search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durai Murugan"

    • ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.
    • என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    வேலூர்:

    வேலூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்க அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து மக்களிடையே ஒட்டு கேட்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குறுதி என்று எதுவும் குறிப்பிடாத பிரதமர் மோடி நான் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்கிறார்.

    எதற்காக எங்களை அழிக்க வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம். மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இனியும் செய்யப் போகிறோம்.

    இது போன்ற மக்கள் சேவைக்காக எங்களை அழிக்க போகிறார்களா? வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்றும் பிரதமர் சொல்கிறார்.

    நாங்கள் கட்சிக்காக பல தியாகங்கள் செய்துள்ளோம். சிறை சென்று இருக்கிறோம். எங்களைப் பார்த்து எங்கள் வாரிசுகளும் அரசியலுக்கு வருவது வாரிசு அரசியலா? பிரதமர் ஒரு சந்தேக வழக்கிலாவது சிறை சென்றுள்ளாரா? முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.


    இது சர்வாதிகாரி நாடு அல்ல. சமதர்ம நாடு. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. கடந்த முறை நடந்த சோதனையின் போது என் வீட்டில் இருந்தோ எனக்கு சொந்தமான இடங்களில் இருந்தோ ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்தீர்களா? எங்கேயோ எடுத்த பணத்தை வைத்து என் மீது பழி சுமத்தினீர்கள். இதனால் அந்த தேர்தல் நின்றது. மறுபடியும் தேர்தல் நடந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி சத்தியமும் வென்றது.

    இப்போதும் சொல்கிறேன். இதே போன்ற செயலுக்கான ஆயத்தங்களே நடக்கின்றன. எப்படியாவது கதிர் ஆனந்தை கைது செய்யுங்கள் என்று சில வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். என் மகனை சிறைக்கு அனுப்புவதற்கும் தயாராக இருக்கிறேன். இதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    நான் ஒழுக்கமாகவும் நாணயமாகவும் இருந்ததால்தான் ஒரே தொகுதியில் 12 முறை நின்றாலும் எனக்கு மக்கள் ஓட்டு போட்டனர். அது போல தான் என் மகனையும் வளர்த்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிப்பு.
    • 2 மாவட்ட தி.மு.க. செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

    சென்னை:

    தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில் துரை முருகன் கூறியிருப்பதாவது:-

    சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜெகதீஷனும் நியமிக்கப்படுகிறார்கள்.

    • காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.
    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

    அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். "காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே" என சட்டசபை வளாகத்தில் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.

    * உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    * காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

    • மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.
    • பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் கூறியதாவது:

    * காவிரி விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுகிறது.

    * காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் கவலை அளிக்கிறது.

    * மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்ட ஆணைய கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்? அதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும் என்று கூறினார்.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:

    * மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது.

    * நீர் பங்கீட்டு பிரச்சனைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    * ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை ஏதும் வரவில்லை.

    * தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.1-ந்தேதி கூட்டம் நடைபெற்றது.

    * கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

    * தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

    * மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    * மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.

    * மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    * மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    * கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு.

    * மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

    * தமிழ்நாட்டில் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது.

    * பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    * மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை.

    * மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது.

    * மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது என்று அவர் கூறினார்.

    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.
    • வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு வரும் 19-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

    * விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.

    * வரும் 19-ந்தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும்.

    * வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

    * ரூ.2000 செலுத்தி, தி.மு.க. வேட்பாளருக்கான விண்ணப்ப படிவத்தை கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

    • சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
    • இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளினையொட்டி, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3, சனிக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். பேரணியில் இந்நாள்-முன்னாள் அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம்.
    • தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.

    வேலுார்:

    பொங்கல் விழாவையொட்டி, தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தி.மு.க. தொண்டர்களை சந்தித்தார்.

    தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்தபோதும் மட்டுமின்றி, இப்போதும் கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக உள்ளார்.

    அவரிடமிருந்து தமிழகத்துக்கு சாதகமான வார்த்தைகள் வராது. இவர் தீர்ப்பாயம் அமைப்பதை எதிர்த்தார்.

    அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்துக்கு எதிராகத்தான் பேசுவார்.

    மோடிக்கு சாதகமாக பேசினால்தான் அவருடைய பிள்ளைகளால் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார். அதை பற்றி எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    தேவகவுடா ஆதாயத்துக்காக பேசுகிறாரோ அல்லது வெறுப்பாக பேசுகிறாரோ, எப்படி இருந்தாலும் தமிழகத்துக்கு எதிர்ப்பாகத்தான் பேசுவார்.


    அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க. சந்திக்கும்.

    இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போதுள்ள தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, "தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என பழனிசாமி கூறியுள்ளாரே" என கேட்டதற்கு, "அவர் எதிர்க்கட்சி, அப்படித்தான் கூறுவார்.

    என துரைமுருகன் பதிலளித்தார்.

    • ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு.
    • இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள்.

    திருச்சி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி-கரூர் பைபாஸ்சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. அணிகளுக்கான கருத்துரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    100 அடி உயர கொடிக்கம்பத்தை முதன்முதலில் இங்கு பார்த்து அசந்து போனேன். ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு. இது கலைஞரின் ரத்தத்தில் உருவான கொடி என பலமுறை பேசி உள்ளேன். 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி பறப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தி.மு.க. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடம் திருச்சி தான். திருச்சியை தலைநகராக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். எனக்கு அ.தி.மு.க. பிடிக்காவிட்டாலும், அந்த கருத்து பிடித்து இருந்தது.

    இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள். இந்தியாவின் தலைநகரம் ஐதராபாத்தில் தான் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தின் தலைநகரம் மத்தியில் தான் இருக்க வேண்டும். அதற்கு திருச்சி தான் சரியாக இருக்கும். அப்படியும் ஒரு காலத்தில் நிகழும். தி.மு.க.வுக்கு வந்த சோதனைகள் போல் மற்ற கட்சிகளுக்கு வந்து இருந்தால், இந்நேரம் அந்த கட்சிகள் அழிந்து போய் இருக்கும்.

    தி.மு.க. தொண்டர்கள் தான் கட்சியின் காவல் தெய்வங்கள். எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி தி.மு.க.தான். தற்போதைய தி.மு.க. தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமானால், அந்த தலைவரையும் எனது தோள் மீது வைத்து தாங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

    • ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார்‌.
    • 2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என சரளமாக மேடையில் பேசுவார்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அவர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    கழக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

    இதே போல ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார் .

    2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில்:-

    குடியாத்தம் குமரன் சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகளை அவதூறாக பேசி வந்தார். கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
    • தி.மு.க. இளைஞரணி 2-வது மாநாடு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-ம் தேதி காலை 10.30 மணியளவில் தி.நகரில் உள்ள அகார்ட் ஓட்டலில் நடைபெறும்.

    அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. தோன்றியதற்கு வேலூர் மாநகரம்தான் காரணம்.
    • பெரியார் இடத்திலும், வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்.

    சென்னை:

    வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாடு கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசும்போது, தந்தை பெரியார், மணியம்மையார் பற்றி பேசிய கருத்து சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூரில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில், தி.மு.க.வுக்கும் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்துக்கும் இருந்த தொடர்புகளை பற்றி நான் பேசிக்கொண்டு வரும்போது, தி.மு.க. தோன்றியதற்கு வேலூர் மாநகரம்தான் காரணம்.

    வேலூருக்கு பிரசாரத்துக்கு வந்த தந்தை பெரியார், மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணிகளை பார்த்த பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். எதிர்காலத்தில் கட்சியை காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். இது பொருந்தா திருமணம் என்று திராவிட கழகத்தில் இருந்து அண்ணா வெளியேறினார்.

    இதுதான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், 'பெரியார் மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்' என்று சொல்லவேண்டிய இடத்தில், 'பெரியார் மணியம்மையாரை கூட்டிக்கொண்டு போய்விட்டார்' என்று பேசிவிட்டேன். 'அழைத்துக்கொண்டு போனார்' என்பதற்கும், 'கூட்டிக்கொண்டு போனார்' என்பதற்கும் பலத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

    என்னுடைய இந்த பேச்சு, அண்ணன் வீரமணிக்கும், பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்றுக்கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில், அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெரியார் இடத்திலும், வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள்
    • காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று கோட்டூர்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பற்றலாம் என கருதுகிறோம்.

    தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள்.

    அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு. ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்த பிரச்சினை இல்லை. கண்ணை மூடி திறந்து விடுவார்கள்.

    தற்போதைய நிலையில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், தமிழகத்திற்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அருமையாக தெரிவித்து இருக்கிறது.

    மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை. எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். பேச்சுவார்த்தை என்பது இனிமேல் இல்லை. பேச்சுவார்தைக்கு போனால் நமது கோரிக்கைகளை மழுங்கடித்து விடுவார்கள். இனிமேல் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை.

    ×