search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது.
    • இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் உள்ள ஆ னைக்கொம்பன் தாக்கு தலைக் கட்டுப்படுத்திடவும் அதிக மகசூல் அடைந்திடவும் வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அ றிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது. இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதனுடைய புழுப்பருவம் பயிர்களை தாக்குவதனால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். இந்த கிளைப்புகள் வெண்மையாகவோ அல்ல து இளஞ்சிவப்பு நிறமாக வோ குழல் போன்று வெங்காய இலையைப் போல காணப்படும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போல் இருப்ப தனால் இது ஆனைக் கொம்பன் என்று அ ழைக்கப்படுகிறது.

    தாய்ப்பூச்சியானது நீள மான உருளை வடிவிலான ப ளப்பளப்பான முட்டை களை இலையின் அடிப்ப குதியில் இடும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற்பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயி ரில் நெற்கதிர்கள் உருவா காமல் விவசாயிகளுக்கு ம கசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.

    எனவே, வயல்களை க ளைகள் இல்லாமல் தூய்மையாக வைத்தி ருப்பதனாலும், புற ஊதா விளக்குபொறிகளை வைத்து கவர்ந்தும் அழிக்க லாம். தழைச்சத்து உரங்களை பரிந்து ரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தினால் இதன் தாக்கு தலில் இருந்து பாது காக்கப்படும். மேலும், இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை அளவை அதாவது (10 இலைக்கு ஒரு இலை வெங்காயத்தாள் ) விட பாதிப்பு அதிகமாகும்போது மகசூல் இழப்பு ஏற்படும்.

    இதை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்து களான கார்போசல்பான் 25 சதவீதம் பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி - 400 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதே னும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரி வாக்க மையத்தினை அணு கிட கேட்டுக் கொள்ளப்படு கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண்டபத்தில் தி.மு.க. வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாடுபட அறிவுரை வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வழிகாட்டுதலின் பேரில் நகர் தி.மு.க. சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் சாதிக் பாட்ஷா வரவேற்றார். கவுன்சிலர்கள் முகமது மீரா சாகிப், வாசிம் அக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகு மான் மரைக்காயர் கூட்டத் தில் பேசுகையில், ராமநாத புரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு அனைத்து வார்டு செயலாளர்களும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.மாவட்ட துணை அமைப் பாளர் கே.ஜி.சுகுமார், முன் னாள் பொருளாளர் குலாம், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், ஐ.டி. விங்க் இளையராஜா, வெள்ளைச்சாமி, பேபி, வார்டு செயலாளர்கள் தில்லை நிஷாந்த், கஜினி, ரவி, களஞ்சியம், கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி அயுப்கான் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
    • முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம் பெற்றுள்ள தி.மு.க. இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கருதுகிறது.

    எனவே அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளின் பலத்தை எடை போட்டு ஒவ்வொரு தொகுதியையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கட்சிகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பூத் கமிட்டிகள்தான். எனவே கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டிகளின் பலத்தையும் எடை போடுகிறது.

    காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சென்னை வந்த சோனியா, பிரியங்காவிடமும் கூடுதல் இடங்கள் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோனியா கட்சியை வலுப்படுத்தும் படி கூறினார்.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் இடங்களில் பலப்படுத்தவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டார். இந்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.

    தேர்தலுக்கான செயல் திட்டங்களை வகுக்க மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று மாவட்ட தலைவர்களுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக பூத் கமிட்டிகள் நிலவரம் பற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இன்றைய கூட்டத்தில் முக்கியமாக இதைப்பற்றி தான் ஆலோசிக்கிறோம். எங்கள் கையை நாங்கள் பலப்படுத்துகிறோம். பூத் கமிட்டிகளை பொறுத்த வரை குறைந்தபட்சம் ஒரு தலைவர் அவரின் கீழ் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஏற்கனவே 60 சதவீதம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டன. இன்றும் பலர் ஒப்படைப்பார்கள்.

    எனவே 85 சதவீதம் வரை நிறைவடையும் என்று கருதுகிறோம். 100 சதவீத பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த இலக்கை நோக்கி பணியை தீவிரப்படுத்து வோம்.

    முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளோம் என்றார்.

    கூட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டெல்லிபாபு, சிவராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன்குமார், அடையாறு துரை, ஊட்டி கணேஷ், கே..டி.உதயம் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள் கோபண்ணா, உ.பலராமன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
    • ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருப்பூர்: 

    திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சிறப்பு முகாமுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயாராகும் வகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரம்யா மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்காளரிடம் படிவங்களை கொடுத்து, பூர்த்தி செய்து பெறுவது, தேவையான ஆதார ஆவணங்களை பெற்று இணைப்பது. ஆன்லைனில் அவ்விவரங்களை பதிவேற்றம் செய்யும் முன் சரிபார்க்க வேண்டும். சிறப்பு முகாம் நாட்களில், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீலகிரி மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் பங்கேற்பு

    ஊட்டி,

    குன்னூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சிகள் பூத் கமிட்டி புத்தகங்களை நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

    இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழ உறுப்பினர் மாதன் மற்றும் மாநில, மாவட்ட சார்பணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரிய செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி தஞ்சாவூர், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவத்தைப் பற்றி ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் மொத்தம் 80 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழுவினை சிறப்பான முறையில் நடத்துவதற்கான வழிகளை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இப்பயிற்சி வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிகளுக்கு ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் வெங்கட்ராமன், குலோத்துங்கன், திருமுருகன், மதியழகன், பத்மவாதி, சுசித்ரா ஆகியோர் மாவட்ட கருத்தாளராக செயல்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பங்கேற்பினை அதிகரித்தல், துணை குழுக்கள் அமைத்தல், உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்தல் மற்றும் செயலி வழி பள்ளி மேம்பாட்டு திட்டமிடலை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சியானது நடை பெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு பற்றிய மேற்பார்வை மற்றும் துணை குழுக்கள் பற்றிய அறிமுகம் மேலும், பெற்றோர் செயலையும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டமும் நடந்தது. நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமிய நாராயணன், தமிழ்நாடு கல்வி பெல்லோவ்ஷிப் ஒருங்கிணைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.
    • போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.

    காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.

    இந்த சண்டையில் காசாவில் 4,104 குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்து 22 பேர் இறந்து விட்டதாக ஹமாஸ் சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத் தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.

    அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

    ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    காசாவில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காசா எல்லைப்பகுதிகளில் உடமைகளுடன் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    போரில் உயிர் இழந்தவர்களுக்காக ஜெருசேலத்தில் இஸ்ரேலியர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கருந்தலைப்புழுவால் பாதித்ததென்னை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை
    • 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் விவசாயிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தேங்காய் காய்த்த நிலையில் இலையில் கருந்தலைப்புழு தாக்கி தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இது குறித்து தகவல் அறிந்து, புழுதேரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் மற்றும் தலைவர் திரவியம், வேளாண் விஞ்ஞானி தமிழ்ச்செல்வன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வட்டார வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் இரவு நேரங்களில் விளக்கு பொறி வைக்கும்படியும், அதேபோல் ஒட்டுண்ணிகளை தென்னை மரங்களில் விட வேண்டும் என்றும் இது போல் தொடர்ந்து செய்து வந்தால் கருத்தலை புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது.
    • சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு, கரும்பாட்டூர், வடக்கு தாமரைகுளம் ஆகிய ஊராட்சிகளின்தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் நம்பி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் சாமிதோப்பு தலைமைபதி குருவும், தி.மு.க.வக்கீலுமான ஜனா யுகேந்த், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர்கள் பொன் ஜான்சன், தமிழன் ஜானி, வடக்கு தாமரைகுளம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், நிர்வாகி தாமரை பிரதாப், கரும்பை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.
    • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    மதுக்கூர்:

    காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.

    இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, போக்குவரத்து காவல்துறை சார்பில் அனைத்து வாகன உரிமையாளர்களையும் அழைத்து சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோ சனைகள் வழங்க வேண்டும்.

    மேலும், எவ்வித உரிமம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகனங்களை பறிமுதல் செய்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.