search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Coordination Committee"

    • நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, வேட்பாளர் பட்டியல் என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    இந்த குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
    • உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில், மதுரை, தேனி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    எ.வ.வேலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுரை, தேனி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தமிழக காங்கிரசில் முகுல்வாஸ்னிக் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. #congress #parliamentelection #mukulwasnik

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பணிக்குழு, பிரசார குழு, விளம்பர குழு, ஊடக தொடர்பு குழு மற்றும் நிர்வாக குழுக்களை அமைக்கும்படி ராகுல் காந்தி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்திலும் இந்தகுழுக்களை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சஞ்சய் தத் முன்னிலையில் கடந்த வாரம் நடந்தது.

    ஆனால் ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படாததால் டெல்லியில் முகுல்வாஸ்னிக் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் குழுக்களுக்கான பட்டியல் தயாராகி இருக்கிறது.

    ஒருங்கிணைப்பு குழு முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், மற்றும் ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாணிக் தாகூர் உள்பட 10 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.

    தேர்தல் பணிக்குழுவில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 10 பேர் மற்றும் அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், சி.டி.மெய்யப்பன், நடிகை குஷ்பு, ஆரூண், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, கோபிநாத் உள்பட 20 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.

    பிரசார குழு தலைவர் பதவிக்கு இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளம்பர குழுவுக்கு வசந்தகுமார், தங்கபாலு, ஆகியோரது பெயரும் தகவல் தொடர்பு குழுவுக்கு கோபண்ணா, அழகிரி, விஜய தரணி, ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 5 பேர் கொண்ட நிர்வாககுழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, விஜயதரணி, அமெரிக்க நாராயணன், எம்.ஜோதி, இதயதுல்லா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, உள்பட 10 பேர் கொண்ட பெயர் பட்டியலும் தயாராகி இருக்கிறது.

    இந்த பெயர் பட்டியல்கள் அனைத்தும் ராகுல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி 22-ந்தேதி டெல்லி திரும்புகிறார். அவர் ஒப்புதல் அளித்ததும் அதிகாரப்பூர்வமாக பட்டியல் வெளியாகும். என்று கூறப்படுகிறது. #congress #parliamentelection #mukulwasnik

    ×