என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durai Murugan"

    • தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
    • வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. 

    • உடல்நிலை எப்படி இருக்கிறது? பரவாயில்லையா? என்று விசாரித்தார்.
    • இருவரும் 2 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சட்டசபை கூட்டம் இன்று காலையில் நடைபெற்று முடிந்ததும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் வெளியே வந்தனர்.

    அப்போது அமைச்சர் துரைமுருகனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

    உடனே எடப்பாடி பழனிசாமி துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். உடல்நிலை எப்படி இருக்கிறது? பரவாயில்லையா? என்று விசாரித்தார். இருவரும் 2 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

    • நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.
    • தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    • மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்.
    • ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்

    தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடியதாக பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

    இதனையடுத்து, SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இ.பி.எஸ். வாய் திறக்காதது ஏன்? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, "திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதம் ஓடிவிட்டது. உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும் கூட்டணிகளும் பொய்யாக உருவாக்குகிறார்கள். இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.

    இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே... அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகின்றனர்..? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்..? அதிமுக பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாதென்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார். துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது. நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள்

    உண்மையிலேயே தில்லு, திராணி, தெம்பு இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளியிட்டால் நிச்சயம் கண்டிப்போம் சென்னை மாநகராட்சியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 வாக்கு நீக்கப்பட்டது. நீதிமன்றம் நாடி, மாவட்டச் செயலாளர்கள் புகார் கொடுத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. போலி வாக்காளர்களை நீக்கவில்லை. உடனே நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடி இப்போது நீக்கியிருக்கோம். ஒரு தொகுதியில் 27779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.

    பெரம்பூர் தொகுதியில் 12,085 வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக நாங்கள் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது. திநகர் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சி தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி முழுவதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது. இது உண்மை, ஆதாரபூர்வமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இது திமுகவின் பித்தலாட்டம்தானே? திமுக மக்களின் கட்சிக்காரர்களின் செல்வாக்கை இழந்துவிட்டனர். அதனால் 2006 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும்.

    சென்னை மாநகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஆனால் அன்று ஒப்படைத்தவரை கைது செய்தார்கள். கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தார்கள். இப்படிப்பட்ட கட்சிக்கு கட்சி எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது. அம்மா இருக்கும்போது சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது ஒன்றரை மணிநேரத்தில் 1200 ஓட்டுகளை பதிவுசெய்தார்கள் நீதிமன்றம் சென்றோம். ஒன்றரை மணிநேரத்தில் எப்படி இவ்வளவு ஓட்டு பதிவாகும் என்று கேட்டு, முறைகேடு தேர்தலை ரத்துசெய்தது நீதிமன்றம். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு நடந்தது. திமுக அரசாங்கமே அந்த தேர்தலை ரத்து செய்துவிட்டது.

    இன்று ஊழல் இல்லாத துறையே இல்லை. எதற்கெடுத்தாலும் பணம்தான். ஊழலில் ஸ்டாலின் அரசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பதன் மூலம் மட்டும் வருடத்துக்கு 5400 கோடி ஊழல் நடக்கிறது. மேலிடத்து உத்தரவு என்று சேல்ஸ்மேன் சொல்கிறார். இந்த நான்காண்டில் 22 ஆயிரம் கோடி ரூபாய் திமுக அரசு கொள்ளையடித்திருக்கிறது. 10 ரூபாய் மந்திரி செந்தில்பாலாஜி என்று மக்களே பெயர் வைத்துவிட்டனர்.

    போதைப் பொருள் விற்பனை சுனஜோராக நடக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொன்னதை முதல்வர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை. 2022ம் ஆண்டு காவல்துறை மானியம் வந்தபோது, கொள்கை விளக்க குறிப்பில் 20வது பக்கத்தில், பள்ளி கல்லூரிக்கு அருகில் 23418 பேர் கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்டது. ஆனால் கைதுசெய்யப்பட்டது 148 பேர், மற்றவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் திமுககாரர்கள். அப்புறம் எப்படி கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும்?

    ஸ்டாலின் அவரது கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது. காலையில் கண்விழிக்கும்போது எங்க கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என்று பதறிப்போகிறேன் என்கிறார். அவருடைய கட்சிக்காரரையே கட்டுப்படுத்த முடியாதவர், நாட்டில் குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்துவார்..? பொம்மை முதல்வரை பிடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். எந்த கேள்வி கேட்டாலும் பதிலே கிடையாது நான் சட்டமன்றத்தில் 2 மணி நேரம் 50 நிமிடம் பேசினேன். அப்போது அவர், இவ்வளவு நேரம் பேசிவிட்டீர்கள். நான் போய் பதிலுக்காக குறிப்பெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் பேச்சை நிறுத்திக்கொண்டேன்

    இவ்வளவு நேரம் ஏன் பேசுகிறேன்? ஆட்சியில் நடக்கும் குறைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இன்றுவரை மக்கள் போராடுகிறார்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என எல்லா தரப்பினரும் போராடுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. வீட்டில் உள்ளவர்களை மட்டும்தான் கவனிப்பார்.

    தமிழகத்தில் சூப்பர் முதல்வர் என்கிறார்கள். எதில் என்றால், கடன் வாங்குவதில் தான். இந்த ஐந்தாண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் சுமை உங்களிடம் தான் வசூல் செய்வார்கள். ஒருநாள் திமுக அரசு தமிழ்நாட்டையே கடன் வாங்கியதற்கு அடமானம் வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட காலம் வந்துவிடும்.

    எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது கடனை குறைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். ஆனால், அதற்காக அமைத்தார்களா.? கடன் வாங்குவதற்கே நிபுணர் குழு அமைத்தார்கள். பொருளாதார வளர்ச்சி 11.19% என்கிறார் புள்ளிவிவரம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த புள்ளி விவரத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?

    சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை போயிருந்தேன், பெண்களிடம் பேசினேன். இதற்கு என்னிடம் வீடியோ ஆதாரமே உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒருநாளைக்கு 700 800 ரூபாய் ஊதியம் கிடைத்தது, இந்த திமுக ஆட்சியில் 150 ரூபாய்தான் கிடைக்கிறது என்றார்கள். நீங்கள் புள்ளிவிவரம் சொல்கிறீகள் வெளியே வந்து நாட்டு மக்களைப் பாருங்கள் மக்கள் கஷ்டத்தை பார்த்து தெரிந்து பேசுங்கள் ஸ்டாலின்

    அந்தக் காலத்தில் மன்னர் அமைச்சர்களைப் பார்த்து, 'நாடு எப்படி இருக்கிறது?' என்று கேட்பார் உடனே அவர்கள், "நாடு சுபிட்சமா இருக்கிறது. மும்மாரி மழை பெய்கிறது' என்று பொய் சொல்வார்கள். அப்படி சொல்வதையே நம் முதல்வர் நம்பிக்கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. விலை குறைப்பதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்தது..? இதே அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் அமைத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவுத்துறை மூலமாக எங்க விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தோம். அண்டை மாநிலத்தில் இருந்தும் கூட வாங்கி வந்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்தோம். அப்படி ஏதாவது இ ஆட்சியில் செய்தார்களா? இப்போது கட்டுமானப் பொருட்களின் விலைய உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்போம்.

    அதிமுக ஆட்சியில் பொங்கல் அன்று பொங்கல் தொகுப்பு, 2500 ரூபாய் கொடுத்தோம். திமுக ஒழுகிற வெல்லம் கொடுத்தனர், திருவண்ணாமலையில் 2 டன் கெட்டுப்போன வெல்லம் வைத்திருந்தனர். திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அவற்றில் 98% நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தை 150நாளாக உயர்த்தவில்லை, ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை, கேஸ்மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மாணவர் கல்விக் கடன் ரத்து என்றெல்லாம் ஏராளமான திட்டங்களைச் சொல்லி, ஏமாற்றி கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சியில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். நலன காக்கும் ஸ்டாலின் என்று இப்போதுதான் மக்களை பற்றி சிந்திக்கிறார். பெயர் வைப்பதில் தான் அவர் பிரபலம். பெயர் வைப்பதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.

    அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தினோம். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார். அதுதான் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ குழு ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் அமைத்தோம். இப்படி அதிமுக ஆட்சியின் திட்டத்துக்குப் பெயர் மட்டும் மாற்றிவிடுகிறார்

    அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அவர்களில் 2818பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். திமுக ஆட்சியில் வேட்டி, சேலை கொடுப்பதில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியில் வேட்டி, சேலை உரிய நேரத்தில் கொடுப்போம். தீபாவளி அன்று பெண்களுக்கு சேலை கொடுப்போம். கொரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா பொருள் கொடுத்தோம், விலையில்லா உணவு கொடுத்தோம். மேலும் மாணவர்கள் நலன் கருதி ஆல்பாஸ் போட்டோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம்

    அதிமுக ஆட்சியில் நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்கிறார் ஸ்டாலின் இந்த சாத்தூர் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதை மட்டும் சொல்கிறேன், சாத்தூரில் அதிநவீன மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம். கல்லூரி கட்டிடம், வைப்பாற்றில் தடுப்பணை, பாலம், குடிநீர் திட்டம், 520 கோடியில் விருதுநகர் சாத்தூர் அருப்புக்கோட்டை தாமிரபரணி நீரை ஆதாரமாகக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம். இந்த நான்காண்டுகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு, அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோம். சாத்தார் வைப்பாற்றில் சாக்கரை கலக்காத வண்ணம், 50 கோடி மதிப்பீட்டில் பாதா சாக்கடை திட்டம் கொண்டுவந்தோம். கோட்டாட்சியர் அலுவலகம், அதிநவ.... மின் விளக்குகள், தரமான சாலைகள், ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனி நீர்த்தேக்கம் அமைத்தோம்" என்று தெரிவித்தார்.

    இப்போது நீங்கள் இருக்கன்குடி அணை, வெம்பக்கோட்டை அணை தூர் வாரவேண்டும் என்று கேட்டுள்ளீர்கள், அதிமுக ஆட்சியில் நிச்சயம் தூர்வாரப்படும். சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கேட்டுள்ளீர்கள். அதுவும் ஆட்சி அமைந்ததும் அமைக்கப்படும். ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். உங்கள் மற்ற கோரிக்கைகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார். 

    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ள மெளனம் சாதிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், திமுகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெறும்.
    • மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

    ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். 

    • திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு. சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ. (நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்) அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர்.
    • சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரை முருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தி.மு.க.வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் அதிகாரமிக்க பதவியாகும்.

    தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும்.

    கருணாநிதி, தி.மு.க. தலைவராக இருந்த கால கட்டத்தில் அவருக்கு பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன், பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியும் பக்கபலமாக இருந்தனர்.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சிக்கு தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீனியர் அமைச்சர் என்ற முறையில் துரைமுருகனை பொதுச்செயலாளர் ஆக்கினார்.

    கருணாநிதி காலத்து மரபை மீறாமல், பொதுக்குழு, செயற்குழு அறிவிப்புகளும், நிர்வாகிகள் நீக்கம், நியமனம் உள்ளிட்ட தகவல்களும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில்தான் வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக தற்போது இளைஞரணி செயலாளராக உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் அதிக செல்வாக்கு உள்ளது.

    அதனால் பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர். மூத்த நிர்வாகியான அமைச்சர் துரைமுருகன் இப்போது அண்ணா அறிவாலயத்திற்கு தினமும் வருவதில்லை. ஏதாவது முக்கிய ஆலோசனை நடைபெறும் பட்சத்தில் வந்து செல்கிறார்.

    சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இதில் துரை முருகனுக்கு கொஞ்சம் மனவருத்தம் உண்டு என்று கட்சியினர் பரவலாக பேசுகின்றனர்.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் துரைமுருகன் இடம் பெறவில்லை. இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த குழுதான் முக்கிய முடிவுகள் குறித்து பரிந்துரைத்து வருகிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் துரைமுருகன் பெயரளவில் பொதுச் செயலாளராக இருப்பதாகவும் அவருக்கு அந்த அளவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

    தி.மு.க. விதிப்படி புதிய தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் 2027-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    அந்த தேர்தலில் துரைமுருகன் விடுவிக்கப்பட்டு அந்தப் பதவிக்கு டி.ஆர்.பாலு அல்லது கே.என்.நேரு பொதுச்செயலாளராக வருவார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழலில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது போக போகத் தான் தெரியவரும்.

    • இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    • கல்வியாளர் அணியின் செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமனம்.

    திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் டி.எம்.என்.தீபக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.




     


    • கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
    • அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக 07.06.2025 அன்று காலை நடைபெறும்.

    இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பொன்.வசந்தை தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    • டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பொன்.வசந்த் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்தை தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பொன்.வசந்தை தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    மதுரை மேயரின் கணவரான பொன்.வசந்த் மதுரை மாநகராட்சி டெண்டர் விவகாரங்களில் அதிகளவில் தலையிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் ஆரம்பத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து தற்போது மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதியுடன் இணைந்து அவரது ஆதரவில் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பொன்.வசந்த் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.
    • தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக விஜய் விமர்சித்துள்ளார்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், கடந்த காலங்களில் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது குறித்து முதலமைச்சர் கூறிய காரணங்கள் அனைத்தும் தற்போதும் தொடர்வதாகவும் டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் காரணமாகவே, நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.

    அமலாக்கத்துறை சோதனை, வழக்குகள் குறித்து பிரதமரிடம் எதுவுமே பேசவில்லை என முதலமைச்சரால் வெளிப்படையாக கூற முடியுமா எனவும், நிதி ஆயோக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம், தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் விஜய் விமர்சித்து உள்ளார்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், தி.மு.க.வை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் கூறிய கருத்துக்கு தனது பாணியில் பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பச்சா இன் பாலிடிக்ஸ்" என்று தக் லைப் பாணியில் அவர் பதில் அளித்தார்.

    • சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா.
    • தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சாரதா தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா. இவர், இந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் அவர், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி மாநகராட்சி 65-வது கவுன்சிலரும், கிழக்கு மாவட்ட மகளிரணி வலைத்தள பொறுப்பாளருமான கு.சாரதா கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கவுன்சிலர் சாரதா, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்ததும் நினைவு கூரத்தக்கது.

    ×