என் மலர்
நீங்கள் தேடியது "Minister"
- கமுதி, கடலாடி வட்டங்களில் ரூ.29.21 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி வட்டங்களில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற் காக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கமுதி வட்டம் கோட்டை மேடு பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்ததை யொட்டி அங்கு ரூ.7 லட்சத்து 63 ஆயிரத்து 105 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப் பட்டு செயல்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட் டுள்ளது.
இதன் மூலம் 142 வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும். அதே போல் கீழவலசை பகுதி யிலும் ரூ.12 லட்சத்து 600 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் 82 வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்கள் தடை யின்றி செயல்பட பயனுள்ளதாக இருக்கும்.
கடலாடி வட்டம், கீழச்செல்வனூர் ஊராட்சியில் ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 80 மதிப்பீட்டில் மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இங்கு 56 வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு மின்மோட்டார்கள் தடையின்றி செயல்பட பயனுள்ளதாக இருக்கும்.
இதே போல் பொது மக்களின் தேவைக்கேற்ப மின்மாற்றிகள் பல்வேறு கிராம பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மக்களின் தேவையை அறிந்து சாலை வசதி, பஸ் வசதி, குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, மின் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் ரெஜினா, உதவி பொறியாளர்கள் சாதிக், விஜயா, முகமது இப்ராகிம், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 600 படுக்கைகளுடன் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட இருக்கிறது.
- மொத்தம் 1,170 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.127 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் சாந்திமலர் வரவேற்றார்.
புதிய கட்டிடத்தில் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கல்லூரிகளில் மருத்துவ சேவை தொடங்கப்படாமல் இருந்தது. அதற்கான கட்டுமான பணிகளை தமிழக அரசின் சார்பில் கூடுதல் நிதியை ஒதுக்கி பணிகளை நிறைவுபடுத்தியதால் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.நாமக்கல், ஊட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட உள்ளது. 2, 3 மாதங்களில் அந்த பகுதிகளில் 500 மற்றும் 600 படுக்கைகளுடன் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த மருத்துவமனை 500 படுக்கைகளுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மொத்தம் 1,170 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளது. நாளொன்றுக்கு புறநோயாளிகளின் எண்ணிக்கை 2,700 பேர், உள்நோயாளிகளாக 700 பேர் வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.98 கோடியே 88 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.
திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசிடம் அமைச்சர், எம்.எல்.ஏ. ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆண்டுக்கு 100 பேர் பயிற்சி முடிக்கும் வகையில் ஏற்படுத்த கூறினார்கள். இதுதொடர்பாக மத்திய மந்திரியிடம் வலியுறுத்தினோம். 30 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க கோரினோம். 11 இடங்களில் புதிதாக செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அமைய உள்ளது. திருப்பூரில் 100 மாணவியர் சேர்க்கையுடன் செவிலியர் பயிற்சி கல்லூரி மிக விரைவில் அமைய உள்ளது. அந்த கல்லூரிக்கு ரூ.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை என்பது பாராட்டுக்குரியது. வருமுன்காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் கிடைத்து வருகிறது. திருப்பூரில் பொதுமக்கள் பங்களிப்புடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நிதி உதவி அளித்து வருகிறார்கள். விரைவில் அரசின் பங்களிப்பு நிதியுடன் ரூ.30 கோடியில் நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளது' என்றார்.அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார–கள். முடிவில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் நன்றி கூறினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ம.தி.மு.க. அவைத்தலைவரான சு.துரைசாமி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) தலைமை பொறியாளர் இளஞ்செழியன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்ட நிர்வாகி திலகராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் நேரு இன்று தொடங்கி வைக்கிறார்.
- கொரோனா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப்படும் சூழ்நிலை உருவானது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கடந்த 2012-ம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சரால் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அப்பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
அதன்பின் ராஜபாளையம் தொகுதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தங்கப்பாண்டியன் பொறுப்பேற்றவுடன், அம்ரூத் திட்டத்தில் மத்திய-மாநில அரசு மானியத்தின் கீழ் 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 110 விதியின் கீழ் மீண்டும் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் பணீந்திரரெட்டியிடம் எம்.எல்.ஏ. சென்று மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தி அனைத்து முயற்சிகளும் செய்து ராஜபாளையம் நகருக்கு ரூ172.70 கோடி மதிப்பில் மேற்கண்ட திட்டத்திற்கு 30-1-2017 அன்று அரசாண வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக ராஜபாளையம் நகரில் 11 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பட இருந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கப் பாண்டியன்.எம்.எல்.ஏ தலைமையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பூமி பூஜை நடை பெற்றது. தங்க பாண்டியன் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் பணியில் தொய்வு ஏற்படும் போது அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு திட்டப் பணியை விரைவுப்படுத்தினார். அதன்பின் ஒப்பந்த தாரரின் தனிப்பட்ட பிரச்சினையாலும், கொரோ னா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப் படும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதல் அமைச்ச ராக பொறுப்பேற்ற வுடன் திட்டப்பணிக்கு மீண்டும் செயல்படுத்த தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண் டார். அதன்படி நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவையும், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவிடமும் பேசி திட்டப்பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விரைவு படுத்தினார்.
தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று (26-ந்தேதி) மாலை 6 மணியளவில் சங்கரன் கோவிலில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
ராஜபாளையம் மக்களின் நீண்டநாள் கனவான தாமிரபரணி குடிநீர் வந்தடைந்தவுடன், ஆளுயர மாலையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு வெற்றி மாலையாக அணிவித்து மகிழ தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.
- திருவேடகத்தில் ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா- சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமணத்தை அமைச்சர் பி.மூர்த்தி நடத்தி வைத்தார்.
- சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரியேந்தல் டி. ண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த திருமணம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
விழாவிற்கு வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்றனர்.
ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, சோழவந்தான் ஒன்றிய கவுன்சிலர்-பேரூர் செயலாளர் எஸ்.என். சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காருக்குள் இருந்த 5 இளைஞா்களும் படுகாயமடைந்தனா்.
காங்கயம் :
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சோ்ந்தவா்கள் கௌதம் (வயது 27), பிரகாஷ் (32), மணிகண்டன் (29), குமாா் (32), மோகனசுந்தரம் (17). இவா்கள் கொடைக்கானல் சென்று விட்டு எடப்பாடி நோக்கி தாராபுரம்-காங்கயம் வழியாக காரில் புதன்கிழமை மதியம் வந்து கொண்டிருந்தனா். மாலை 4 மணி அளவில் தாராபுரம்-காங்கயம் சாலை ஊதியூரை அடுத்த நொச்சிபாளையம் அருகே உள்ள சாலை வளைவுப் பகுதியில் வந்தபோது காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 5 இளைஞா்களும் படுகாயமடைந்தனா்.
அப்போது அந்த வழியாக தாராபுரத்துக்கு சென்று கொண்டிருந்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோா் அப்பகுதியில் காா் விபத்தில் சிக்கிக் கொண்டதை அறிந்து உடனடியாக காரை விட்டு இறங்கிச் சென்று, காயங்களுடன் இருந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிரகாஷ், கௌதம் ஆகியோா் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.விபத்து குறித்து ஊதியூா் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
- ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்கள் பயனாளிகளை முழுமை யாக சென்ற டையவில்லை.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரி யத்தலைவர் பொன்குமார், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழி லாளர்கள் என மொத்தம் 362 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த அரசு பொறுப்பு வகித்த 10 ஆண்டுகால ஆட்சியில் தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்கள் பயனாளிகளை முழுமை யாக சென்ற டையவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ஏதும் உயர்த்தி வழங்கப்பட வில்லை. முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற வுடன் ஏறத்தாழ 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக் கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிலுவையில் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட பயனாளி களுக்கு உடனடியாக சென்றடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் சம்பந்தப்பட்ட பயனாளி களுக்கு முழுமை யாக சென்றடைய இந்த திராவிட மாடல் அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர்.
- காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
குண்டடம் :
குண்டடத்தில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறையின் சார்பில் 142 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 33 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் என மொத்தம் 175 பட்டாக்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.அரசு பொறுப்பேற்று இரண்டு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இதில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் குறிப்பாக தாய்மார்களுக்கு அரசு பஸ் கட்டணம் இல்லாத பயணம் என்கிற திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொடுமுடி முதல் ருத்ராவதி பேரூராட்சி வரை செயல்பட்டு வருகிறது.காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் குண்டடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மயில்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- 4700 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில் :
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர்பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில்நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது :- வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் 1 லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமேல்நிலைத் தொட்டியிலிருந்து சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில்மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன் என்றார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர்குமரேசன்,வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சிபொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்' என்றார்.
பின்னர் 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார். முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
- 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.20.30 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.41.53 கோடியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி பகுதியில் குடிநீர் மேம்பாட்டுப்பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பதுமன் குளம் மேம்பாட்டு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிக்குட்பட்ட மூர்த்திரெட்டிபாளையம் பகுதியில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், கோட்டைமேடு பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், ஏ.சி.நகரில் ரூ.5.20 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், காங்கயம் நகராட்சி தண்ணீர் தொட்டி வீதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளையும், பதுமன் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பதுமன்குளம் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், ஆணையாளர் வெங்கடேஸ்வரன், காங்கயம் தி.மு.க நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.