ்ந்திருக்கிறது.
வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினைக்கு காரணமான MINES AND MINERALS திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பா.ஜ.க. ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களையும் திட்டங்களைக் கண்களை மூடி ஆதரித்து, சிறந்த அடிமையாக விளங்கி வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது SIR-லும் 'ஆலம்பனா நான் உங்கள் அடிமை' என முன்னுக்கு வந்து நிற்கிறார்.
பீகாரில் SIR பணி நடைபெற்ற போது, பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வழக்கு தாக்கல் செய்யவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி SIR நடவடிக்கையை ஆதரித்து வழக்கு போடவில்லை. மாறாக, இஸ்லாமியர்களின் குடியுரிமையைச் சோதிக்கும் வகையில் SIR நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது என்று கவலை தெரிவித்துள்ளது. ஆனால், 'அடிமை சேவை செய்வதே என் தவ வாழ்க்கை' என வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமி, SIR-ஐ ஆதரித்தோடு வழக்கு போட்டு ராஜ விஸ்வாசத்தைக் காட்டுவது வெட்கக்கேடு.
மக்களைப் பற்றியும் மக்கள் நலனைப் பற்றியும் துளியும் கவலையில்லாமல் டெல்லி எஜமானர்களின் மனம் குளிர மட்டுமே அடிமை சேவகம் செய்து வரும் பழனிசாமி தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார். இந்த அற்ப செயலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி அளிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை.
- எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். ஆனால் பீகாரில் இருந்து வருபவர்கள் கோயம்புத்தூரில் இரண்டு மாதமும், திருப்பூரில் இரண்டு மாதமும் திருச்சி திருநெல்வேலியில் மூன்று மாதமும் வேலை பார்க்கிறார்கள்.
இப்படி அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு தற்காலிகமாகத்தான் பணிபுரிகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் நிரந்தரமாக அங்கே இருக்கின்றனர்.
அதனால் நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களை நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. நிரந்தர வாசிகளாக இருப்பவர்கள் தான் வாக்களிக்க முடியும்.
2026 தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். மீண்டும் திமுகவின் 2.0 தொடரும்.
விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் பொழுது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார். புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை.
கேரளா பிஎம்சி திட்டத்தில் சேர்த்ததைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- த.வெ.க. விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
- ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது,
* விஜய் வருகையால் தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது.
* விஜய் சுற்றுப்பயணத்தில் பொது சொத்துக்கள் சேதம்.
* த.வெ.க. விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
* ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும். ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் எல்லாம் தி.மு.க.வுக்கு கிடையாது.
* 2011ல் திடீரென்று தான் தி.மு.க.வை ஆதரித்து வடிவேல் பிரசாரத்திற்கு வந்தார். எந்த ஒரு விளம்பரமும் கிடையாது. அவருக்கு கூடிய கூட்டம் போல் வேறு எங்கும் கூடவில்லை. அது வாக்காக மாறியதா இல்லை.
* சனி, ஞாயிறு தான் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அப்போது விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
- பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
* மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இ.பி.எஸ். நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்து இருக்கலாம்.
* தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இ.பி.எஸ்., ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம்.
* பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது.
- நாங்கள் செய்வதை பின்பற்றி செய்து அதில் தோல்வியை தழுவக்கூடிய ஒரு வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிசாமி.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எதிரிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நாங்கள் இல்லை. அதேநேரத்தில் எதிரிகளை சமாளிக்கக்கூடிய சக்தியும் ஆற்றலும் எங்களுடைய தலைவருக்கு உண்டு என்பதை எடுத்துச்சொல்வதில் நாங்கள் முன்னணியில் நிற்கின்றோம்.
இன்று நாங்கள் செய்து இருக்கும் சாதனைகள் இந்தியாவிலேயே தமிழ்நாடு அடைந்து இருக்கும் நன்மைகள், தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் இவை எங்கள் கூட்டணியை முன்னேற்றி சென்று வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்.
எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது.
தூத்துக்குடி சம்பவத்தில் காக்கை, குருவிகள் போல் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதைக்கேட்டபோது நான் டி.வி.யில்தான் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு முதலமைச்சராக இருந்தவர். அவரிடத்தில் நாம் நாகரித்தை எதிர்பார்க்க முடியாது.
அதேநேரம் தலைவர் தளபதி அவர்கள் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தரக்கூடியவர். இறந்துபோன அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரது பணி, கடமை. அதை உணர்ந்து செயலாற்றக்கூடியவர் எங்களுடைய முதலமைச்சர். கடமை உணர்வு எதுவுமே இல்லாத ஒரு கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி.
நாங்கள் மக்களின் மனதில் இருக்கிறோம்.
ஏட்டிக்கு போட்டி அதுக்கு பெயர் பழனிசாமி. நாங்கள் செய்வதை பின்பற்றி செய்து அதில் தோல்வியை தழுவக்கூடிய ஒரு வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிசாமி.
இதுவரை தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்வி காண்பார். நாங்கள் எடுத்து இருக்கக்கூடிய நடவடிக்கைகள் இன்னும் எங்கள் பலத்தை அதிகரித்து இருக்கிறதே தவிர நாங்கள் பலவீனமாக ஆகவில்லை. எங்களுடைய பலம் அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
- தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.
புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது.
* இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
* இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினருக்குதான் பாதுகாப்பு தேவை.
* முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச்செல்ல முடியாது அவர் நம்மோடுதான் இருப்பார்.
* யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு என தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு தெரியும்.
* தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.
* அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்கள்.
* திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லி தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். மற்றவர்களும் இன்றைக்கு மறந்துவிட்டு பா.ஜ.க.வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும் அருமையான அடிமைகள் அவர்கள்.
* இங்கு எந்த ஒரு மத கலாச்சாரத்திற்கு நாங்கள் இங்கு இடம் கொடுக்க மாட்டோம். எல்லா மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். எல்லா மாநிலத்திலும் கலாட்டாவை உருவாக்கி, அங்கே பயங்கரவாதங்களை உருவாக்கி, சண்டை சச்சரவுகளை உருவாக்கி நுழைந்தார்கள். இங்கே அப்படி நுழைய திராவிட மாடல் அரசு பா.ஜ.க.வை எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.
* இங்கே எப்போதும் single engine தான். ஒரே இயக்குபவர் தான் எங்கள் தலைவர் தளபதி தான். எங்கள் தோழமை கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
* சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொள்ளாச்சி வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியவர் எடப்பாடியார்.
- விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்று மார்தட்டும் கொத்தடிமை திரு. ரகுபதி அவர்களே, தமிழகத்தில் உள்ள அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நிலை என்ன என்று தெரியாமல், நடவடிக்கை எடுக்காமல் ப(தூ)ங்கும் மந்திரிக்கு ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதே, என்ன இன்னும் நிலைய வித்துவானை காணவில்லை? என்று நினைப்பதற்குள் தனது அறிக்கை வாந்தி வாயிலாக மீண்டும் ஆஜராகிவிட்டார் ரகுபதி சார். ஸ்டாலின் மாடல் அரசு விசாரித்த லட்சணத்தை காரித் துப்பி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அப்படி நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட SIT நடத்திய விசாரணைக்குக் கூட Credit எடுக்கும் அளவிற்கு ஸ்டிக்கர் வெறி திமுக-விற்கு முற்றிப் போயுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர் சந்திப்பில், "இந்த வழக்கில் FIR பதிய வேண்டாம்" எனவும்; "Medical Test எடுக்க வேண்டாம்" எனவும் திமுக அரசின் காவல்துறை சொன்னதாகக் கூறியுள்ளார். இதுதான் நீங்கள் இந்த வழக்கை நடத்திய லட்சணம் ரகுபதி சார்! FIR பதியாமல், உங்கள் அனுதாபி ஞானசேகரனைக் காக்க முயன்றது இன்று அம்பலப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனை சித்து வேலைகளைத் தான் இந்த வழக்கில் செய்தீர்கள் என்பதை விசாரிக்கவே இன்னொரு வழக்கு பதிந்தாக வேண்டும்!
"ஞானசேகரன் போன் Flight Mode-இல் இருந்தது" என்று அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுத்ததே இந்த வழக்கின் சந்தேகங்களை வலுப்பெறச் செய்தது. குற்றம் நடைபெற்றபோது, குற்றவாளி ஞானசேகரனை காவல் துறை Red Hand-ஆக பிடிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தவுடன் ஞானசேகரன் முதலில் விசாரணை செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுகிறான். மறுநாள் மீண்டும் காவல் துறையால் கைது செய்யப்படுகிறான். குற்றம் நடந்தபோது அவன் பயன்படுத்திய போனும், அவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட போனும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு போன்கள் பயன்படுத்தப்பட்டதா? இடையில் சார் குறித்த தடயங்களை அவன் அழித்திருக்கமாட்டானா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அமைச்சர்களுடன் புகைப்படம் எடுப்பது பெரிதல்ல. ஆனால், ஒரு History Sheeter வீட்டு பெட்ரூமில் அமர்ந்து திமுக அமைச்சர், சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்ததைத் தான் கேள்வியாகக் கேட்கிறோம். தனது வீட்டிலேயே உணவு அருந்துவதால் ஏற்படும் தைரியத்தில்தான் இவன் இதுபோன்ற குற்றங்களை தைரியமாக செய்துள்ளான். அதற்கான பதிலை சொல்லாமல் இன்றுவரை "அது வந்து இப்போ என்ன சொல்றது?" என மழுப்பி வருவது நீங்கள் தானே ரகுபதி சார்? மேலும், சட்டமன்றத்தில் இதுகுறித்த விவாதத்தில் பதில் அளித்துப் பேசிய விடியா திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வளவு குற்றப் பின்னணி உள்ள இவனை திமுக அனுதாபி என்று பேசியது சட்டமன்ற குறிப்பில் பதிவாகியுள்ளது. இதற்கு கொத்தடிமை மந்திரியின் பதில் என்ன?
கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட குற்றச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள் விசாரணையின்போது, கடந்த ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்ற 12 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் ஒப்புக்கொண்ட 12 குற்றச் சம்பவங்களில், ஒருசில வழக்குகளில் காயல் துறையினர் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதில், அவசர கதியில் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று சம்பந்தமே இல்லாத குற்றவாளிகளைக் கைது செய்து தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், போலி குற்றவாளிகள் மறுவிசாரணையில் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன என்று இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சி வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியவர் எடப்பாடியார். விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதில்கூட ஸ்டிக்கர் ஒட்ட, கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா ரகுபதி சார்? பொள்ளாச்சி வழக்கு விசாரணை ஆறு ஆண்டுகள் நீடித்தது என்று கூறும் கொத்தடிமை மந்திரி ரகுபதி அவர்களே இதில், நான்கு ஆண்டுகள் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதை மறந்து விட்டார்.
அண்ணாநகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கு முதல், அரக்கோணம் பாலியல் வழக்கு வரை, திமுக அரசு எந்த லட்சத்தில், பெண்களுக்கு எதிரான வழக்குகளை கையாண்டு வருகிறது என்பதை நாடறியும். தெய்வச்செயல் போன்ற பாலியல் சுயவர்களையும், பல SIR களையும் காத்து நிற்பது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுதான்.
திமுக எப்படிப்பட்ட கேடுகெட்ட கட்சி என்பதற்கு ஆவுடையார்கோவில் பெண்ணின் அந்தரங்க போட்டோவைக் காட்டி மிரட்டிய திமுக காமுகனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஸ்டாலின் SIR அமைச்சரவையில், அமைச்சராக இருக்கும் ரகுபதி சாரே சாட்சி!
திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தில் சிறந்த ஆட்சியைத் தருகிறது என்று கோயபல்ஸ் பொய்யை அமிழ்த்தூயிட்டிருக்கும் முன்னாள் சட்ட மந்திரி அவர்களே;
தமிழகத்தின் சிறிய மாவட்டமான செங்கல்பட்டில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 717 பாலியல் வழக்குகள் நீதிக்காகக் காத்திருக்கின்றன. என்றும், இதில் மகளிர் காவல் நிலையங்களில் சுமார் 270 வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வு முடிந்தும் தேக்கத்தில் உள்ளன என்றும்; மற்றும் பல வழக்குகள் பல்வேறு நிலைகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையிலும் உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஆட்சியின் "திறமை" எங்கே, விடியா மாடல் அரசு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்குபோல் குறைந்த காலத்தில் நீதி வாங்கித்தா தயாரா? இல்லாத சாரை யாரும் உருவாக்கவில்லை. FIR-ல் உள்ள "யார் அந்த SIR?" என்று தான் கேட்கிறோம். மாறாக, அந்த சாரைக் காப்பாற்றும் இழிபிறவிகளாக இருப்பது ஸ்டாலின் சார் தலைமையிலான திமுக சார்கள் தான். கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர் அண்ணன் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வலுவாக இந்த வழக்கில் அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான், இந்த வழக்கில் இந்த நீதிகூட கிடைத்துள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
கொத்தடியை மந்திரி திரு. ரகுபதி அவர்களே, 2026-ல் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராலிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு முதல் தமிழகத்தில் அனைத்து பாலியல் வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் செய்த அனைத்து SIR-களுக்கும் சட்டத்தின்முன் தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்று எச்சரிக்கிறேன்.






