search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyakannu"

    • விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

    • மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர்.

    சென்னை:

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று மதியம் எழும்பூர் வந்தனர்.

    பின்னர் அவர்கள் எழும்பூரில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்றனர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலமாக செல்ல முயன்றனர். இதனையறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் 90 பேர், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு சென்றனர். கர்நாடகா மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து இன்று காலை 7.30 மணி யளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

    • திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • பின்னர் இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மாவட்ட விவசாய சங்க பெண்கள் பிரிவு தலைவர் கௌசல்யா மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக் கண்ணு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    பின்னர் இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கவுசல்யா செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் அய்யாக்கண்ணு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தனியார் சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்யக்கோரி கடலூரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயலாளர் சக்திவேல் கடலூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுகுனபூசணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இன்று திரண்டனர்.

    விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபர் மற்றும் வங்கி அதிகாரிகள் கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்கள்.

    இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும் அல்லது எங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    அவர்களிடம் உங்கள் கோரிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் அறிவுறுத்தினார்கள்.

    இதனைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுக்க சென்றனர்.

    இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவது உறுதி என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார். #TNFarmers #Ayyakannu #PMModi
    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பழனியப்பன், பட்டீஸ்வரன், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.6ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக விதைகளை தடை செய்ய வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

    ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.

    விவசாயிகளின் கோரிக்கைகளை தேசிய கட்சிகள்தான் நிறைவேற்ற முடியும். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத பா.ஜனதா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளோம்.

    வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக 24-ந்தேதி வாரணாசி செல்ல இருக்கிறோம். வறுமையால் வாடும் விவசாயிகளால் வாரணாசி செல்வதற்கும், வேட்பு மனுதாக்கல் செய்வதற்கும் பணமில்லை. அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி, தனது கணவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய பணமில்லாததால் வெட்டியானுக்கு பணம் கொடுக்க வாரணாசியில் பிச்சை எடுத்தது போல, நாங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய டெபாசிட் பணத்திற்காக வாரணாசியில் பிச்சை எடுத்து அதனை கட்ட முடிவு செய்துள்ளோம்.

    வருகிற 6-ந்தேதிக்குள் விவசாயிகளை அழைத்து பிரதமர் நரேந்திரமோடியும், ராகுல்காந்தியும் பேச வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். வாக்குறுதி அளித்தால் போட்டியில் இருந்து விலகி கொள்வோம். இல்லையென்றால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவோம். அகோரி வேடத்தில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்வோம்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது பற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி எங்களின் கோரிக்கையை மோடி நிறைவேற்றாவிட்டால் வாரணாசியில் அவரை எதிர்த்து போட்டியிடுவது உறுதி என்றார். #TNFarmers #Ayyakannu #PMModi
    வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். #TNfarmers #Ayyakannu #AyyakannuagainstModi #ModiinVaranasi
    வாரணாசி:

    தமிழ்நாட்டு விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டில் அய்யாக்கண்னு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் 100 நாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  2018-ம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மீண்டும் போராட்டம் நடத்தினர். ஆனால், தமிழக விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நேற்றிரவு பாஜக தலைமை வெளியிட்ட முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அய்யாக்கண்ணு, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300 விவசாயிகள் விரைவில் வாரணாசிக்கு சென்று நான் மற்றும் மேலும் 110 விவசாயிகள் மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வோம் என தெரிவித்துள்ளார். #TNfarmers #Ayyakannu  #AyyakannuagainstModi #ModiinVaranasi
    கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டியிடபோவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். #PMModi #Ayyakannu

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் கோரிக்கைக்காக 140 நாட்கள் டெல்லி சென்று போராடினோம். அப்போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 5 முறை எங்களை சந்தித்து உரிய உதவி செய்வதாக கூறினார்.

    ஆனால், இன்று வரை உதவி செய்யவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், லாபகரமான விலையை விவசாயிகளின் விளை பொருட்களுக்கும், கடன் தள்ளுபடியும், பென்சன், தனிநபர் இன்சூரன்ஸ் அளிப்பதாக தெரிவிக்க வேண்டும்.

    இல்லையென்றால், மோடி ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாயிகள் 111 பேர், 2 தொகுதியில் போட்டியிட்டால் 222 பேர், 3 தொகுதியில் போட்டியிட்டால் 333 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்வார்கள்.

    ஒரு மாதம் விவசாயி அலைந்து திரிந்து சோறு இல்லாமல் போய், சுயேச்சை வேட்பாளர் இறந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து வேலை செய்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #PMModi #Ayyakannu

    தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #hydrocarbon #tngovt

    திருச்சி:

    திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது :-

    விவசாயிகளுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி அளிக்கும் கட்சிகளுக்கே விவசாயிகளின் வாக்கு. அவ்வாறு விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக 29 மாநிலங்களிலும் பிரசாரம் செய்வோம். மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த திட்டங்களும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.‌ தமிழக பட்ஜெட்டிலும் மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் அதிலும் விவசாயிகளுக்கான எந்த திட்டமும் இல்லை.

    விவசாயிகள் கடனிலே பிறந்து வாழ்ந்து மடிய வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய ரூ.400 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வீணாக செல்வதை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் இந்த மாதம் 25ந் தேதிக்கு பிறகு தற்கொலை செய்யும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    மேலும் வருகிற 21ந் தேதியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 28, 29-ந்தேதிகளில் டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம். எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோகார்பன் எடுக்க விடமாட்டோம். 

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #hydrocarbon #tngovt

    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பாம்பு-எலி தின்னும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சப்கலெக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள், போலீசாரும் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் விடிய, விடிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கினார்கள்.

    நேற்று விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்தகட்டமாக பாம்புக் கறியை தின்னும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று 3-வது நாளாக பாம்பு, எலி கறி தின்னும் போராட்டம் நடந்தது. விவசாயி அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில செயலாளர் சக்திவேல், குமரேசன், ராஜேந்திரன், விஜயன், நாகராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் வாயில் பாம்பு மற்றும் எலிகளை வைத்து பச்சையாக உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #tamilnews
    இடிந்த பகுதிகளை அகற்றிவிட்டு முக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #mukkombu
    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததால் புள்ளம்பாடி, பெருவளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அணையின் மதகுகள் உடைந்ததால் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் கூறுவது தவறு.

    லால்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும். 182 ஆண்டுகள் பழமையான அணையை முறையாக பராமரிக்காததே மதகுகள் உடைய காரணமாகும். கொள்ளிடம் பழைய பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலம் ஏற்கனவே கட்டியிருக்க வேண்டும்.

    வாய்க்கால் சீரமைப்பு, ஆறுகள் இணைப்பு, புதிய தடுப்பணைகள் கட்டுதல், மேலணை கட்டுதல் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசை பல்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால் தமிழக அரசு அதனை பரிசீலித்து கவனிக்காமல் விட்டதே இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம்.

    ஜெயலலிதாஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்  காலத்தில்  கட்டப்பட்டிருந்த பழைய இரும்பு பாலத்தின் தூர்ந்து போன, பலவீன மடைந்த நிலையை கருத்தில் கொண்டு அதன் அருகிலேயே நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலத்தை கட்டினார். அதேபோல் முக்கொம்பு பாலத்தையும் தற்போதைய தமிழக அரசு புதிதாக கட்டியிருக்க வேண்டும். எனவே இனியும் மெத்தன போக்கை காட்டாமல் மேட்டூர் அணையை போன்று சாதக, பாதகங்களை பரிசீலித்து முக்கொம்புவில் புதிய பாலத்தை கட்டவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #mukkombu
    சேப்பாக்கத்தில் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு அய்யாகண்ணு தொடர்ந்த வழக்கிற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு போலீஸ் கமி‌ஷனருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு ஒரு மனு தாக்கல் செய்தார்.

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமையில் வாழ்கின்றனர். இவர்கள் வாங்கிய விவசாய கடன்களை திரும்பக் கேட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுக்கிறது.

    இதனால், விவசாய தொழில் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

    ஒரு பக்கம் தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்படுகிறது. மறுபக்கம் ஆற்றுத் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்தில் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை கமி‌ஷனர் நிராகரித்து விட்டார்.

    எனவே தொடர்ந்து 9 நாட்கள் சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் டி.ராஜா ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகம் முன்பு தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் படுக தேச கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும், நிலுவை தொகையை வழங்ககோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தேயிலை வாரிய இயக்குநர் பால்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற 15-ந் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டக்கு ழுவினர் கலைந்து சென்றனர்.

    பின்னர் தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் வரும் போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு தெரிகிறார்கள். தேர்தல் முடிந்துவிட்டால் இந்த நாட்டின் அ‌‌‌டிமைகளாகி ஆகிவிடுகிறார்கள்.

    நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கு லாபகரமான விலையை கொடுக்க அரசு மறுக்கிறது. பசுந்தேயிலைக்கு விலையாக ரூ.50 கொடுக்கலாம் என மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது கூறினார். இதனால் கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்ததுடன் ஊட்டி தேயிலை என்ற பெயரில் விற்பனை செய்து வந்தார்கள்.

    தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை அரசு ரத்து செய்ய வேண்டும், படுகர் இன மக்கள் செய்யும் தேயிலை தொழில் அழியும் விளிம்பில் உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×