search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil name"

    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபா்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    அரசு விதிமுறைகளை பின்பற்றாத வணிகநிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம் 2021-ன்படி கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணி புரியும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் தங்களது பணி நேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

    மேற்படி சட்டதிருத்தத்தை கடைப்பிடிக்காத 12 நிறுவன உரிமையாளர்கள் மீது 1947-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    மேலும் தமிழில் பெயர் பலகை வைக்காத 5 திருமண மண்டப உரிமையாளர்கள் உள்பட 39 கடைகள், நிறுவன உரிமையாளர்கள் மீது 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் விதி 15-ன் படியும் மற்றும் ஒரு உண வக உரிமையாளர் மீது 1950-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு விடுதிகள் விதி 42-ன்படியும் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமா மகேஸ்வரன், செல்வ ராஜ், பாத்திமா, துர்கா, பிச்சைக்கனி மற்றும் சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி லோகோவில் தமிழிலும் பெயர் இருக்க வேண்டும்.
    • மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார்.

    மதுரை

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழியில் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

    இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு, நிறுவனக் குழு கூட்டங்களில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழுக்குரிய பெருமைகளை நிலைநாட்டிட குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்-சுபாஷினி ஆகியோரது திருமண விழா துறையூரில் உள்ள சிவாலயா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு முன்னிலை வகித்தார். விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தற்போது நடப்பது சீர் திருத்த திருமணம் மட்டுமல்ல, சுய மரியாதை திருமணம். தமிழ் திருமணம்.

    மணமகன் ஸ்டாலின் குமார் எனது பெயரை வைத்திருக்கிறார். அதை வைத்திருப்பது பெரிதல்ல. அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.

    ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் இல்லை. காரணப் பெயர். இதை கருணாநிதி, தனது நெஞ்சுக்கு நீதியில் சொல்லி இருக்கிறார்.

    எனது குடும்பத்தில், மு.க.முத்து என்பது தாத்தா முத்துவேலர் பெயர். பட்டுக்கோட்டை அழகிரியை பார்த்து மு.க.அழகிரி பெயர். அதன்பின் செல்வி, தமிழரசு எல்லாம் தமிழ்ப் பெயர்கள்.

    எனக்கு வைக்கவிருந்த பெயர் ஐயாதுரை. ஐயா என்றால் பெரியார், துரை என்றால் அண்ணாதுரை. சென்னையில் நடந்த ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பேசிக் கொண்டிருந்த போது, நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்ட போவதாக மேடையிலேயே கருணாநிதி அறிவித்தார்.

    இந்த பெயரால் எனக்கு பல சிக்கல். சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் என்னையும், செல்வியையும் சேர்க்க முரசொலி மாறன் அழைத்து சென்றார்.

    ஸ்டாலின் என்ற பெயரை மாற்றினால் தான் பள்ளியில் சேர்ப்பேன் என்றனர். ‘பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன், பேரை மாற்றமாட்டேன்’ என்று உறுதியாக கூறிவிட்டார் கருணாநிதி.

    அதனால் நான் மட்டுமல்ல. செல்வியும் அங்கு படிக்க முடியாமல் போனது. அங்கு படிக்காததும் ஒரு வகையில் நல்லதுதான். ஏனென்றால் ஜெயலலிதா அங்கு தான் படித்தார். தமிழுக்குரிய பெருமைகளை தொடர்ந்து நிலைநாட்டிட நம் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரைச் சூட்ட வேண்டும். அப்போது தான் நாம் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.

    தமிழகத்தில் நடப்பது அடிமை, ஊழல் ஆட்சி. பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.


    இன்று மாலை சந்திரபாபு நாயுடு என்னை சந்திக்க வருகிறார். நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி சந்திக்க வருகிறார்.

    பா.ஜ.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர். இது நாம் கருணாநிதி லட்சிய பாதையில் உறுதியாக செல்வதை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, மதிவாணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #DMK #MKStalin
    ×