என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS Hospital"

    • அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார்.
    • அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார்.

    மத்திய பிரதேச போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்ட்டில் பெண் ஊழியரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர் லிபிட்டிற்குள் செல்கிறார். அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார். லிப்ட் மற்றொரு தளத்தை அடைந்ததும் கதவு திறந்தபோது அந்த நபர் அப்பெண்ணின் நகையை பறித்துச் சென்றார். 

    அந்தப் பெண் ஊழியர் அவரை துரத்திச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    எய்ம்ஸ் வளாகத்திற்குள்ளேயே இத்தகைய துணிகரமான திருட்டு நடந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.  

    • போஸிடான் டிரோனுக்கு நிகரானது எதுவுமில்லை என்றும் அதை நிறுத்துவது சாத்தியமற்றது என்றும் புதின் மேலும் கூறினார்.
    • கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வெடித்து கதிரியக்க சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதத்துடன் போஸிடான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    நீருக்கடியில் செல்லும் அணு ஆயுதம் தாங்கிய டிரோன்-ஐ ரஷியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

    செவ்வாய்க்கிழமை, அணுசக்தியால் இயங்கும் போஸிடான் டிரோனின் சோதனை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். இந்த டிரோன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டது.

    கிரேக்க புராணங்களின் கடல் கடவுளான போஸிடானின் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் எதிரி ரேடார்களை ஏமாற்றும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    போஸிடான் டிரோனுக்கு நிகரானது எதுவுமில்லை என்றும் அதை நிறுத்துவது சாத்தியமற்றது என்றும் புதின் மேலும் கூறினார்.

    டிரோனில் பொருத்தப்பட்ட அணு ஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை விட சக்தி வாய்ந்தது என்றும் புதின் தெரிவித்தார்.

    கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வெடித்து கதிரியக்க சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதத்துடன் போஸிடான் கட்டமைக்கப்பட்டுள்ளதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    முன்னதாக ரஷியாவின் பியூரெவெஸ்ட்னிக் ஏவுகணை சோதனையை விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏவுகணைகளை சோதிப்பதற்கு பதிலாக உக்ரைனில் ரஷ்யா முதலில் போரை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த டிரோன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக புதின் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

    • 2019-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
    • தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.

    மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.

    இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 2026 இல் நிறைவடையும் என்றும் 2027ம் ஆண்டுக்குள் 2 ஆம் கட்ட பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .
    • ஹலிகாப்டருக்குள் பயணித்த 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல்

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . ஹலிகாப்டருக்குள் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மலைப்பிரதேசங்களில் நோயாளிகளை மீட்பதற்காக சஞ்சீவினி என்ற ஹெலிகாப்டர் சேவையை எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 7 மாதங்களாக பெண் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார்.
    • வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனம் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் சுயநினைவு இழந்தார்.

    உடனடியாக அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் அந்த பெண் 40 நாள் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலைக்கு அவர் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவருக்கு நினைவு திரும்புமா என்பதை உறுதியாக செல்ல இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தகவலையும் தெரிவித்தனர்.

    சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை கலைக்க வேண்டுமானால் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை வளர்க்க கணவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சுய நினைவு இழந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

    கடந்த 7 மாதங்களாக அவர் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். அதே சமயத்தில் வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை பெற்ற அந்த பெண் சுய நினைவு இல்லாமலேயே அறுவை சிகிச்சை இன்றி இயல்பான முறையில் குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    23 வயதாகும் அந்த பெண் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். குழந்தை பெற்ற சமயத்தில் அவரது கண்கள் திறந்தன. ஆனால் அந்த பெண் பேசவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது.
    • கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சீனாவில் பரவி உள்ள பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டது.

    ஒமைக்ரானின் மரபணு மாற்றங்களான 4 வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த கொரோனா தாக்கம் தற்போது மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனாவை மீண்டும் பயமுறுத்திய புதிய கொரோனா பரவல் 10 நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.

    அதே சமயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வைரஸ் தாக்கம் தற்போது சற்று அதிகரித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் உச்சம் தொட்டதை ஆய்வு செய்து உள்ள சர்வதேச நிபுணர்கள் புதிய கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவிலும் கடந்த கால கொரோனா புள்ளி விவரங்களின் அடிப்படையில் தற்போதைய பி.எப்-7 வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதே சமயத்தில் இந்த அதிகரிப்பு புதிய கொரோனா அலையாக மாற வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்பு கொரோனா தாக்கம் வெளிநாடுகளில் அதிகரித்த போதெல்லாம் 30 முதல் 35 நாட்களுக்குள் அதன் பிரதிபலிப்பு இந்தியாவில் எதிரொலித்தபடி இருந்தது.

    இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த மாதம் இந்தியாவில் பி.எப்-7 ரக வைரஸ் சற்று அதிகமாக மக்களிடையே பரவக்கூடும். அதனுடைய அறிகுறிகள் முன்பு போல மிக பயங்கரமாக இருக்காது. சாதாரண ஜலதோஷம் போலத்தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எப்-7 உள்ளிட்ட தற்போது பரவிக் கொண்டிருக்கும் 4 விதமான வைரஸ்கள் ஒமைக்ரான் தொடக்க கால வைரஸ்கள் போல சக்தி வாய்ந்தவை அல்ல. தற்போதைய வைரஸ்கள் அனைத்தும் வீரியம் குறைந்தே பரவி வருகின்றன. எனவே இது புது கொரோனா அலையாக உருவெடுக்காது என்று மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தற்போது கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள சீனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி விட்டது. வெளிநாட்டு பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் விலக்கி இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தாக்கம் வீழ்ச்சி அடைந்து இருப்பதை சர்வதேச அளவில் சீனா உறுதிப்படுத்தி இருக்கிறது.

    சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த 6 ஆயிரம் பேரில் 38 பேருக்கு மட்டும்தான் லேசான கொரோனா தாக்கம் இருந்தது. அந்த 38 பேருக்கும் பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வைரஸ் பரவல் இல்லை என்பதும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

    என்றாலும் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில்தான் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அடுத்த 30 நாட்களில் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் இந்தியாவிற்குள் புதிய கொரோனா பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பால் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. எனவே புதிய அலை வர வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    என்றாலும் நாடு முழுவதும் 20 ஆயிரம் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் டாக்டர்கள், 3 லட்சத்து 20 ஆயிரம் நர்சுகள், 1 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    • எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
    • நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.
    • நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் இன்று காலமானார். நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.

    மதுரை புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது
    • டாக்டர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    சென்னை:

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் நாகராஜன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

    சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் நாகராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன், தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நெறிமுறை குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனின் மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதா வது:-

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக் குழுத் தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார்.

    அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி லோகோவில் தமிழிலும் பெயர் இருக்க வேண்டும்.
    • மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார்.

    மதுரை

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழியில் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

    இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு, நிறுவனக் குழு கூட்டங்களில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரையில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×