search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Executives"

    • திருமங்கலம் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நகர தி.மு.க. சார்பில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனையின்பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், அவைத் தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணைச் செயலாளர் செல்வம், கவுன்சிலர்கள் வீரகுமார், திருக்குமார், சின்னசாமி, சாலிகா உல்பத் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலத்தில் நடைபெறும் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஏ.வ. வேலு வருகை-வரவேற்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    • நெற்குப்பையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பையில் தி.மு.க. பேரூர் சார்பில் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. நகர அவைத்தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

    உள்கட்சி செயல்பாடு குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக நமது பகுதியில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பேரூராட்சி சேர்மன் புசலான் வேண்டுகோள் விடுத்தார். நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிக் கொடியை நிறுவி அதற்கான செலவினங்களை தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    மாவட்ட செயலாளரின் ஒப்புதலோடு வருகிற நாட்களில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் ராமன், மாவட்ட பிரதிநிதி நடராஜன், முன்னோடிகள் ராசு, சேவுகன், நாகு, பாபு, பாதர் வெள்ளை,12-வது வார்டு பிரதிநிதி சேவுகன்.

    கவுன்சிலர் சின்னையா, வார்டு செயலாளர்கள் ரியாஸ் அஹமது, ராமு வெள்ளைச்சாமி, நகர துணை செயலாளர் போதும் பொண்ணு, நகர துணை இளைஞரணி வீரமணி, ஒன்றிய பிரதிநிதிகள் சாமிநாதன், பாண்டியன், மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன், நகர தொழில் நுட்ப அணி அமைப்பாளரும், 2-வது வார்டு கவுன்சிலருமான கண்ணன், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், மகளிரணி, என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    ×