search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ஊர்காவல் படையில் தேர்வான 47 பேருக்கு பணி ஆணை
    X

    ஈரோடு ஊர்காவல் படையில் தேர்வான 47 பேருக்கு பணி ஆணை

    • ஈரோடு ஊர்காவல் படையில் தேர்வான 47 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது
    • பணி ஆணை பெற்ற 47 பேரும் ஊர்காவல் படை பிரிவில் இன்று முதல் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு, கோவில் பந்தவஸ்து உள்ளிட்ட பல்வேறு பணி களில் ஊர்காவல் படையி னர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி ஆகிய இடங்களில் ஊர்க்காவல் படை பிரிவு இயங்கி வருகிறது. ஊர்காவல் படை பிரிவில் காலியாக இருந்த 65 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோர ப்பட்டு, அதில் விண்ண ப்பித்த தகுதியான 9 பெண்கள் உட்பட 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சான்று, உடற்தகுதி சான்று உள்ளிட்ட பல்வேறு பரிசோ தனைகள் செய்யப்பட்டு, இறுதியாக சான்றிதழ் சரிபார்க்க ப்பட்டது.

    இதையடுத்து 47 பேருக்கும் ஈரோடு ஆணைக்கல்பா ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஊர்காவல் படையினரின் விதிகள், பணியாற்றும் விதம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கட்டளைகளை ஏற்பது, பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவது குறித்து விளக்கமும் அளிக்கப்ப ட்டது. இந்த பயிற்சியை நிறைவு செய்த 9 பெண்கள் உட்பட 47 பேருக்கும் ஈரோடு ஆணைக்கல்பா ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அணி வகுப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற 47 பேரும் ஊர்காவல் படை பிரிவில் இன்று இன்று முதல் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

    Next Story
    ×