search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohammad azharuddin"

    • கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெளி மாநிலங்களில் இருந்து பிரபலங்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, கோமதி ரெட்டி ராஜகோபால ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசார பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி தமிழ்நாடு, அருணாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.

    இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் விரைவில் தமிழகத்திற்கு வருவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முஹம்மது அசாருதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #MohammadAzharuddin #TelanganaCongressCommittee
    புதுடெல்லி:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.


    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரசார கூட்டங்களில் பேசி தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #MohammadAzharuddin #TelanganaCongressCommittee
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர்கள் சிலிப் பகுதியில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாவது:- #ENGvIND
    சிலிப் பகுதி என்பது முக்கியமான இடமாகும். அங்கு நிற்கும் வீரர்களை பயிற்சியின்போது கண்டறிய வேண்டும். நீண்ட நேரம் பயிற்சி செய்து 50 முதல் 60 கேட்ச் வரை பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டறிந்து சிலிப் பகுதியில் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் நிற்கும் வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு வைத்திருக்க வேண்டும். சில சமயம் பந்து மிகவும் தாழ்ந்து வரும் அதுபோன்ற நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பந்து தலைக்குமேல் செல்லும் போது பாய்ந்து பிடிக்க வேண்டும். இதற்கு நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சின்போது சிலிப் பகுதியில் நிற்கும் வீரர் பந்தை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.


    3-வது வீரராக களம் இறங்கும் புஜாரா இங்கிலாந்துக்கு முன்பாகவே வந்து கவுன்டி போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் ரன்களை குவிக்கவில்லை. வெளிநாட்டில் விளையாட புஜாரா திணறி வருகிறார். ஆனால் லோகேஷ் ராகுல் வெளிநாட்டு மைதானத்தில் சிறப்பாக விளையாடுகிறார்.

    லோகேஷ் ராகுல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் அணியில் நீண்ட காலம் விளையாடுவார். அணியில் நிரந்திரமாக இடம் பெற அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. #ENGvIND #1000thTest #Azharuddin
    நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கூறினார். #MohammadAzharuddin #IndianCricketCaptain
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பின்னர் 2014-ம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தானின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செகந்திராபாத் தொகுதி மக்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். இந்த தொகுதியில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். இங்குள்ள ஏராளமான கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பிற மக்களிடம் பேசினேன். அப்போது அவர்கள், தங்கள் தொகுதியில் நான் போட்டியிடுவதை வரவேற்றனர்.

    இந்த தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமையிடமும், மாநில பொறுப்பாளரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். நான் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவதையே கட்சியும் விரும்புவதாக நினைக்கிறேன். எனினும் இங்கு நான் கேப்டன் இல்லை. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கட்சிதான்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த முறை போட்டியிட்ட போதும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் எப்போதும் உங்களால் பாதுகாப்பாக விளையாட முடியாது. எப்போதும் பாதுகாப்பான விளையாட்டை விரும்பும் நபர் நான் இல்லை.

    இவ்வாறு அசாருதீன் கூறினார்.

    முன்னதாக, தெலுங்கானாவில் இருந்து பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் அசாருதீன் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலப்பிரிவு அவருக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.  #MohammadAzharuddin #IndianCricketCaptain #tamilnews 
    இந்திய தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார். #YoYoTest
    இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்றால் வீரர்கள் கட்டாயம் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். குறைந்தது 16.1 புள்ளிகள் பெற வேண்டும். இந்திய சீனியர் மற்றும் இந்தியா ‘ஏ’ கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த அணிகளில் இடம் பிடித்திருந்த அம்பதி ராயுடு மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனது.

    அதேபோல் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி யோ-யோ டெஸ்ட் தோல்வியால் அணியில் இடம்பெறவில்லை.

    இதனால் யோ-யோ டெஸ்ட் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் வீரர்கள் தேர்விற்கு முன்பே யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.



    இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.

    ஆனால், அணியில் தேர்வானபின், யோ-யோ டெஸ்டால் அவரது வாய்ப்பு பறிபோகியுள்ளது. அணி தேர்வுக்கு முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை எல்லோருக்கும் தர்மசங்கடமாக உள்ளது’’ என்றார்.
    ×