என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக நிர்வாகிகள்"

    • இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    • கல்வியாளர் அணியின் செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமனம்.

    திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் டி.எம்.என்.தீபக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.




     


    • வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்யும் “உடன்பிறப்பே வா’’ தொடங்கியது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

    இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது.

    இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலின் பேசுகையில்," ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ''உடன்பிறப்பே வா'' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக, தனித்தனியாக பேசுவோம்.

    தி.மு.க. உடன் பிறப்புகளுடனான உறவு என்பது அரசியல் கட்சி என்ற அளவிலும், நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற அளவிலும் இருக்கும் தொடர்புகளை போன்றதல்ல.

    தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க.வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காத்து நிற்கக் கூடியவர்கள்.

    அப்படிப்பட்ட உடன் பிறப்புகளை கலைஞர் வழியில், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எளிமையாக உரையாட உள்ளேன்" என்றார்.

    இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசும் ''உடன்பிறப்பே வா'' நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

    இன்று காலையில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து உரையாடினார்.

    இந்த ஆலோசனையில் 3 தொகுதிகளையும் சேர்ந்த ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரூர் செயலாளர் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 7 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக அழைத்து, தொகுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசம் சென்றன. எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ''உடன்பிறப்பே வா'' என்னும் தொகுதி வாரியான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார்.

    அதன்படி சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய போது, ''வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    • தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும்.

    அனுப்பர்பாளையம்:

    2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது திருப்பூர் வடக்கு தொகுதி மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். பொதுமக்களிடம் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் எவ்வாறு அணுக வேண்டும். அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

    மேலும் தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார். குறிப்பாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 தொகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த வாக்கு சாவடிகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை கண்டறிந்து அங்கு வாக்கு வங்கியை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க.,-பா.ஜ.க. எந்தெந்த வாக்கு சாவடிகளில் வாக்கு அதிகம் வைத்துள்ளது, அங்கு நம்முடைய வாக்குகளை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். 

    • திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
    • திருமணம் செய்துகொண்டு, பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம்.

    அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை

    வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    21.5.2025 – புதன்கிழமை காலை 9.30 மணி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வரும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு. தெய்வச்செயல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அம்மாணவியை பின்தொடர்ந்தும், கைபேசி வாயிலாகவும் காதலிப்பதாகத் தொடர்ந்து வற்புறுத்தியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தொடர்ந்து டார்ச்சர் செய்தும் மிரட்டிய நிலையில் அம்மாணவி, `எனக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது' என்று தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து திமுக நிர்வாகி தெய்வச்செயல் வலுக்கட்டாயமாக அம்மாணவியை கடத்திச் சென்று தனது உறவினர்களுடன் சோளிங்கர் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு,

    பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு பெண், கல்லூரி மாணவியிடம் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு முன்பு திமுக நிர்வாகி தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும், மேலும், இந்த திமுக நிர்வாகி இதுபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள விபரத்தையும் தெரிவித்துள்ளார்.

    எனவே, கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், தவறான வழியில் ஈடுபடுத்த துன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை குஐசு பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, தான் கூறிய முழு விபரங்களையும் குஐசு-ல் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் பேட்டியை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன.

    திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கல்லூரி மாணவியின் புகாருக்கு உரிய நேரத்தில் முழு விபரங்களையும் குஐசு-ல் பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும்;, தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.5.2025 – புதன் கிழமை காலை 9.30 மணியளவில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும்,

    கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் திரு. திருத்தணி கோ. அரி, நுஒ. ஆ.ஞ., ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி

    துணை கொறடாவுமான திரு. சு. ரவி, ஆ.டு.ஹ., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.

    இந்நிலையில் இந்த கூட்டத்தில்," சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து, பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.

    திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது.

    அதனால், சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் தசரதபுரத்தில் நடைபெற்றது.
    • அங்கிருந்த பெண் காவலரிடம் 2 இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

    கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் சிலர் மது போதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தலைவர்கள் பேசும்போதே பின்னாலிருந்து கூச்சல் எழுப்பி கூட்டத்தில் பிரச்சனை செய்த அவர்களை அங்கிருந்த நிர்வாகிகள் கண்டித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தொடர்ந்து அவர்கள் ஆபாசமாக பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் தி.மு.க. நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

    பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், பெண் போலீசாரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகளை தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

    பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுகவினர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் அ.சுபேர்கானை (ராயப்பேட்டை) அப்பொறுப்பில் இருந்து விடுவிப்பு.
    • ஜாகிர் உசேன் (திருச்சி). தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆ.அங்கையற்கண்ணி. முன்னாள் எம்.எல்.ஏ. தேவ பாண்டலம் அஞ்சல், (சங்கராபுரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்), தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    எம்.ராஜகாந்தன், (சென்னை), ஆர்.வரதன், (சென்னை). நா. தமிழ்செல்வன். (சென்னை). பி.விஜயகுமார் (கடம்பன் குறிச்சி. மண்மங்கலம், கரூர்). சி.காசி. (வளையம்பாளையம், ஜலகண்டபுரம், சேலம்) ஆகியோர் தி.மு.க. தொழிலாளர் அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    த. சித்தார்த்தன் (கள்ளக்குறிச்சி), சூடப்பட்டி சுப்பிரமணியன் ஆகியோர் தி.மு.க. விவசாய அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    கணேஷ் குமார் ஆதித்தன் (திருநெல்வேலி) தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., (திருவொற்றியூர், சென்னை). தி.மு.க. மீனவர் அணி துணை தலைவராக மனோகரன் (நாகப்பட்டினம்), ஆர்.பத்மநாபன் (திருவொற்றியூர், சென்னை) ஆகியோர் தி.மு.க. மீனவர் அணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்,

    ஜாகிர் உசேன் (திருச்சி). தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    இரா. தாமரைச்செல்வன், (முன்னாள் எம்.எல்.ஏ. தருமபுரி). தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    எஸ்.ஏ. ரமேஷ், (மருந்தாளுநர் தேனாம்பேட்டை, சென்னை) ஆர்.திலகவதி ஜெயராஜ், (செவிலியர் மதுரை). ராஜேஷ்பாபு, துணை மருத்துவ பணியாளர் ராசிபுரம்), மன்சூர் அலிகான், (மருத்துவ தொழில்நுட்பஉதவியாளர், தாத்தப்பன் குளம் கம்பம்).

    செண்பகவிநாயகம், (சித்தமருத்துவர், சிவகிரி) ஆகியோர் தி.மு.க. மருத்துவ அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    கோவை செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செய்தித்தொடர்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் அ.சுபேர்கானை (ராயப்பேட்டை) அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அதற்கு பதிலாக தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப்பிரிவு செயலாளராகவும், ரபிஅஹமது (அண்ணாநகர், சென்னை). மு.சாகுல்அமீது (நாகை) ஆகியோர் தி.மு.க. சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர், (உமரிக்காடு தூத்துக்குடி). தி.மு.க. வர்த்தகர் அணி இணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏ.பாபு (கன்னியாகுமரி) தி.மு.க. அயலக அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏ.கே.பூபதி (மேலூர், மதுரை), எஸ்.ராம் குமார், (என்.ஜி.ஓ. காலனி, சூளை மேடு, சென்னை). சி.செல்ல துரை (ஓமலூர், சேலம்) ஆகியோர் தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    ஆர்.கோபால்ராம். (நொளம்பூர், சென்னை), எஸ்.கார்த்திக் (மூலனூர், திருப்பூர்), மு.வாசிம் ராஜா, (குன்னூர்), சுரேஷ் ஜே.மனோகரன் (மதுரை), நிவேதாஜேசிகா (வேளச்சேரி, சென்னை), வே.கவுதமன் (கலைஞர் நகர், சென்னை) ஆகியோர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர்களாக தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
    • தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

    முன்னதாக, நேற்று கோவை, சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
    • உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில், மதுரை, தேனி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    எ.வ.வேலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுரை, தேனி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

    • மிக அவசிய தேவையான குடிநீர், பால் தங்கள் பகுதிகளில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • தேவையான மருந்து மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பருவமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பருவ மழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.

    மிக அவசிய தேவையான குடிநீர், பால் தங்கள் பகுதிகளில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    வழக்கத்திற்கு மாறாக பெருமழை வந்தாலும், பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    தேவையான மருந்து மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தர ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    வழக்கத்திற்கு மாறாக பெருமழை வந்தாலும், பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தனியார் பள்ளி மாணவ- மாணவர்களை மைதானத்தில் நிற்க வைத்து ஹாப்பி பர்த்-டே உதய் அண்ணா என்று தி.மு.க. நிர்வாகிகள் சொல்ல சொல்ல மாணவர்களும் சொல்கின்றனர். அப்போது மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினின் கட்சி சார்ந்த புகைப்படத்தை கையில் ஏந்தி நிற்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இச்சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது. 



    ×