search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers arrested"

    • மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
    • விவசாயிகளை போலீசார் தடுத்ததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசண் சரண்சிங்கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

    இதற்கிடையே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் 2 மாதங்களாக போராடி வரும் நிலையில் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி பிரதமருக்கு கடிதம் அனுப்ப தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

    அதன்படி மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அதேபோல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளையும், பெண்களையும் காப்பாற்றுங்கள் என கோஷம் எழுப்பினர்.

    இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு, மாநில துணைத்தலைவர் மேகராஜன், சட்ட ஆலோசகர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்பட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியோர் இணைந்து தபால் நிலையம் நோக்கி பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தடையை மீறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் நுழைய முயன்றனர்.
    • போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு நுழைய முயன்றனர். இதனை அடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் சில விவசாயிகள் நுழைய முயன்ற போது அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

    தொடர்ந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிராக அனுமதியை மீறி கையெழுத்து இயக்கம் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad
    சேலம்:

    சேலம்-சென்னைக்கு மத்திய அரசு சார்பில் ரு.10 ஆயிரம் கோடியில் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இந்நிலையில் எதிர்ப்பை மீறி அரசு சார்பில் நில அளவீடு பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது அளவீடு முழுமையாக முடிவடைந்தது. இந்த 8 வழி சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கபட்டுள்ளது என விவசாய சங்கத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

    இதையடுத்து 8 வழி சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் சில இடங்களில் மண் பரிசோதனை நடைபெறுவதால் பசுமை வழி சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad 
    பசுமை சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து ஆட்சேபனை தெரிவித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். #chennaisalemgreenexpressway

    செய்யாறு:

    சென்னை-சேலம் பசுமை சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் விவசாய நிலங்கள் உள்பட சுமார் 700 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகள் மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 639 விவசாயிகள் பசுமை சாலைக்கு ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆட்சேபம் தெரிவித்திருந்த மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்யும் கூட்டத்தை நேற்று நடத்தினர்.

    இதில், செய்யாறு தாலுகாவில் ஆட்சேபனை தெரிவித்த 74 பேரில் 58 பேர் கலந்து கொண்டு எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை விட்டு கொடுக்க மாட்டோம் என்றனர்.

    இந்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்காக, செய்யாறு தாலுகா அலுவலகத்தில் 3 கட்ட போலீஸ் சோதனைக்கு பிறகே ஆட்சேபனை மனு அளித்த விவசாயிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் டி.எஸ்.பி.க்கள் குணசேகரன், செந்தில் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, கூட்டத்திற்கு வந்த எருமைவெட்டி கிராமத்தை சேர்ந்த தேவன் என்ற விவசாயி மற்றும் பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தை சேர்ந்த அத்தியபாடி அருள், முத்துக்குமார், முறையாறு சிவா ஆகிய 4 பேரும் திடீரென கைது செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை போட்டோ எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்ய முயன்றதால் 4 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், எதிர்ப்பு கருத்துகளை பதிவுசெய்த 58 விவசாயிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #chennaisalemgreenexpressway

    செங்கம் அருகே பசுமை சாலைக்கு நிலம் தரமறுத்த 5 விவசாயிகளை போலீசார் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GreenwayRoad
    செங்கம்:

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக 5 மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கலசப்பாக்கம், செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கம் அடுத்த கட்ட மடுவு ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நில அளவிடும் பணியின்போது சில விவசாயிகள் தங்கள் நிலத்தை பசுமை சாலைக்காக தர மறுத்து அளவீடு பணியை தடுத்தனர். இதனால், தற்காலிகமாக அப்பகுதியில் நிலம் அளவிடும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.

    இந்த நிலையில், அத்திப்பாடி கிராமத்தில் விடுபட்ட அளவீடு பணியை தொடருவதற்காக தாசில்தார் ரேணுகா தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்றனர். விவசாயிகளின் எதிர்ப்பை முறியடிக்க டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    அப்போது அருள் என்ற விவசாயிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள மாந்தோப்பு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தகர்த்து எறிந்து அதிகாரிகளை போலீசார் உள்ளே அழைத்து சென்றனர். 10 ஏக்கர் மாந்தோப்பு மற்றம் மணிலா பயிரிடப்பட்டிருந்த நிலத்தை அளந்து குறியீடு கற்களை நட்டனர்.

    இதற்கு, அருள் உள்ளிட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசமடைந்த போலீசார் அருள் உள்ளிட்ட விவசாயிகளை அடித்து, உதைத்து தரதரவென இழுத்துச் சென்று மேல்செங்கம் போலீஸ் நிலையத்தில் சிறை வைத்தனர். பின்னர், அருள் மற்றும் மனோகரன், முத்துக்குமார், இந்திரா என்ற பெண், மற்றொரு மனோகரன் என மொத்தம் 5 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மற்ற விவசாயிகளை இரவில் விடுவித்தனர்.

    பசுமை சாலைக்காக நிலம் தர மறுத்த விவசாயிகளை போலீசார் தாக்கி கைது செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #GreenwayRoad
    ×