என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உத்திரமேரூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    உத்திரமேரூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    • முதலமைச்சருக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
    • தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் அவர் தி.மு.க. நிர்வாகிகளையும், தொகுதி வாரியாக அழைத்து பேசி வருகிறார்.

    உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் 234 தொகுதிகளிலும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை 42 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து உள்ளார்.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது 12 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உடன் பிறப்பே வா சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இன்று நடந்த சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூர் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு நிர்வாகியிடமும் அவர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    தி.மு.க. நிர்வாகிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தகவல்கள் சேகரித்து வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் நிர்வாகிகளிடம் கேள்விகளை எழுப்பி தொகுதி நிலவரம் பற்றி ஆய்வு செய்தார்.

    தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×