search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர்"

    • ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்தது.
    • ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், 3 மணி நேரத்திற்கான கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடந்தது. வருகிற 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த 2 மாதங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அதிலும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இன்னும் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் டெல்லியில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் கடந்த 2 மாதங்களாகவே வாடகை ஹெலிகாப்டர்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் வாடகை ஹெலிகாப்டர்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்திருந்தனர். குறிப்பாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வசதியாக ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்திருந்தனர்.

    மேலும் இந்த முறை மாநில கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரம் செய்ய ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தினார்கள். இதனால் இந்த பாராளுமன்ற தேர்தலின் போது வாடகை ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரித்தது. இதனால் ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்தது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வருமானம் கிடைத்துஉள்ளது.

    இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது:-

    7 பேர் அமரக்கூடிய ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை ரூ.1.50 லட்சமாக அதிகரித்துள்ளது. 8 பேர் அமரக்கூடிய இரட்டை என்ஜின் ஹெலிகாப்டரின் வாடகை ரூ.3 லட்சம் ஆகும். 15 பேர் வரை அமரக்கூடிய ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேர வாடகை ரூ.4 லட்சம் ஆகும்.

    கடந்த தேர்தலின் போது, வழக்கத்தை விட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக 50 சதவீதம் வரை வசூலித்தனர். ஹெலிகாப்டர்களின் தேவைகள் அதிகரித்துள்ளதால் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 200 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. பாராளுமன்ற தேர்தலின் போது, ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான நீண்ட கால வாடகை ஒப்பந்தங்களை செய்துள்ளன. தேசிய கட்சிகள் ஹெலிகாப்டர்களை முன்கூட்டியே வாடகைக்கு எடுத்து விட்டன. இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 3 மணி நேரம் வாடகை செலுத்த வேண்டும்.

    ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், 3 மணி நேரத்திற்கான கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். எனவே 60 நாட்களுக்கு 180 மணி நேரம் வாடகை செலுத்த வேண்டும். இது போக கூடுதல் நேரம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் கட்டணம் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2 மாதங்களில் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார்தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.

     

    இந்த பயணம் பொதுவாக ஏப்ரல்-மே முதல் அக்டோபர்-நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளதால் சார்தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 10 அன்று தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    இந்நிலையில் இன்று (மே 24) பக்தர்களை கேதார்நாத்துக்கு ஏற்றி வந்த ஹெலிகாப்டர் ஒன்று அந்தரத்தில் நிலைதடுமாறி சுழன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிர்சி ஹெலிபேடில் இருந்து கேதார்நாத் தாமுக்கு விமானியுடன் 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த கெஸ்ட்ரல் ஏவியேஷன் கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 7.05 மணி அளவில் கேதார்நாத் தாம் ஹெலிபேடுக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்ததால் சுமார் 100 மீட்டர் முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் இருந்த 6 பயணிகளும் விமானியும் பத்திரமாக உள்ளனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் சுழலும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹெலிபேடில் நின்றுகொண்டிருந்த நபர்கள் மீது மோதுவதுபோல் ஹெலிகாப்டர் மிகவும் அருகில் வந்ததால் அவர்கள் அங்கிருந்து பயத்தில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. 

     

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியது.
    • அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்பொழுது ஈரானி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவ இடத்தில் இருந்து ஒருவர் மீட்பு படையினருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பிரதமரான ஜோ பைடன் விபத்துக்குள்ளான ஹெலிக்காப்டரை கண்டுப்பிடிப்பதற்கு  அவர்களது சாடிலைட் மேப்பிங் தொழில் நுட்பத்தை வழங்கி உதியுள்ளார்.

    இந்த விபத்தை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கவலை பதிவை பதிவிட்டுள்ளார் அதில் இப்ராஹிம் ரைசி மற்றும் சக அதிகாரகளின் நல்வாழ்வுக்காக பிராத்திக்கிறேன் என்று அவரது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



     


    • நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.
    • தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பதி:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மாநிலம் விட்டு மாநிலங்கள் செல்வதற்காக வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு நாளைக்கு பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்வதால் ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.

    இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஹெலிகாப்டர்களுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஹெலிகாப்டர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இது கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகளவில் வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தென் மாநிலங்களை பொருத்தவரை தெலுங்கானா மாநிலத்தில் தான் அதிக அளவில் பிரசாரத்திற்கு வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    மற்ற தென் மாநிலங்களில் இந்த அளவு ஹெலிகாப்டர்கள் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.

    பிரசாரத்தின் கடைசி நாள் வரை ஹெலிகாப்டர்கள் வாடகைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டதும், பலத்த காற்று காரணமாக தடுமாறியது.
    • விமானியால் ஹெலிகாப்டரை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

    மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று தேர்தல் பிரசாரம் செய்தவற்காக பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். அமித் ஷா செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டதும், பலத்த காற்று காரணமாக ஹெலிகாப்டர் தடுமாறியது. சமநிலை இழந்து அங்கும் இங்குமாக அசைந்தது. விமானியால் ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

    இருந்த போதிலும், விமானி சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை தொடர்ந்து மேல் நோக்கி இயக்க முயன்றார். அவரது முயற்சியால் ஹெலிகாப்டர் கொஞ்சம் தூரம் மேலே சென்ற பிறகு சமநிலை பெற்று, சரியான முறையில் பறந்தது. இதனால் அமித் ஷா விபத்தில் இருந்து தப்பினார். ஹெலிகாப்டர் சமநிலை இழந்த அந்த சில நொடிகள் அப்பகுதியில் பரப்பப்பு ஏற்படுத்தியது.

    • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
    • உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

    இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.

    அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு பிரசாரம் செய்ததை தொடர்ந்து ராமநாதபுரம் பயணம்.
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஐ ஆதரித்து பிரசாரம்.

    ராமநாதபுரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

    தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு பிரசாரம் செய்ததை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலை ராமநாதபுரம் வருகை தந்தார்.

    இந்நிலையில், அண்ணாலை பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

    • கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
    • உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் களத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் தனது நாட்டின் மீது வைத்த பாசத்தை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     


    போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான். கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.

    அந்த வகையில், சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்தார். அப்படியாக வழக்கமான ராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

    பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார். சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.



    • திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.
    • சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுவதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளன.

    தடையை மீறி அடிக்கடி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏழுமலையான் கோவில் மீது பறந்து செல்கின்றன. இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மத்திய விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.

    இதனைக் கண்ட அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    ஹெலிகாப்டர்கள் எங்கிருந்து எங்கு சென்றது என எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
    • மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி னார்.

    மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது.

    ராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10-ந் தேதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்,மே 10-ந் தேதிக்குள் மற்ற இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலத்தீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகாப்டரை இயக்கும் குழுவினர் மாலத்தீவு வந்தடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர்.

    • H125 ரக ஹெலிகாப்டர்-ஐ FAL அசெம்பில் செய்ய இருக்கிறது.
    • வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

    ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை அசெம்பில் செய்யும் மையத்தை கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் ஃபைனல் அசெம்ப்லி லைன் (FAL)-இல் இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் அசெம்பில் செய்யப்பட உள்ளன. அதன்படி ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் H125 ரக ஹெலிகாப்டர் FAL-இல் அசெம்பில் செய்யபட இருக்கிறது.

     


    இந்தியாவில் கட்டமைக்கப்படும் FAL-இல் அசெம்பில் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்குள் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இதுதவிர, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் உடன் இணைந்து FAL-ஐ கட்டமைக்கிறது. இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்றுள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ×