search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home guard"

    • திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.
    • நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல்படைக்கு, நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்த பட்சம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப்பின்னணியும், எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சி சார்ந்தவராகவோ இருக்கக்கூடாது.

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இன்று அக்., 21 முதல், வரும், 30 வரை, நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஊர்க்காவல்படை அலுவலகத்தில், வரும் 30-ந் தேதி, மாலை, 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். ஆட்கள் தேர்வு நடக்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பள்ளி, கல்லுாரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் (இருப்பின்) ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பி இணைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது.
    • சரியான நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் 53 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடங்களுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுகளுக்கு துறை ரீதியான தேர்வு நடந்தது.

    தேர்வில், 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 178 ஏட்டுகள் என 207 பேர் பங்கேற்றனர். இதில் எழுத்து தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளில் 53 பேர் வெற்றி பெற்றனர். இதில் ஒருவர் பணி ஓய்வு பெற்று விட்டதால் 52 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது. கோரிமேடு காவல்துறை சமுதாய கூடத்தில் நடந்த விழாவில் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் வரவேற்றார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பதவி உயர்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் இன்று சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதற்கு போலீஸ் அதிகாரிகளே காரணம். போதை பொருள் நடமாட்டம், சைபர் கிரைம்களை போலீசார் கட்டுப்படுத்தி உள்ளனர். சரியான நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    விரைவில் 500 ஊர் காவல் படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர், டிரைவர், டெக்னீசியன் ஆகிய பணியிடங்கள் நிரப்ப கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அமைதியாகவும் நிம்மதியா கவும் வாழ போலீசார் பொறுப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அனிதாராய், நாரா சைதன்யா, சூப்பிரண்டுகள் ரங்கநாதன், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், சுபம்கோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் நன்றி கூறினார்.

    • ஈரோடு ஊர்காவல் படையில் தேர்வான 47 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது
    • பணி ஆணை பெற்ற 47 பேரும் ஊர்காவல் படை பிரிவில் இன்று முதல் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு, கோவில் பந்தவஸ்து உள்ளிட்ட பல்வேறு பணி களில் ஊர்காவல் படையி னர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி ஆகிய இடங்களில் ஊர்க்காவல் படை பிரிவு இயங்கி வருகிறது. ஊர்காவல் படை பிரிவில் காலியாக இருந்த 65 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோர ப்பட்டு, அதில் விண்ண ப்பித்த தகுதியான 9 பெண்கள் உட்பட 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சான்று, உடற்தகுதி சான்று உள்ளிட்ட பல்வேறு பரிசோ தனைகள் செய்யப்பட்டு, இறுதியாக சான்றிதழ் சரிபார்க்க ப்பட்டது.

    இதையடுத்து 47 பேருக்கும் ஈரோடு ஆணைக்கல்பா ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஊர்காவல் படையினரின் விதிகள், பணியாற்றும் விதம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கட்டளைகளை ஏற்பது, பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவது குறித்து விளக்கமும் அளிக்கப்ப ட்டது. இந்த பயிற்சியை நிறைவு செய்த 9 பெண்கள் உட்பட 47 பேருக்கும் ஈரோடு ஆணைக்கல்பா ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அணி வகுப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற 47 பேரும் ஊர்காவல் படை பிரிவில் இன்று இன்று முதல் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

    • மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டன.
    • ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. சேவை மனப்பான்மையுடைய ஆண்கள்,பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வருகிற 20-ந் தேதி முதல்

    22-ந் தேதி வரை 3 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலரும் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் கல்வி, வயது, ஒரிஜினல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • இந்த போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மதுரை சரக அளவிலான விளையாட்டுப் போட்டி மற்றும் பணி திறன் போட்டிகளுக்கான தேர்வு ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமை தாங்கினார்.

    இந்த போட்டி தேர்வில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி அழகர்ராஜா, மதுரை மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை மாநகர வட்டார தளபதி வெங்கடேஷ், விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார துணை தளபதி அருள் செல்வி, மதுரை மாவட்ட வட்டார துணை தளபதி இந்திராகாந்தி, மதுரை மாநகர வட்டார துணை தளபதி சகாயஜென்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டி தேர்வை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

    • 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படை பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண், பெண் ஆகியோர் ஆளினர் பதவிக்கு நிரப்பப்பட உள்ளனர்.

    இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பணியில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடனும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது. திருப்பூர் மாநகரப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 24-ந் தேதிக்குள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

     கோத்தகிரி

     கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் விநாயகர் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவு ஊர்க்காவல் படையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 43) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் கரடி துரத்தியதில் தவறி கீழே விழுந்து கிறிஸ்டோபர் காயமடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    • விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
    • தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணி யிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள் நல்ல உடல் திறன் மற்றும் கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயது 18 முதல் 45 வயது உடையவராகவும், எந்தவித குற்றப்பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

    சாதி, மதம், அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. அரசு ஊழியராக இருந்தால் அவர்கள் தங்கள் துறைசார்ந்த அதிகாரியிடம் தடையில்லாச்சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    ஊர்காவல் படையில் வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல் துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். ஊர்காவல் படை வீரர்க ளுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.560 வழங்கப்படும்.

    நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் இவைகளுக்குண்டான நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் புகைப்படம் அனைத்தும் எடுத்து வர வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
    • சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கு ஊர்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 67 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    இதில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

    அதில் 169 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், எடை பார்க்கப்பட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் தேர்வு செய்யப்ப ட்டார்கள். அவர்களின் நன்னடத்தை விவரங்களை சரிபார்த்த பிறகு காலியாக உள்ள 67 இடங்களில் 58 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
    • வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

    இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

    இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மட்டுமே வழங்கப்படும்.

    ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார் அட்டையின் நகல்கள் ஆகியவற்றுடன் இணைத்து வரும் 17.10.2022 அன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வில் கலந்த கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

    வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.

    ஆண்கள் மார்பளவு 81-86 செ.மீ ஆக இருக்க வேண்டும்.

    ஆண்/பெண் -100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.
    • வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    கோவை

    கோவை மேட்டுப்பா ளையத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண்.

    இவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார். இளம்பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படையில் வேலை பார்க்கும் 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து இளம்பெண் தனது மகள்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் தொடர்ந்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று தன்னுடன் பழகுமாறு தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் இளம்பெண் பழகுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

    சம்பவத்தன்று இளம்பெண் ஆஸ்பத்தி ரியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் இளம்பெண்ணிடம் தன்னுடன் பழகுமாறு தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து இளம்பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை அழைத்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரிடம் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தால் கைது செய்து நடவடிக்கை எடுத்து விடுவதாக எச்சரித்து அனுப்பினர்.

    • ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 10 - ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
    • சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 மட்டும் சேவை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட ஊர்காவல்படைப் பிரிவில் சேர்ந்து, சேவை செய்வதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

    ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்ட வராகவும், நல்ல உடற்தகுதி யுடனும் இருத்தல் வேண்டும்.

    குறைந்தபட்ச கல்வி தகுதி 10 - ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அரசு துறையில் பணி புரிபவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம்.

    தேர்ந்தெடுக்கப்படும் ஊர்க்காவல்படை ஆளினர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.

    அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 மட்டும் சேவை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    இப்பிரிவில் சேவை செய்ய விருப்பமுள்ள வர்கள், பயோடேட்டா, கல்வி மற்றும் வயது சான்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவினையும் வருகிற 30-ந் தேதி மதியம் 12 மணிக்குள் பாளையில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×