என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP government"
- கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
- எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், மக்களை ஏமாற்றி, திசைதிருப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், பிரதமர் மோடி விளம்பரத்திற்காக மட்டும் கோடி கணக்கில் செலவு செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி முன்னதாக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் (2014- 2024) மோடி அரசு தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ரூ.2,974 கோடி செலவிட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சியை தவிர, எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.
இதற்கிடையே, பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர் விளம்பரம், ரெயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு பாஜக அரசு செலவிட்ட தொகை விவரம் வெளியாகவில்லை.
- ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சறற் நினைக்கிறது பாஜக அரசு.
- ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு.
இது அப்பட்டமான பொய்க்கணக்கு!
இதில் இரண்டு கூறுகள் உள்ளன:
1) மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.
மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.
இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!
2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.
இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?
இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,
ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,
சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.
இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!
தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?
எங்கள் காதுகள் பாவமில்லையா!
- வேலையில்லாமைப் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்
- பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்
வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனந்த நாகேஸ்வரன் நேற்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"வேலையில்லாமைப் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்
இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பா ஜ க அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்
வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாக சிதைத்துள்ளனர்.
- தான் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது.
நாடாளும் மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாக சிதைத்துள்ளனர்.
இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்.
திமுகவின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது.
மதவெறி அரசியில் நடத்தும் பா.ஜ.கவை கருத்தியல் ரீதியாக, செயல்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநில கட்சியான திமுகவுக்கு உள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை தூங்க விடாமல் செய்கிறது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்.
அதனால், தான் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை அவர்கள் விமர்சிக்கிறார்கள்.
இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனை காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
அரசியல் கருத்துகளை- கொள்கை முரண்பாடுகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வலுவோ, நேர்மையோ இல்லாதது மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு.
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை இவற்றை ஏவி, தனக்கு எதிரான இயக்கங்களை நசுக்கிவிடலாம் என வன்மத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடி, ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்படுகிறது.
இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனை காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2022 தேர்தலில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க.
- கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகி விடும்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.
தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.
இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.
இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.
#WATCH | Dehradun: In the Uttarakhand Assembly, CM Pushkar Singh Dhami speaks on UCC, "The Uniform Civil Code will give the right to equality to everyone without any discrimination on matters like marriage, maintenance, inheritance and divorce... The UCC will mainly remove the… pic.twitter.com/DKnANXBmsN
— ANI (@ANI) February 7, 2024
இன்று, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இனி கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகி விடும்.
மசோதா வெற்றிகரமாக சட்டசபையில் நிறைவேறியதை பா.ஜ.க.வினர் சட்டசபைக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.
#WATCH | Women BJP workers dance and celebrate outside the Uttarakhand Assembly in Dehradun.
— ANI (@ANI) February 7, 2024
CM Pushkar Singh Dhami's reply to the discussion on Uniform Civil Code (UCC) Bill is underway in the House. pic.twitter.com/1oNgalESfG
சிவில் விஷயங்களில் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டதுதான் பொது சிவில் சட்டம்.
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் ஆனது.
இதனால், வரும் ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலிலும் நாடு முழுவதும் பா.ஜ.க. அணியினருக்கும், காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் அணியினருக்கும், இரு அணிகளிலும் சேராத கட்சிகளுக்கும், பொது சிவில் சட்டம் ஒரு விவாத பொருளாக மாறப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் குற்றச்சாட்டு
- ரூ.1 1/2 லட்சம் கோடி மதிப்புள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை ரூ.40 ஆயிரம் கோடிக்கு விற்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் வருமானம் ஈட்டி வந்த பல துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் விற்கப்பட்டு விட்டது. ரெயில்வே, எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், பெட்ரோலிய நிறுவனங்களில் தனியாரை நுழைப்பது அதிகரித்துள்ளது.
நல்ல வருமானத்தோடு இயங்கி வரும் ரூ.1 1/2 லட்சம் கோடி மதிப்புள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை ரூ.40 ஆயிரம் கோடிக்கு விற்க மத்திய அரசு தயாராகி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால் விவசாயிகள், சிறு வியாபாரிகள், மாணவர்களுக்கு எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. கடந்த 57 ஆண்டுகளில் நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் ரூ.54 லட்சம் கோடி. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் வாங்கியுள்ள மொத்த கடன் ரூ.128 லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2014-ல் ரூ.62 ஆக இருந்தது. இன்று ரூ.83 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் உலக வங்கியில் இந்தியாவின் தங்கம், அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்துள்ளது. எனவே பா.ஜனதாவின் மக்கள் விரோதபோக்கை புரிந்து பாராளுமன்ற தேர்தலில் புறந்தள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விருதுநகர் தொகுதியை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரெயில் பாதை திட்டம் பல்லாயிரக்கானக்கான மக்கள் வசிக்கும் பகுதிகளும் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய ரெயில் போக்குவரத்து திட்டம் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களை இணைக்கும் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு ரூ.360 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த திட்டத்தை திடீரென்று முடக்கி தென் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்து 9 ஆண்டுகளில் தென் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படவே இல்லை.
ஏற்கனவே இருந்த குறுகிய ரெயில் பாதையை அகலப்படுத்துவதிலேயே காலத்தை ஓட்டியது. ஏற்கனவே காங்கிரஸ் அரசு ஆட்சியில் தொடங்கிய ரெயில் பாதை திட்டங்களை கூட, தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்த திட்டங்களைக் கூட இன்று வரை நிறை வேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. தமிழ்நாட்டை குறிப்பாக விருதுநகர் தொகுதியை பாரதீயஜனதா அரசு திட்டமிட்டு புறக்க ணிப்பதுடன் வஞ்சித்தும் வருகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.
இந்த திட்டத்திற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். பல வகைகளில் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும் வகை யிலான இத்திட்டத்தை முடக்கியத்தின் மூலம் இப்பகுதி மக்களை ஏமாற்றி விட்டது மோடி அரசு. திட்டங்களை நிறை வேற்றாமல் மோடி அரசு விளம்பரங்கள் மூலம் சுய வெளிச்சம் பெறுவதற்கா கவும், அதானிக்காகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட கைவிடப்பட்ட இந்த திட்டம் நிச்சயம் 2024-ம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையில் அமையும் புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்-ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வலையங்குளத்தில் நேற்று மாலை ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடந்தது. மாநாட்டு திடலில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப் பட்டது. அதனை தொடர்ந்து ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கும் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும், நாட்டின் பெயர் மாற்ற முயற்சிக்கும் சட்டத்திருத் தத்தை கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ம.தி.மு.க. எதிர்க்கிறது. இதனை ஜன நாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப் பாட்டில் நூலகங்கள் கொண்டு செல்லப்படும் முயற்சியை தடுக்க வேண்டும். நீட் தேர்வு விலக்குக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரை யில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் நிறைவுறை யாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசி னார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். குறிப்பாக முல்லை பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மேகதாது அணை திட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். இதுவரை தமிழக மக்கள் உரிமைக்காக 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணம் சென்று உள்ளேன். தமிழகத்திற்காக வும், நாட்டிற்காகவும் எனது குடும்பம் தியாகம் செய்துள்ளது.
கட்சியில் ஏதாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் என் மகனுக்கு கிடையாது என்று சொல்ல இருந்தேன். ஆனால் மாநாட்டில் பேசிய அவரே இதை கூறிவிட்டார். கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது துரை வைகோ கட்சி பணியாற்றினார்.
இந்த மாநாட்டின் வெற்றிக்கு காரணமானவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தான். அவர் கட்சியை தென்மண்ட லத்தில் கட்டிக்காத்து வரு கிறார். என்னுடன் 19 மாதங்கள் பொடா சட்டத் தில் சிறையில் இருந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
மாநாட்டில் துரை வைகோ பேசியதாவது:-
சனாதனம் என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது. சனாதனம் குலக்கல்வியை வலியுறுத்து கிறது. அம்பேத்கார், பெரி யார், அண்ணா மற்றும் திராவிட இயக்கங்கள் சனா தனத்தை எதிர்த்தன. அதனை வேரறுக்க வேண்டி யது ஒவ்வொரு தனி மனித னின் கடமையாகும்.
கட்சியில் எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு.க. தொண்டர் என கூறுவது தான் எனக்கு பெருமை.
இவ்வாறு அவர் பேசி னார்.
முன்னதாக பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.
மாநாட்டில் கரு.சுந்தர், தண்டளை ஏ.ரமேஷ், எம்.சரவணன், பெ.முருக பெருமாள், துரை கே.ஜெய ராமன், பா.பச்சமுத்து, எஸ்.சண்முகவேல், எஸ்.ஆர்.பாண்டி, வக்கீல் சோ.பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
- பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி (கிழக்கு) புதிதாக வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளை அறிவித்துள்ளது. நிர்வாகியின் அறிமுக கூட்டம் வட்டார காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.
தியாகராஜன் பி.சி.சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது.
புதுவை மாநிலத்தில் நடைபெற்று வரும் என்.ஆர். காங். மற்றும் பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதென முடிவு செய்யப்பட்டது. முத்தியால்பேட்டையில் உள்ள மக்களின் குறைகளை முன்னெடுத்து போராட்டங்கள் நடத்துவது. முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து காங்கிரஸ் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் சுரேஷ், சதீஷ் குமரன் மணவாளன்,பொருளாளர் சண்முகம்,பொதுச் செயலாளர்கள் குணசேகரன், நாகராஜ் பாண்டியன், முகுந்தன் குமார், செயலாளர்கள் கோவிந்தன், விஜயகுமார், கருணா மூர்த்தி, சக்தி, பாலசுந்தரம், மேரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
- நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
புதுவை சட்டசபையில் சிறப்பு கூட்டத்தில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் மீது புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரில் விகிதாசார அடிப்படையில் 7 டி.எம்.சி., தண்ணீரை புதுவைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் 4,500 ஹெக்டேர் குறுவை சாகுபடிக்கு புதுவைக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அதுபற்றி கவலையில்லை. புதுவை மாநில விவசாயிகள் நலனை காப்பது அரசின் கடமை. விவசாயிகள் நலனுக்காக போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
அணை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு உள்ளது. அப்படி இருந்தும் ஒருதலைபட்சமாக கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது.
மாநிலத்தில் எந்த ஆட்சி நடப்பது என்பது முக்கியமல்ல. மாநில மக்கள் நலன்தான் முக்கியம். ஆனால் புதுவையில் உள்ள பா.ஜனதாவினர் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட டெல்லி செல்கின்றனர். பிரதமர், அமைச்சர்களை பார்க்கின்றனர். பிரதமரை சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கி கொடுப்பதில்லை. நான் பிரதமரின் இணை அமைச்சராக இருந்திருக்கிறேன். பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன்.
ஆனால், முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை இல்லாது போனது தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் தான் நடக்கிறது. காரியம் எதுவும் செய்ய வேண்டாம். முதல்-அமைச்சர்கள் கூறுவதையாவது காது கொடுத்து கேட்க வேண்டும் பாதிநேரம் வெளிநாட்டிலேயே பிரதமர் இருந்தால் நாடு என்ன ஆவது.
இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy #BJP
நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியுற்றது. இது பா.ஜனதாவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க முன்வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்படி செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 5 ஆண்டுகளில் பா.ஜனதா கூறிய தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு இல்லை. தேசத்திற்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்த மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்து உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் மதசார்பற்ற கொள்கையுடைய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்கள் பிரதிகள் இல்லாமல் எப்படி உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட முடியும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதை நியாயப்படுத்தும் வகையில் முதல்வர் பேசி உள்ளார்.
எச்.ராஜா ஜாதி ஆணவத்தால் பேசியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
வருகிற ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இலங்கை பாராளுமன்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை காக்கும் வகையில் உள்ளது. தீர்ப்பை வரவேற்கிறேன்.
நீர்நிலைகளில் அமைக்கப்பட்டு உள்ள வீடுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. முதலில் நீர் நிலைகளில் உள்ள கல்வி நிறுவனங்களை அகற்ற அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்