என் மலர்
நீங்கள் தேடியது "Thanjavur"
- நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது
நெல்லை:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்காக பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
மொத்தம் 16 பெட்டிகளுடன் ஓடும் இந்த ரெயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
பாபநாசம்:
தேசிய நெடுஞ்சாலை யான தஞ்சாவூர் முதல் கும்பகோணம் சாலை 2015-ம் ஆண்டு புதியதாக போடப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளில், மராமத்து பணிகள் மட்டும் செய்து வருவதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தும், பகல் நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை, அருகில் வந்து பார்த்து விட்டு, உடனே பக்கவாட்டில் திருப்பும் போது பின் புறம் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரஹ மற்றும் பழமையான கோயில்கள் இருப்பதால், விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு "மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியு ள்ளோம்.
மிக விரைவில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தஞ்சாவூர்- கும்பகோணம் - அணைக்கரை சாலைகளை மேம்படுத்த ரூ.79 கோடி அனுமதித்துள்ளது.
இந்நிலையில், புதிய சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
தற்போது பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், வழுத்தூர் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாலைகளின் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.
வரும் ஜனவரி மாதம் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபக ரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்நடைபெற்றது.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவ ட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது.
இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
- வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மட்டுமே வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார் அட்டையின் நகல்கள் ஆகியவற்றுடன் இணைத்து வரும் 17.10.2022 அன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வில் கலந்த கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.
ஆண்கள் மார்பளவு 81-86 செ.மீ ஆக இருக்க வேண்டும்.
ஆண்/பெண் -100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
- இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் நல 50 கல்லூரி மாணவிகள் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.126.09 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், பாலாஜி, ஜெயக்குமார் மற்றும் குழுவினர் மாணவிகள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இந்த கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்தவரிடம் பணிகள் எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும்? தரமான முறையில் நடந்து வருகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்தனர்.
அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அந்த குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்து கிடங்கு, நாஞ்சிக்கோட்டை துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- நமது மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் கொள்ளிடம் கரையில் முன்னேற்பாடு பணிகளை அரசு தல்லமை கொறடா கோவி. செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர்அரசுதலைமை கொறடாகோவி.செ ழியன் அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது:-
காவிரி நீர்டிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.40 லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் திருவையாறு தாலுகா, விளாங்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி, கூடத்தூர், குடிக்காடு, பாபநாசம் தாலுகா சருக்கை, புது குடிசை, தட்டுமால், கும்பகோணம் தாலுகா குடிதாங்கி, மகாராஜபுரம், அணைக்கரை வரை உள்ள கொள்ளிடம் கரையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
தன்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் தன்படம் (செல்பி) எடுப்பதை தவிர்க்க வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் நிறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பணியினை பார்வையிட்டு பொதுமங்கள் வெள்ளம் வந்தால் தங்குவதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை பணியாக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், நமது மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய 6 தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, நீர்ளைத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் பூங்கொடி, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், தாசில்தார்கள் பழனியப்பன், (திருவையாறு), மதுசூதனன், (பாபநாசம்), தங்கபிரபாகரன் (கும்பகோணம்) மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த பர்வதம் என்ற பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
- ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா உத்தரவு படியும் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல்
நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி வழிகாட்டுதலின் படியும் ஒன்பத்து வேலி, நாகலூர், இடையிருப்பு ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மக்களுக்கான சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
முகாமில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர் தனசேகரன், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள் பற்றியும் சிவில் வழக்குகள், குடும்ப பிரச்சினைகள், வங்கிக்கடன் தொடர்பான பிரச்சனைகள், கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கான பிரச்சனைகள் ஆகியதற்கு வட்ட சட்ட பணிகள் குழுவின் மூலம் நீதிமன்றம் முறையல்லாமல் மாற்றும் முறையில் தீர்வு காண்பது பற்றி விளக்கமாக கூறினார்.
பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.
- விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்.
- மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்குகிறது. வருகிற 25 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
நாளை தொடங்கும் புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தகத் திருவிழா அரங்கை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா வரவேற்புரை ஆற்றுகிறார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் சிறப்புரை ஆற்றுகிறார்.
எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ராமலிங்கம் ,சண்முகம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்கு மார், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சை), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம்பூபதி, தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நன்றி கூறுகிறார்.
விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நாளை (15 ஆம் தேதி) மாலை 6:30 மணிக்கு நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் வரவேற்கிறார். தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன், பபாசி தலைவர் வயிரவன் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.வீடு வரை உறவு என்ற தலைப்பில் பிரபல டி.வி புகழ் கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா நன்றி கூறுகிறார். இதே போல் 16ம் தேதி மாலை 6:30 மணிக்கு 2-ம் நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றைய தினம் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.17-ம் தேதி மாலையில் சுகி.சிவம், சண்முகவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர்.
18-ம் தேதி மாலை மதுக்கூர் ராமலிங்கம், அருள் பிரகாஷ் ஆகியோரின் கருத்து சிந்தனையரங்கம் நடைபெற உள்ளது. 19-ம் தேதி மாலையில் மணிகண்டன், செந்தூரன், 20-ந் தேதி மோகனசுந்தரம், சுந்தர ஆவுடையப்பன், 21-ந் தேதி பர்வீன் சுல்தானா, புலவர் ராமலிங்கம், 22-ந் தேதி பாரதி பாஸ்கர், ஜெயம் கொண்டான் , 23-ந் தேதி ஞானசம்பந்தம், தாமோதரன் ஆகியோரின் சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது.
24-ந் தேதி மாலையில் திண்டுக்கல் ஐ. லியோனி குழுவினரின் சிறப்பு பட்டி மன்றம் நடைபெ றுகிறது. விழாவின் இறுதி நாளான 25ஆம் தேதி மாலை பேசும் புத்த கம் என்ற தலைப்பில் ஈரோடு மகேசின் சிந்தனைஅர ங்கம் நடைபெறு கிறது.
- நாளை காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
- இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களிலிருந்து முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.