என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Government"

    • 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
    • இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.

    குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

    முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.

    புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.     

    • திமுகவினரின் ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பழனி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்து கொடுக்க முயன்ற திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார் பழனி திமுக நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி.

    அதிலும், "எந்த கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்" என்ற தொனியில் அவர் பேசியிருப்பது அதிகார மமதையின் வெளிப்பாடு. திமுகவினரின் இந்த ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    மக்களுக்கு பலனளிக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆளும் அரசும் செயல்படுத்த மாட்டார்கள், அவற்றை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்களையும் விட மாட்டார்கள் என்றால் இது என்ன விதமான மனநிலை? ஒருவேளை மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து விட்டால் தங்களின் மடைமாற்று நாடகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறதா? திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?

    ஆனால், திமுகவின் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்குக் கிடைப்பதை

    பாஜக உறுதி செய்யும். அடக்குமுறைகளாலும், அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் எங்களின் மக்கள் பணியைத் திமுகவால் ஒடுக்கிவிட முடியாது!

    மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவர்களையும், நலிவடைந்தோரின் நலன் விரும்பிகளையும் கண்டால் திமுகவிற்கு அப்படியென்ன ஒவ்வாமை என்பது புரியவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.
    • சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் கோரிக்கை

    ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.

    இந்நிலையில், ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் என்று ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " பலங்கா பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவக் குழுவின் 24 மணி நேர முயற்சிக்கு பின்பும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    பிஜு ஜனதா தள தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக், சிறுமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை 7 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    ஒடிசாவில் கடந்த மாதம் கல்லூரியில் ஒரு இளம் பெண் (பேராசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .

    • கல்லூரியில் இளம் பெண் தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள் இது நடந்துள்ளது.
    • தற்போதைய அரசின் கீழ் குற்றவாளிகள் தைரியம் அடைந்துள்ளனர்.

    ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.

    இந்நிலையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம்தலைவருமான நவீன் பட்நாயக் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பட்நாயக் தனது எக்ஸ் பதிவில், "பூரி மாவட்டத்தின் பாலங்கா பகுதியில் ஒரு இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை முயற்சி கொடூரமானது. இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    FM கல்லூரியில் ஒரு இளம் பெண் (ஆசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள்ளாகவும், கோபால்பூரில் நடந்த திகிலூட்டும் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாகவும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் ஒடிசா முழுவதும் தினசரி பதிவாகின்றன. இவை தனிப்பட்ட வன்முறை சம்பவங்கள் அல்ல. இந்த சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து நடப்பது, ஆளும் அரசின் அமைப்புரீதியான தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.

    தற்போதைய அரசின் கீழ் குற்றவாளிகள் தைரியம் அடைந்துள்ளனர், தண்டிக்கப்படுவது குறித்து கவலைப்படுவதில்லை என்பதைக் காட்டுகிறது.

    அரசு செயலற்ற தன்மையால் ஒடிசா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசு செயல்படுமா? ஒடிசாவின் பெண்களும், சிறுமிகளும் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.

    • ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
    • ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசின் கணக்காய்வு மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் (IFMIS) சமீபத்திய ஆய்வில், 50,000 அரசு ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்களின் பெயர் மற்றும் ஊழியர்கள் என்றும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

    இந்த ஊழல் விவகாரமானது, மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவாகும். இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    அமலாக்கத்துறை, (ED) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது.
    • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாாநாடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்'' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.

    இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்டமும் துணை வேந்தர்களுக்குத் தெரிகிறது. ஆனால், எல்லாம் தெரிந்தும் ஆளுநர்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சட்டத்துக்குப் புறம்பாகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார்.

    அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன?

    அண்மையில் கூட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அரசியல் செய்ய ஆசைப்பட்டால், ஆளுநர் ரவி அந்தப் பதவியில் போய் அமர்ந்திருக்கலாமே! எதற்கு ஊட்டிக்குப் போனார்?

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்.

    ஆளுநர்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருப்பதைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குடியரசுத் துணை தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே! என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    "மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது.

    ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது" எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்!

    மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது.

    பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோத்து இணைத்து வைத்தார்.

    பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.

    மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏவில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
    • நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
    • பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி (கிழக்கு) புதிதாக வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளை அறிவித்துள்ளது. நிர்வாகியின் அறிமுக கூட்டம் வட்டார காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தியாகராஜன் பி.சி.சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது.

    புதுவை மாநிலத்தில் நடைபெற்று வரும் என்.ஆர். காங். மற்றும் பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதென முடிவு செய்யப்பட்டது. முத்தியால்பேட்டையில் உள்ள மக்களின் குறைகளை முன்னெடுத்து போராட்டங்கள் நடத்துவது. முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து காங்கிரஸ் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் சுரேஷ், சதீஷ் குமரன் மணவாளன்,பொருளாளர் சண்முகம்,பொதுச் செயலாளர்கள் குணசேகரன், நாகராஜ் பாண்டியன், முகுந்தன் குமார், செயலாளர்கள் கோவிந்தன், விஜயகுமார், கருணா மூர்த்தி, சக்தி, பாலசுந்தரம், மேரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்-ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வலையங்குளத்தில் நேற்று மாலை ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடந்தது. மாநாட்டு திடலில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப் பட்டது. அதனை தொடர்ந்து ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கும் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும், நாட்டின் பெயர் மாற்ற முயற்சிக்கும் சட்டத்திருத் தத்தை கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ம.தி.மு.க. எதிர்க்கிறது. இதனை ஜன நாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.

    மத்திய அரசின் கட்டுப் பாட்டில் நூலகங்கள் கொண்டு செல்லப்படும் முயற்சியை தடுக்க வேண்டும். நீட் தேர்வு விலக்குக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரை யில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாநாட்டில் நிறைவுறை யாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசி னார். அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். குறிப்பாக முல்லை பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மேகதாது அணை திட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். இதுவரை தமிழக மக்கள் உரிமைக்காக 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணம் சென்று உள்ளேன். தமிழகத்திற்காக வும், நாட்டிற்காகவும் எனது குடும்பம் தியாகம் செய்துள்ளது.

    கட்சியில் ஏதாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் என் மகனுக்கு கிடையாது என்று சொல்ல இருந்தேன். ஆனால் மாநாட்டில் பேசிய அவரே இதை கூறிவிட்டார். கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது துரை வைகோ கட்சி பணியாற்றினார்.

    இந்த மாநாட்டின் வெற்றிக்கு காரணமானவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தான். அவர் கட்சியை தென்மண்ட லத்தில் கட்டிக்காத்து வரு கிறார். என்னுடன் 19 மாதங்கள் பொடா சட்டத் தில் சிறையில் இருந்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாநாட்டில் துரை வைகோ பேசியதாவது:-

    சனாதனம் என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது. சனாதனம் குலக்கல்வியை வலியுறுத்து கிறது. அம்பேத்கார், பெரி யார், அண்ணா மற்றும் திராவிட இயக்கங்கள் சனா தனத்தை எதிர்த்தன. அதனை வேரறுக்க வேண்டி யது ஒவ்வொரு தனி மனித னின் கடமையாகும்.

    கட்சியில் எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு.க. தொண்டர் என கூறுவது தான் எனக்கு பெருமை.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    முன்னதாக பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.

    மாநாட்டில் கரு.சுந்தர், தண்டளை ஏ.ரமேஷ், எம்.சரவணன், பெ.முருக பெருமாள், துரை கே.ஜெய ராமன், பா.பச்சமுத்து, எஸ்.சண்முகவேல், எஸ்.ஆர்.பாண்டி, வக்கீல் சோ.பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் தொகுதியை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரெயில் பாதை திட்டம் பல்லாயிரக்கானக்கான மக்கள் வசிக்கும் பகுதிகளும் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய ரெயில் போக்குவரத்து திட்டம் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களை இணைக்கும் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு ரூ.360 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த திட்டத்தை திடீரென்று முடக்கி தென் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்து 9 ஆண்டுகளில் தென் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படவே இல்லை.

    ஏற்கனவே இருந்த குறுகிய ரெயில் பாதையை அகலப்படுத்துவதிலேயே காலத்தை ஓட்டியது. ஏற்கனவே காங்கிரஸ் அரசு ஆட்சியில் தொடங்கிய ரெயில் பாதை திட்டங்களை கூட, தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்த திட்டங்களைக் கூட இன்று வரை நிறை வேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. தமிழ்நாட்டை குறிப்பாக விருதுநகர் தொகுதியை பாரதீயஜனதா அரசு திட்டமிட்டு புறக்க ணிப்பதுடன் வஞ்சித்தும் வருகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    இந்த திட்டத்திற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். பல வகைகளில் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும் வகை யிலான இத்திட்டத்தை முடக்கியத்தின் மூலம் இப்பகுதி மக்களை ஏமாற்றி விட்டது மோடி அரசு. திட்டங்களை நிறை வேற்றாமல் மோடி அரசு விளம்பரங்கள் மூலம் சுய வெளிச்சம் பெறுவதற்கா கவும், அதானிக்காகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட கைவிடப்பட்ட இந்த திட்டம் நிச்சயம் 2024-ம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையில் அமையும் புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் குற்றச்சாட்டு
    • ரூ.1 1/2 லட்சம் கோடி மதிப்புள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை ரூ.40 ஆயிரம் கோடிக்கு விற்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் வருமானம் ஈட்டி வந்த பல துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் விற்கப்பட்டு விட்டது. ரெயில்வே, எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், பெட்ரோலிய நிறுவனங்களில் தனியாரை நுழைப்பது அதிகரித்துள்ளது.

    நல்ல வருமானத்தோடு இயங்கி வரும் ரூ.1 1/2 லட்சம் கோடி மதிப்புள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை ரூ.40 ஆயிரம் கோடிக்கு விற்க மத்திய அரசு தயாராகி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.

    ஆனால் விவசாயிகள், சிறு வியாபாரிகள், மாணவர்களுக்கு எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. கடந்த 57 ஆண்டுகளில் நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் ரூ.54 லட்சம் கோடி. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் வாங்கியுள்ள மொத்த கடன் ரூ.128 லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2014-ல் ரூ.62 ஆக இருந்தது. இன்று ரூ.83 ஆக உயர்ந்துள்ளது.

    இதனால் உலக வங்கியில் இந்தியாவின் தங்கம், அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்துள்ளது. எனவே பா.ஜனதாவின் மக்கள் விரோதபோக்கை புரிந்து பாராளுமன்ற தேர்தலில் புறந்தள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 2022 தேர்தலில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க.
    • கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகி விடும்

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.

    தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.

    இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.

    இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

    இன்று, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இனி கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகி விடும்.

    மசோதா வெற்றிகரமாக சட்டசபையில் நிறைவேறியதை பா.ஜ.க.வினர் சட்டசபைக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.

    சிவில் விஷயங்களில் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டதுதான் பொது சிவில் சட்டம்.

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் ஆனது.

    இதனால், வரும் ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலிலும் நாடு முழுவதும் பா.ஜ.க. அணியினருக்கும், காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் அணியினருக்கும், இரு அணிகளிலும் சேராத கட்சிகளுக்கும், பொது சிவில் சட்டம் ஒரு விவாத பொருளாக மாறப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×