என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "medical camp"
- நல்ல மருது நினைவு தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடந்தது.
- 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் அவரது திருஉருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதில் மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தலைமையில் பகுதி செயலாளர் ஈஸ்வரன், கவுன்சிலர் போஸ் முத் தையா, வட்டக் கழக செயலாளர் பாலா என்ற பால சுப்பிரமணியன் கவுன்சிலர் வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கௌதம் போஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.
இதனைத் தொடர்ந்து 200 பேர் ரத்ததானம் வழங்கினர். பின்னர் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை சிறப்பு முகா மும் நடைபெற்றது. தொடர்ந்து 2000 பேருக்கு அன்னதானத்தை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. முன் னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநகர், புற நகர், பகுதி, வட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார்.
- நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நாமக்கல் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
இதேபோல் குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 288 பேர் பயன்பெறும் வகையில் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்க ளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோத னைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் டாக்டர் உமா பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார்.
- 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனை சூனாம்பேடு சுகாதார மையத்தில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட தேவாலயத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மருத்துவமனையின் மருத்துவ துறை மற்றும் பிம்ஸ் சுகாதார மையம் இணைந்து இலவச மருத்துவ முகாமினை
நடத்தியது. முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். அருட் தந்தை ஜோபி ஜார்ஜ் முன்னிலை வகித்தார்.ஊர் துணை தலைவர் தெய்வசிகாமணி, மற்றும் பழனி, ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகாமில் மருத்துவர்கள் பீட்டர் பிரசாந்த், அச்சு ஜார்ஜ், ஹெனா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர். 97பேருக்கு சர்க்கரை பரிசோதனை மற்றும் 8 பேருக்கு கர்ப்ப பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 47 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
- முதுகுளத்தூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
- ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார்.
பசும்பொன்
முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றறது. சிக்கல் கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் அரவிந்த் (சிக்கல்), அரவிந்தன் (சாயல்குடி), கால்நடை ஆய்வாளர்கள் ரெஜினாராணி, உஷா, கால்நடை உதவியாளர் பாலதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.
- நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது
- மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். சப்- கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் இனியன் வரவேற்றார். இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
மேலும் மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகளிடமிருந்து அனைத்துத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது.
கண் மருத்துவ பிரிவு, காது-மூக்கு-தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, குழந்தை நலப்பிரிவு, மன நோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
- வருகிற 23-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2023-2024 நிதியாண்டில் பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் எளிதில் எவ்வித சிக்கல்கள் இன்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைய ஏதுவாக பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வாணியம்பாடி வருவாய் உள் வட்டத்தில் இஸ்லாமியா கல்லூரி அருகில் அமைந்துள்ள அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வருகிற 23-ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதியதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமாநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- கலெக்டர் விஷ்ணு சந்திரன் பரிசோதனை செய்து கொண்டார்
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன் னிலை வகித்தார்.
இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை மருத்து வம், தோல் சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், தொடர் பான அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மேல் சிகிச்சை தேவைப்படு பவர்களுக்கு ஆலோசனை களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தின குமார், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடை பெற்றது.
- சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
இந்தியா மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை 8- வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவப்பிரிவால் நடத்தப்படும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் தஞ்சை வடக்கு வீதியில் நடை பெற்றது.
முகாமிற்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இதில் அனைத்து மூட்டு வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சளி, இருமல், ஆஸ்துமா, ஜூரம் உள்னிட்ட சுவாசக் கோளாறுகள் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளிட்ட அனைத்து தோல் நோய்கள், இதயம் மட்டும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பலஹீனம், ரத்தச் சோகை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கருப்பைக்கோளாறு மற்றும் பெண்களுக்கான நோய்கள், அயிற்றுப்புண், பசியின்மை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானக் கோளாறுகள், சர்க்கரை, உப்பு நீர், இரத்தக் கொதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் சித்த அலுவலர் குணசேகரன், தஞ்சை மருத்துவ கல்லூரி ஆயுர்வேத மருத்துவர் கஜேந்திரன், மூத்த ஆயுர்வேத மருத்துவர் நாராயணன் சங்கீதா ஆயுர்வேத மருத்துவர் பபிதா, கிருத்திகா யோகா மருத்துவர் பழனிசாமி, மற்றும் ஆறுமுகம் கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், இந்திரஜித், மண்டல தலைவர் புண்ணியமூர்த்தி, சதாசிவம் மற்றும் ஆயுர்வேத துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
- 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கம், திருப்பூர் மாநகராட்சி நடமாடும் தொழிலாளர்கள் மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்குவாரி தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
இதற்கு திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரணம்பேட்டை கல் குவாரி சங்க தலைவர் குணசேகர் முன்னிலை வகித்தார். செயலாளர் தேவராஜ் வரவறே்று பேசினார். கல்குவாரி தொழிலாளர்களுக்கு டாக்டர் அபிராமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் கல்குவாரி சங்க துணைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர், நடராஜ், மற்றும் கல்குவாரி தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புல்லாணியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
- தாதனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்றார்.
கீழக்கரை
ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி.ஆர் பள்ளப்பச்சேரி ரோட்டில் பி.வி.எம் மனநலக்காப்பகம் திறப்பு விழாவை முன்னிட்டு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 5-ந் தேதி நடக்கிறது.
ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் சர்க்கரை நோயாளி களுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது.
பி.வி.எம் அறக்கட்டளை போர்டு சேர்மன் சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் இணைத் தலைவர், இளம் வள்ளல் புருணை தொழிலதிபர் ஹாஜி எஸ்.டி.ஷாஜஹான் வழிகாட்டுதலின் படி,
பி.வி.எம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை படி நடைபெறும் இந்த முகாமிற்கு பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாநில தலைவர் சமூக சேவகர் யாசர் அரபாத் தலைமை வகிக்கிறார்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்.திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியன், திருப்புல்லாணி ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரமாலா, ஐ.மு.மு.க மாநில செயலாளர் அன்வர் அலி, தொண்டரணி மாநில பொருளாளர் அகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவரும், புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் எடிட்டரும், பி.வி.எம் அறக்கட்டளை சேர்மனும், பி.வி.எம். மனநல காப்பகம் நிறுவனருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் முகாம் அறிமுக உரை நிகழ்த்த உள்ளார். ராமநாத புரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி, திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்க உள்ளனர்.
பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாவட்ட தலைவர் அபுல்ஹசன், மாவட்ட செயலாளர் ஷாநாஸ் கான், மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் எம்.யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஹபீப் ரஹ்மான், முஹம்மது கனி, ஜாபர், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது யூனுஸ் கான், நகர் துணை செயலாளர் சிவராஜா, நகர் செயலாளர் மன்சூர், நகர் பொருளாளர் சபரிநாதன், தி.மு.க தலைமை கழக சொற்பொழிவாளர் முஜிபுர் ரஹ்மான் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.