என் மலர்
நீங்கள் தேடியது "Uthiramerur"
- முதலமைச்சருக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
- தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் அவர் தி.மு.க. நிர்வாகிகளையும், தொகுதி வாரியாக அழைத்து பேசி வருகிறார்.
உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் 234 தொகுதிகளிலும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை 42 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து உள்ளார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது 12 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உடன் பிறப்பே வா சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.
இன்று நடந்த சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூர் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு நிர்வாகியிடமும் அவர் கருத்துக்களை கேட்டறிந்தார்.
தி.மு.க. நிர்வாகிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தகவல்கள் சேகரித்து வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் நிர்வாகிகளிடம் கேள்விகளை எழுப்பி தொகுதி நிலவரம் பற்றி ஆய்வு செய்தார்.
தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
உத்திரமேரூரை அடுத்த கன்னிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கடம்பநாதன். இவரது மகன் மோகன் (வயது 38). விவசாயி. இவர்களது வீட்டுக்கு மதுராந்தகத்தை அடுத்த அதிமனம் கிராமத்தை சேர்ந்த உறவினர் முரளி வந்து இருந்தார்.
பின்னர் முரளியை உத்திரமேரூரில் பஸ் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மோகன் சென்றார்.
திருப்புலிவனம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையை தாண்டும் போது பின்னால் வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோகன் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முரளிக்கு இரண்டு கால்களும் முறிந்தது. உடனடியாக முரளியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
விபத்தால் கோபம் அடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான மோகனுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். #Tamilnews






