என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர்"

    • கடும் குளிரிலும், பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.
    • H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.

    டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

    முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். மும்பையில் உள்ள லோக் பவனில் மோடியும், மேக்ரானும் இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.

    முன்னதாக, கர்நாடகாவின் வேமகலில், டாடா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் H125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான அசெம்பிளி லைனை மோடியும், மேக்ரானும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்வில் பேசிய மோடி, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்" என்றார்.

    H125 ஹெலிகாப்டர்:

    நேற்று தொடங்கப்பட்ட ஆலையின் அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டர் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரம்பத்தில் ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 500 ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதே இலக்காகும்.

    H125 ஹெலிகாப்டர், ஒரு விமானி மற்றும் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

    இது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 662 கி.மீ பயணிக்க முடியும்.

    இமயமலையின் கடும் குளிரிலும், ராஜஸ்தான் பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.

    மீட்புப் பணிகள், மருத்துவ அவசரநிலைகள், தீயணைப்பு மற்றும் சுற்றுலா எனப் பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படும்.

    H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.

    H125M ரக ஹெலிகாட்பரில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளைப் பொருத்த முடியும்.

    எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காமல் இருக்க, தரையோடு தரையாக மிகத் தாழ்வாகப் பறக்கும் திறன் கொண்டது.

    இந்திய எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தற்போது பிரான்ஸ், பிரேசில், கத்தார், இந்தோனேசியா உட்பட சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத்தில் 400க்கும் மேற்பட்ட H125 ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

    • ஹெலிகாப்ரில் விமானி, ஒரு பயிற்சி விமானி மற்றும் ஒரு தொழில்நுட்ப பொறியாளர் உட்பட நான்கு பேர் இருந்தனர்.
    • சுமார் 40 நிமிடங்கள் அந்த இடத்திலேயே இருந்த பிறகு, ஹெலிகாப்டர் மதியம் 1.10 மணியளவில் பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்டு ஜூஹுவுக்குத் திரும்பியது.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுதொடர்பாக சஃபாலே காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் தத்தா ஷெல்கே கூறுகையில்,

    ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பையின் ஜூஹுவிலிருந்து குஜராத்தின் சூரத்துக்கு பறந்து கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்ரில் விமானி, ஒரு பயிற்சி விமானி மற்றும் ஒரு தொழில்நுட்ப பொறியாளர் உட்பட நான்கு பேர் இருந்தனர்.

    ஹெலிகாப்டர் சஃபாலே மற்றும் கெல்வா சாலை நிலையங்களுக்கு இடையில் பறந்து கொண்டிருந்தபோது, ஹெலிகாப்டரில் 'சிவப்பு அலர்ட்' எச்சரிக்கையை விமானி கவனித்தார். இதையடுத்து திறந்தவெளியில் அவசரமாக தரையிறங்க அவர் முடிவு செய்தார்.

    ஹெலிகாப்டர் நேற்று மதியம் 12.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள வித்யா வைபவ் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் தரையிறங்கியது. விமானப் பொறியாளர் தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்து சரிசெய்தார். சுமார் 40 நிமிடங்கள் அந்த இடத்திலேயே இருந்த பிறகு, ஹெலிகாப்டர் மதியம் 1.10 மணியளவில் பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்டு ஜூஹுவுக்குத் திரும்பியது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு போலீஸ் குழு அந்த நேரம் முழுவதும் அந்த இடத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    • ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது.
    • விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார்.

    கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரனும், சட்டமன்ற உறுப்பினர் ஷரணகவுடா பாட்டீல் பையாபுராவின் மகனின் திருமணம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுரு என்ற இடத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஜர்கிஹோலி தனிதனி ஹெலிகாப்டர்களில் வர முடிவு செய்தனர். சித்தராமையா, டி.கே. சிவக்குமார் வருகைக்காக ராய்ச்சூர் சாலையில் 2 ஹெலிபேடுகள் தனி தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு கலபுரகி சாலையில் உள்ள எம்.எல்.ஏ., மணப்பா வஜ்ஜலின் ஹெலிபேடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்க நெறிமுறைகளின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் செய்யப்பட்டு இருந்தன.

    அப்போது முதல்-அமைச்சர் சித்தராமையா வந்த ஹெலிகாப்டரை அமைச்சர் ஜர்கிஹோலிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பைலட் தவறாக தரையிறக்கினார். அப்போது ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முதல்-அமைச்சர் சித்தராமையாவை வரவேற்க யாரும் இல்லை. ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து தவறை உணர்ந்த விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் முதல்-அமைச்சர் சித்தராமையா திருமணத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து சித்தராமையா இறங்க வேண்டிய ஹெலிபேடில் அமைச்சர் ஜர்கிஹோலியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

    முதல்-அமைச்சர் சித்தராமையாவின் பைலட் குழப்பத்தால் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.

    • மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே.
    • இவர் முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமாக இருந்து வருபவர் பங்கஜா முண்டே. இவர் முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.

    இந்நிலையில், பங்கஜா முண்டே இன்று காலை லத்தூர் செல்வதற்காக புறப்பட்டார். மாவட்ட கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பங்கஜா முண்டே சம்பாஜி நகரில் இருந்து லத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.

    அப்போது அவர் பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.

    கடந்த வாரம் மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரியான அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்துச் சிதறியதில் அவர்  உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இது தவிர கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நீண்ட நெடிய கடற்கரை, தமிழகத்தின் உயரமான நாகை கலங்கரை விளக்கம் ஆகியவையும் நாகையில் உள்ளன.

    இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாகை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் சுற்றுலா தலங்களை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது. அதற்காகவே, அந்த மாநிலங்களுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.

    இதைப்போல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதற்காக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வேளாங்கண்ணியை சுற்றி சுமார் 25 கிலோமீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டர் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பயணிகள் பயணிக்கலாம்.

    ஒரு பயணிக்கு ரூ.6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

    வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், ராணுவத்தினர் பயன்படுத்தும் விதமாக இந்த ஹெலிபேடு அமைக்கப்படுகிறது.

    இந்த ஹெலிகாப்டர் சேவை குறித்து ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது நாகை மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இந்த ஹெலிகாப்டர் சேவை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது.
    • ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.

    அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் குயின் கிரீக் நகரில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.

    தகவல் அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

    • ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பசிபிக் கோஸ்ட் நெடுஞ்சாலை மற்றும் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் தெரு அருகே பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
    • இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

    மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டனர்.

    அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

    • விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர்.
    • வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் கேதர்நாத் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    பிரச்சனை குறித்து அறிந்துக் கொண்ட விமானி சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.

    இதனால், விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். இருப்பினும், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் விரைந்து விமானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    தரையிறக்க முற்பட்டபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில் சாலையில் இருந்த கார் சேதமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த குழு ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது.

    வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .
    • ஹலிகாப்டருக்குள் பயணித்த 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல்

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . ஹலிகாப்டருக்குள் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மலைப்பிரதேசங்களில் நோயாளிகளை மீட்பதற்காக சஞ்சீவினி என்ற ஹெலிகாப்டர் சேவையை எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    • ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    • விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர்.
    • எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என மாணவிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

    கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயணத்தின்போது மத்திய பிரதேசம் உஜ்ஜைனியை சேர்ந்த ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக ஹெலிகாப்டரில் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க ராகுல் காந்தி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர்.

    ×