search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makkal neethi maiyam"

    • அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அதிக வாய்ப்பு.

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    அந்த வகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் தி.மு.க. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்குவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 21) சென்னையில் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தொடக்க விழாவை ஒட்டி இன்று கட்சி அலுவலகத்துக்கு செல்லும் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்று தெரிகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்து இருந்தார்.

    • 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

    தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.

    வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

    அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!

    வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, வேட்பாளர் பட்டியல் என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    இந்த குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனி தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்பதை உணர்ந்தார்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் தாமாக முன்சென்று தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு இதுவரை தேர்தலில் எந்த வெற்றியும் பெறவில்லை.

    சட்டசபை தேர்தலில் கோவைக்கு சென்று களம் இறங்கிய அவருக்கு தோல்வி தான் பரிசாக கிடைத்தது. என்றாலும் மனம் தளராமல் மக்கள் நீதி மய்யத்தை நடத்தி வருகிறார்.

    தமிழக அளவில் மிக குறைந்த அளவு சதவீத வாக்குகளே தனக்கு இருப்பதை உணர்ந்த கமல்ஹாசன் இனி தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்பதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தார்.

    நீண்ட ஆலோசனைக்கு பிறகு தி.மு.க.வுடன் நட்பாக இருப்பதற்கு காய்களை நகர்த்தினார். இதை கருத்தில் கொண்டுதான் ஈரோடு இடைத்தேர்தலில் தாமாக முன்சென்று தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியை கமல்ஹாசன் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

    ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

    காங்கிரசுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அடுத்து 3-ந்தேதி ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளுடன் பேச்சு நடத்த உள்ளன. ஆனால் இதுவரை கமல்ஹாசன் கட்சிக்கு தி.மு.க. தரப்பில் இருந்து எந்த அழைப்பும் விடப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், "தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கிறதா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தேர்தலில் போட்டியிட இடம் கேட்காமல் புதிய கட்சிகள் யார் வேண்டும் என்றாலும் கூட்டணிக்கு வரலாம்" என்று தெரிவித்தார்.

    இதன் மூலம் கமல்ஹாசன் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது என்பதை டி.ஆர்.பாலு சூசகமாக சுட்டிக்காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இது கமல்ஹாசன் கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போடப்பட்ட வழக்கில், இன்று கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் கமல்ஹாசன்  மனு தாக்கல் செய்திருந்தார்.

    அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.



    அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 20ம் தேதி வழங்கப்படும் என கூறி ஒத்தி வைத்தது. அதன்படி இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, கமலுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.


    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதையடுத்து, கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளார்.
    போபால்:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங் கூறுகையில், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறியுள்ளார்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் சொன்னதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று முதல் ஆளாக எச்சரித்து கடுமையாக விமர்சித்தார்.

    இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் சென்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்று  புகார் கொடுத்தனர்.

    இந்த புகார் மனுவில், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.



    அரசியல் கட்சியினர் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்று நடிகை கோவைசரளா பிரசார கூட்டத்தில் பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடிகை கோவை சரளா பிரசாரம் செய்தார்.

    திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது:-

    மக்களிடம் வாக்குக்கு பணம் கொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர். பணத்தின் மீது மக்களுக்கு ஆசையை தூண்டிவிட்டு அடிமையாக்கி வருகின்றனர்.

    இவ்வளவு காலம் ஆட்சி செய்தவர்கள் சாலை வசதிகள் கூட செய்துதரவில்லை.

    நாங்கள் அரசியல்வாதி கிடையாது. எப்போதும் மக்களோடு, குடும்பத்தினராக உள்ளோம். எங்களுடைய வேட்பாளர் மக்களுக்காக செயல்படவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வார்.

    தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல் கட்சியினர் ஏதும் செய்யாமல், தங்களது குடும்பத்தினர்களுக்கே சொத்து சேர்க்கின்றனர்.

    ஆட்சியில் இருக்கும் போது ஏதும் செய்யாமல் தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்தவர் தான் கமல்ஹாசன். அவரை பார்த்து சிலர், இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று நக்கல், நையாண்டி செய்கின்றனர்.



    கமல்ஹாசன் வரலாறு, புவியியல், அறிவியல் அனைத்தும் அறிந்து தனக்கு தகுதி உள்ளதா? என்று பார்த்து தான் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.

    கமல்ஹாசனை பார்த்து உங்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று கேட்பவர்கள் அனைவரும் பிறக்கும்போது அரசியல் கட்சியின் துண்டை போர்த்திக் கொண்டா பிறந்தார்கள்?

    இவ்வாறு அவர் பேசினார்.
    விருத்தாசலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய கமல்ஹாசன், என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக வாழ்வேன் என்றார். #KamalHaasan #makkalneethimaiyam

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாக்கு என்ற கூர்மையான ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். ஊழல் நிறைந்த சூழலை சுத்தப்படுத்துங்கள். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். நாங்களும் வராவிட்டால் குப்பை கூடிவிடும். தெருவானது குப்பைத் தொட்டியாக மாறிவிடும்.

    நான் தாமதமாக வந்தாலும் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்காகவே வாழ்வேன். என் பணம் புகழ் அனைத்துக்கும் நீங்கள்தான் பங்காளிகள். உங்கள் பணத்தில்தான் கஜானா நிரம்புகிறது என்பதை மறவாதீர்கள். பெருமுதலாளிகள் கோடீஸ்வரர்கள் வரி கட்டுவது கிடையாது.

    அவர்கள் கஜானாவை காலி செய்வதும், அதை நீங்கள் நிரப்புவதுமாக உள்ளது. உங்களுக்கு மீன் குழம்பு வைத்து கொடுக்க நான் வரவில்லை. தூண்டில் வாங்கித் தரவே விரும்புகிறேன்.

    நான் தமிழகத்தை சொர்க்கமாக மாற்ற வழி தேடுகிறேன். இது நான் சாவதுக்கு முன் நடக்க வேண்டும்.

    பதவி நிரந்தரம் இல்லை. அதே போல உயிரும் நிரந்தரம் இல்லை. அனைவரும் ஓட்டு போட வேண்டும். இங்கு கூடியிருக்கும் கூட்டம் எனக்கான கூட்டம் என நம்புகிறேன். இந்த கூட்டம் தமிழகத்தை சீர்திருத்த போதாது. இன்னும் பெருமளவு கூட வேண்டும்.

    ஓட்டுக்காக பணம் வாங்காதீர்கள். நேர்மையாக இருந்தால் ஓட்டு போடுங்கள். உங்கள் உதவி இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

    விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கழிவு நீர் சாக்கடை கலந்துள்ளது. நாம் சாப்பிடும் தட்டில் சாக்கடை உள்ளது. அதை சுத்தப்படுத்த அரசு தவறிவிட்டது. அதில் நமது தவறு உள்ளது. ஆறு ஓட வேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். செய்யாமல் விட்டதை பட்டியலிட்டு செய்து விட்டாலே நாடு முன்னேறும்.

    ஆறும், நீரும் பெருக வேண்டும். தாகம், பஞ்சம் பெருகக்கூடாது. அதனால்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஓட்டுக்கு கொடுக்கும் பணம் உங்கள் பணம். உங்கள் பையில் இருந்து எடுத்துதான் கொடுக்கிறார்கள்.

    நான் தமிழகம் முழுவதும் ‘சேஞ்ச்’ வேண்டும் என்று கூறினேன். ஆனால் அதனை சில்லறை என நினைத்து விடாதீர்கள். தலைவரை தேடாதீர்கள். நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும். மாற்றத்தை கொண்டுவரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவது நான் என்பதை விட நாம் என்பதை நம்புங்கள்.

    மாற்றத்தை உரு வாக்க நினைக்கும் என் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குங்கள். நான் சினிமாவில் சுமாராக நடிப்பேன். எனக்கு ஏதேனும் வேலை கிடைக்கும். ஆனால் நான் உங்களுக்காக வந்துள்ளேன். உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய என்னால் ஆனதை செய்கிறேன். நான் உயிரை தரவில்லை. உழைப்பையும், என் உணர்வையும், எனது நேர்மையையும் தருகிறேன். அதுவே எனது கடமை. உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். அனைவரும் வாக்களியுங்கள். உங்கள் பலத்தை காட்டுங்கள். அவ்வாறு செய்தால் எந்த கோட்டையிலும் ஏறிவிடலாம்.

    பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு சட்டம் கொண்டு வந்தது. அதனை நாம்தான் செயல்படுத்தி உள்ளோம். அதனால் விழிப்புடன் இருங்கள். உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள். நாங்கள் உங்களுக்கு பிடித்தது போல மாறுவது எங்களது கடமை ஆகும்.

    தமிழ் நாட்டில் முன்பு ஊழல் என்பது அதிக அளவுக்கு கிடையாது. வடமாநிலத்தவர்களை நாம் பார்த்து கேலி செய்தோம். ஆனால் இன்று பீகாரில் இருப்பவர்கள் நம்மை பார்த்து கேலி செய்கிறார்கள். அதனால் தமிழகத்தை மீண்டும் சொர்க்கமாக மாற்ற வேண்டும். உங்கள் நலன்தான் கொள்கை. அதனை கூறமுடியாது. செய்து காட்டினால்தான் புரியும். நம் கொள்கையை சொல்லுங்கள் எனக் கூறுகிறார்கள். சொல்லி விட்டால் காப்பி அடித்து விடுகிறார்கள்.

    கிராமசபை கூட்டம் தான் நம் பலம் என கூறினேன். ஆனால் அதனையும் காப்பி அடித்து விட்டார்கள். காப்பியடித்து என் வாலில் நெருப்பு வைக்காதீர்கள். அது உங்கள் கோட்டையை எரித்து விடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan #makkalneethimaiyam 

    நான் மிகவும் நேர்மையான அரசியல்வாதி. நடிப்பை விட்டு கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல என்று மாணவ- மாணவியர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். #kamalhaasan #makkalneethimaiyam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். வைஷ்ணவ கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கமல் பேசியதன் விபரம்:

    நான் இங்கு வந்தது பொது நலத்திற்காக. நாளைய தமிழகம் எங்கே இருக்கிறது என்று சிலர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால் எனக்கு தெரிகிறது நாளைய தமிழகம் இங்கே என்று. புதிய அரசியலை உருவாக்கும் கூட்டம் இது என்று நம்புகிறேன். நான் உங்களை போன்ற வயதில் பேசி இருந்தால் கிராமங்கள் இந்நேரம் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறி இருக்கும். அரசியல் என்றால் தெரு தெருவாக உண்டியல் குலுக்குவது அல்ல. அது கடமை.

    உங்கள் பிள்ளைகள் அற்புதமான தமிழ்நாட்டில் வலம் வர வேண்டும் அதற்கான விதையை நீங்கள் விதைக்க வேண்டும். பல்வேறு சாதனைகள் செய்ய முடியும் உங்களால் தமிழகத்திற்கு கை கொடுத்து தூக்கி விட முடியாதா? நாம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டால் கோழைகளின் ராணுவம் பயந்து நடுங்கும்.

    அரசியல் என் கடமை என் வேலை அல்ல. நான் மிகவும் நேர்மையான அரசியல்வாதி. நடிப்பை விட்டு கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல. அரசியலில் வந்து சேவை செய்ய வேண்டியது அல்ல. அது கடமை. சம்பளம் வாங்கிக்கொண்டு மேலும் சுரண்டினால் அது திருட்டு. திருடனுக்கு அளவுகோல் இல்லை.

    இங்கிருந்து தான் அரசியல் தொடங்கவேண்டும். நேர்மையான அரசியல் வேண்டும் என்று நினைப் பவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாங்கள் தத்தெடுக்கும் கிராமத்தில் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க உள்ளோம். அந்த வேலை முடிந்தவுடன் நானே அதை சுத்தம் செய்ய உள்ளேன். உங்களால் முடிந்தவரை அரசியலுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

    ஒரு கண்ணை அரசியலில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது இவ்வளவு அநியாயம் நடக்காது. சினிமாவிற்கு பின் என் கடமையை செய்யப்போகிறேன். சொன்னான் செய்தான் சென்றான் என்ற போது நான் எப்போதும் வாழ்ந்துக் கொண்டே இருப்பேன். திட்டம் கொள்கையை காப்பாற்றப்போராடுவது. அதை மாற்றினால் இலக்கை அடையலாம் என்றால் மாற்ற வேண்டும்.

    பொய் சொல்லக்கூடாது என்பது தான் எங்கள் முதல் கொள்கை. ஊழலை பெருக்கி வெளியில் தள்ள வேண்டும். அதற்கு பெரிய ஆயுதம் வேண்டும். அந்த ஆயுதத்தை தேடித்தான் இங்கு வந்துள்ளேன். கல்லூரி மாணவர்கள் முழுவதுமாக வாக்காளர் அட்டை வைத்துள்ளார்களா என்பதை சோதிக்கவேண்டும். எந்த கல்லூரி முதலில் செய்து முடிக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள். ஓட்டின் முக்கியத்துவத்தை 100 பேரிடமாவது எடுத்துக்கூற வேண்டும். யாராக இருந்தாலும் யோசித்து வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. நோட்டாவில் வாக்களிப்பது பெருமை அல்ல.

    நல்ல சாயல் தெரியும் போது உதவிக்கரம் நீட்டுங்கள். புதிய வாக்காளர்கள் இளம் வாக்காளர்கள் தான் என்னுடைய ஆயுதம். தமிழன் என்பது தகுதி அல்ல. முகவரி. இந்த அரங்கில் இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கின்ற பல இளைஞர்களும் முதல் முறை வாக்காளர்களாக இருக்கக்கூடும். நீங்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்வதை மிகவும் பொறுப்புணர்வுடன் செய்திட வேண்டும்.

    நான் அரசியல் கட்சி துவங்கியதற்கு முக்கிய ஊக்கசக்தியே இளைஞர்கள் தான். வாக்குகளை பணம் கொடுத்து வாங்க நினைப்பவர்களுக்கு எதிரான ஆயுதமே இளைஞர்கள் நீங்கள் தான். இன்று வாக்காளர் தினத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு கல்லூரியில் இருக்கும் மாணவ மாணவியரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்திட வேண்டும்.

    அதை பிற கல்லூரிகளில் படிக்கும் உங்கள் சக மாணவியரிடம் பகிர்ந்து அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய வைத்திட வேண்டும். இதை ஒரு போட்டியாக செய்திட வேண்டுகிறேன். எந்த கல்லூரி முழுவதுமாக அனைத்து மாணவியரையும் வாக்காளர்களாக பதிவு செய்து முடித்திடுகிறார்களோ அவர்களை பாராட்டி மரியாதை மக்கள் நீதி மய்யம் கட்சி செய்திடும்.

    இங்கு மாற்றுத் திறனாளிகள் பலர் இருக்கின்றனர். இவர்களை கருணையுடன் பார்க்க வேண்டும் என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நான் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். வியந்து தான் பார்க்கிறேன். இருப்பதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்கிறார்கள்.

    இவர்களுக்கு நீங்கள் பரிதாபமோ கருணை காட்ட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். தமிழக வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கும் வீல்சேர் வழங்குவதை எனது கடமையாக கருதுகிறேன்’.

    இவ்வாறு அவர் பேசினார். #kamalhaasan #makkalneethimaiyam 

    சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் மீது எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார். #hraja #kamal #makkalneethimaiyam #sabarimala

    சென்னை:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    முதல்-அமைச்சர் பினராயி விஜயன் இந்துக்களை மதிக்கவில்லை என பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சனம் செய்தார். தமிழகத்திலும் பா.ஜனதா மற்றும் சில இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை குறைகூற கூடாது என கூறி இருந்தார். இதை பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.


    அவரது பதிவில், “சபரி மலையை பொறுத்தவரை கேரள அரசை குறை சொல்லக் கூடாதாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். அப்படியானால் 2017-ல் பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே”.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #hraja #kamal #makkalneethimaiyam #sabarimala

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என்று கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார். #makkalneethimaiyam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாய நிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின் கோபுரங்களுக்காக, உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

    தமிழக விவசாயிகளின் நலன் பல்வேறு வகைகளில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பொன் கொடுக்கும் விவசாய பூமியின் மீது போர் தொடுக்கப்படுகிறது. கெயில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் என்று அனைத்து திட்டங்களிலும் விவசாயி நலன் மற்றும் விவசாய வளம் பாதிப்பிற்குள்ளாகியே வருகிறது.

    தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, அவர்களின் விளை நிலங்களும் அபகரிக்கப்பட்டு உயிர்விடும் சூழலில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் உயர்மின் கோபுரங்களுக்காகவும், விவசாயிகள் இன்னும் ஒரு இன்னலை, இந்த இக்கட்டான சூழலில் சந்திப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

    எப்பொழுதும் காட்டும் அலட்சியப்போக்கினை இம்முறையாவது அரசு தவிர்த்திட வேண்டும்.

    உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, அரசு பேச்சுவார்த்தைக்கு நேரில் அழைத்திட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து அவற்றை நிறைவேற்றிட வழி செய்திட வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழக விவசாயிகளுடன் என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #makkalneethimaiyam

    ×