என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர்"

    • ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பசிபிக் கோஸ்ட் நெடுஞ்சாலை மற்றும் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் தெரு அருகே பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
    • இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

    மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டனர்.

    அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

    • விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர்.
    • வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் கேதர்நாத் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    பிரச்சனை குறித்து அறிந்துக் கொண்ட விமானி சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.

    இதனால், விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். இருப்பினும், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் விரைந்து விமானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    தரையிறக்க முற்பட்டபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில் சாலையில் இருந்த கார் சேதமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த குழு ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது.

    வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .
    • ஹலிகாப்டருக்குள் பயணித்த 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல்

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . ஹலிகாப்டருக்குள் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மலைப்பிரதேசங்களில் நோயாளிகளை மீட்பதற்காக சஞ்சீவினி என்ற ஹெலிகாப்டர் சேவையை எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    • ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    • விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர்.
    • எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என மாணவிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

    கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயணத்தின்போது மத்திய பிரதேசம் உஜ்ஜைனியை சேர்ந்த ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக ஹெலிகாப்டரில் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க ராகுல் காந்தி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர்.

    • கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கலபுரகி நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
    • அங்கு ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவரான பி.எஸ்.எடியூரப்பா கலபுரகி நகருக்கு நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் வருகை தந்தார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அப்பகுதியில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் ஷீட்டுகள், காகிதங்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் பறந்தன. இதனால் அந்தப் பகுதியே தூசு மண்டலம் போன்று காட்சியளித்து, தெளிவற்ற சூழல் காணப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதையறிந்து கொண்ட பைலட் ஹெலிகாப்டரை தரையிறக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின் அதிகாரிகள் அந்தப் பகுதியை தூய்மை செய்தனர். அதுவரை விமானி வானத்தில் பறந்தபடி இருந்துள்ளார். இதன்பின் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் ஆபத்து எதுவும் ஏற்படாமல் எடியூரப்பா உயிர் தப்பினார். இதனால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமான டிட்கோ இதற்கான பரிந்துரையை உருவாக்கி உள்ளது.
    • தமிழகத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் இடையே பயணம் செய்ய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதற்கான வழிமுறையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

    மாநிலம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப் படாமல் இருக்கிறது. அதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமான டிட்கோ இதற்கான பரிந்துரையை உருவாக்கி உள்ளது. தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கையை பயன்படுத்தி ஹெலிகாப்டர் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் வழங்கப்படும். அவசரகால சூழ்நிலையில் இந்த ஹெலிகாப்டர் சேவை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    • சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

    இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்ததால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுயது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

    அவர்களை மீட்பு குழுவினர் விரைந்து சென்று படகு மூலம் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர். இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர், 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.

    அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் உயிர்சேதம் பெருமள வில் இல்லாமல் தடுக்கப்பட்டது.

    • விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
    • நாசா கடந்த ஏப்ரல் மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது.

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆராய்ந்து வருகிறது. இதற்காக விண்கலன்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் இறங்கிய பகுதியில் ஒரு பெரிய மலை இருந்ததே தகவல் தொடர்பு தடையானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன் கூறும்போது இன்ஜினியுடி ஹெலிகாப்டர்தான் நீண்ட நாள் காலமாக தகவல் தொடர்பில் இல்லாமல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.

    • கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த ஏரியில் விழுந்தது.
    • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அலாஸ்கா மாகாண இயற்கை வனத்துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.

    அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த ஏரியில் விழுந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அலாஸ்கா மாகாண இயற்கை வனத்துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. பலியானவர்களில் ஒரு விமானி, 3 அரசு ஊழியர்கள் ஆவார்கள். விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணி நடந்தது.

    • ஹெலிகாப்டர் பழனி மலைக்கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே தாழ்வாக பறந்து சென்றது.
    • பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றிக்காட்டி வருகின்றனர்.

    பழனி மலைக்கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மற்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனிடையே கடந்த 2 நாட்களாக காலை நேரத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தாழ்வாக பறந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நேற்று அதிக ஓசையுடன் ஹெலிகாப்டர் பழனி மலைக்கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே தாழ்வாக பறந்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் ஹெலிகாப்டரை தங்கள் செல்போன் மூலம் படம் பிடித்தனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட பகுதிகளை வட்டமிட்டபடி இன்று 2-ம் நாளாக ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்றது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×