என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maharashtra"
- 2021ல் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது
- அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி வருகிறார் மனோஜ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி சில வருடங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து மராட்டியர்கள் இட ஒதுக்கீடு பெறும் வகையில் அங்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.
2021 மே மாதம், உச்ச நீதிமன்றம் இச்சட்டத்தை செல்லாது என தீர்ப்பளித்தது.
இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை அவ்வப்போது அங்கு கிளம்பி வந்த நிலையில், மீண்டும் மனோஜ் ஜராங்கே-பாட்டீல் என்பவர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி அக்டோபர் 25 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த மனோஜ் உடன், இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் பேசி இவ்விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மனோஜ், நீர் அருந்தி விரதத்தை நிறைவு செய்தார்.
மராட்டியர்களில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குன்பிஸ் எனப்படும் பிரிவினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால், மனோஜ் இதனை ஏற்க மறுத்து போராடி வருகிறார்.
அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
முழுமையற்ற இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மராட்டியர்களும் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு வேண்டும். இதற்காக ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி அரசு ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இது குறித்து மேலும் ஆலோசிக்க நிபுணர்கள் கூட்டம் ஒன்று நடத்த உள்ளோம். மராட்டியர்கள் அமைதி வழியில் இதற்காக போராடுகின்றனர். இது நிறைவேறும் வரையில் அரசியல் தலைவர்கள் கிராமங்களுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போது பந்த நடத்தும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி நாசிக் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கோட்சே ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், ஹிங்கோலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹேமந்த பாட்டீல் மக்களவை செயலக அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேபினெட் கூட்டத்தை கூட்டினார். இதில் பிற்படுத்தப்பட்டவர்களின் தற்போதைய கல்வி மற்றும் சமுதாய நிலை குறித்த தகவல்களை திரட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்யும் என முடிவானது.
- ஜூலை 2023ல் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறினார்
- சின்னத்தை மட்டுமே நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை என சரத் பவார் கூறினார்
1999 ஜூன் மாதம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் (82) தொடங்கியது, தேசிய காங்கிரஸ் கட்சி (NCP).
கடந்த ஜூலை 2023ல் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் மகராஷ்டிர மாநிலத்தின் ஆளும் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து, அம்மாநில துணை முதல்வரானார்.
இதன் காரணமாக என்.சி.பி. இரண்டாக உடைந்தது. கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் உரிமை கொண்டாடிய அஜித் பவார், இது தொடர்பாக தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் பிற பிரமுகர்களின் ஆதரவு கடிதத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, "கட்சியில் பிளவு ஏதும் இல்லை" என கூறி வந்தார்.
தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்த முடிவையும் தான் ஏற்பதாக அஜித் பவார் கூறி வந்தார்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்க, தேர்தல் ஆணையத்தின் டெல்லி அலுவலகத்திற்கு வர இரு பிரிவு தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
இதையடுத்து, டெல்லி அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவத் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் சரத் பவார், இன்று வருகை தந்தார். "வாக்காளர்கள் கட்சி சின்னத்தை மட்டுமே நம்பி வாக்களிப்பதில்லை" என முன்னரே சரத் பவார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் பவார் தரப்பில் பிரபல வழக்கறிஞர்கள் மகேஷ் ஜெத்மலானி மற்றும் மனிந்தர் சிங் ஆஜராகின்றனர். சரத் பவார் தரப்பில் காங்கிரஸ் முக்கிய தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.
இரண்டு ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
- நண்பர்களுடன் விளையாட சென்றதால், வேலைக்கு தாமதமாக வந்தான்
- நியாயம் கேட்க சென்ற அனைவரையும் சீதாராம் அவமதித்து விரட்டியடித்தார்
மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கன் பகுதியில் உள்ளது பல்கார் நகரம்.
இங்குள்ள கம்லோலி கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திர சீதாராம் பாட்டில். இவர் தனது வீட்டில், வீட்டு வேலைகளை செய்வதற்கு ஒரு 13 வயது சிறுவனை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்த சிறுவனும் அதே கிராமத்தில் வசித்து வந்தான். பல வருடங்களுக்கு முன்பே அச்சிறுவனின் தாயார் இறந்து விட்டார். அவன் தந்தை காசநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்ப வறுமையை குறைக்க அவன் வேலைக்கு சென்றான்.
அவனுக்கு ராஜேந்திர சீதாராம் தனது வீட்டிலேயே தங்கும் வசதியுடன் மாத சம்பளமாக ரூ.1100 அளித்து வந்தார்.
மூன்று தினங்களுக்கு முன் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தை காண சென்ற அந்த சிறுவன் வரும் வழியில் அவனது நண்பர்களை கண்டதும் அவர்களுடன் விளையாட சென்றான். அதனால் ராஜேந்திராவின் வீட்டிற்கு வேலைக்கு வருவதற்கு தாமதமாகி விட்டது.
அவன் தாமதமாக வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர சீதாராம், அவனை சரமாரியாக அடித்தார். அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற அச்சிறுவன் தனது தந்தையிடம் புகாரளித்தான். இதனையடுத்து அவன் தந்தையும், சில கிராமவாசிகளும் சீதாராமிடம் காரணம் கேட்க சென்றனர். ஆனால், அவர்களையும் ராஜேந்திர சீதாராம் தகாத வார்த்தைகளை கூறி விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் காவல்துறையினரிடம் சென்று புகாரளித்தனர்.
விசாரித்த காவல்துறை அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளில் சீதாராம் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவரை இதுவரை கைது செய்யாத காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காயங்களடைந்த அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
- உலக தலைவர்களுக்கு பாதுகாப்பும், உபசரிப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- டெல்லியில் ஒரு குஜராத் மாடல் எனும் செய்தியுடன் இவ்வீடியோ பரவியது
இந்திய தலைநகர் புது டெல்லியில் 19 உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தியா வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும், நகரை தூய்மைப்படுத்தும் பணிகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.
அதில், ஒரு சேரி முழுவதும் பச்சை நிற துணி படுகைகளாலும், ஜி20 எனும் விளம்பரங்களை கொண்ட தாள்களுடனும் போர்த்தப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜி20 தலைவர்களின் வருகைக்காக சேரிகளை (புது டெல்லியில்) அரசு மறைக்கிறது என குறிப்பிட்டு "டெல்லியில் குஜராத் மாடல்" எனும் செய்திப் பதிவும் இதனுடன் வெளியானது. ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில், ஜி20 உறுப்பு நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் பல்வேறு துறையை சேர்ந்த இந்திய அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதில் பல சந்திப்புகள் மும்பை நகரில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில் காணப்படும் இடம் மகாராஷ்டிராவில் உள்ள வடமேற்கு மும்பையின் மேற்கு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள ஜோகேஷ்வரி சேரிப்பகுதியாகும். போரிவலி பகுதியில் உள்ள பூங்காவை காண அந்த விரைவுச்சாலை வழியாக ஜி20 பிரமுகர்கள் டிசம்பர் 2022ல் சென்ற போது சாலையோர சேரிகள் மறைக்கப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது மும்பைக்கு பதிலாக டெல்லி என குறிப்பிடப்பட்டு வைரலாகியது.
"ஏப்ரல் 1 முதல் ஜூலை 27 வரை 49 குடியிருப்புகள் பல்வேறு காரணங்களுக்காக அகற்றப்பட்டதாகவும் ஆனால் ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லி நகரை அழகுபடுத்த எந்த குடியிருப்பு பகுதியிலும் அகற்றல் நடவடிக்கையோ, மறைத்தலோ நடக்கவில்லை" என வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
- அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
எங்களின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இதில் திருப்தி அடைகிறோம். தற்போதைய அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.
வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்.
மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார்.
9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்கிறார்.
- செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்க ப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- 2.450 டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆலங்குளம் தனியார் நிறுவனம் மூலம் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்க ப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி நெல்லை நகராட்சி மண்டல இயக்குனா் அறிவுரையின்படியும், நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா உத்தரவின்படியும் சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி முன்னிலையில் 2.450 டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆலங்குளம் தனியார் நிறுவனம் மூலம் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சத்ரபதி சிவாஜியை ஆளுநர் குறைத்து மதிப்பிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
- வேறு எந்த பெரிய மனிதருடனும் சிவாஜியை ஒப்பிட முடியாது என எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்
மும்பை:
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, சத்ரபதி சிவாஜியை பற்றி பேசியது சர்ச்சையானது. மகாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமான மன்னர் சத்ரபதி சிவாஜி அந்த காலத்து அடையாளச் சின்னம் என்றும், நிதின் கட்காரி நவீன காலத்து அடையாளச் சின்னம் என்றும் கூறினார்.
"நாம் பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் நமக்கு பிடித்த தலைவர் மற்றும் ஹீரோ பற்றி கேட்பார். சிலர் சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காந்தி என்று சொல்வார்கள். ஆனால் இங்கு யாராவது உங்களிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களைக் காணலாம். சிவாஜி பழைய காலத்து அடையாளச் சின்னம், நான் புதிய சகாப்தம் பற்றி பேசுகிறேன். டாக்டர் அம்பேத்கர் முதல் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் அத்தகைய அடையாளச் சின்னத்தை காணலாம்" என்றார் ஆளுநர்.
சத்ரபதி சிவாஜியை பழைய அடையாளச் சின்னம் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்களுக்கு ஒருபோதும் வயது ஆகாது. அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடனும் ஒப்பிட முடியாது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெரியாத ஒருவரை (ஆளுநர்) வேறு எங்காவது அனுப்புங்கள்" என்று வலியுறுத்தினார்.
ஆளுநரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து மத்திய மந்திரி நிதின் கட்கரி, கூட்டணி கட்சியை சமாதானம் செய்யும் வகையில் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறும்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜா எங்களுக்கு கடவுளை போன்றவர். பெற்றோருக்கும் மேலாக நாங்கள் அவருக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம், என்றார்.
- ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தொடங்கிவைத்தார்.
- போட்டிகளுக்கு இடையே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
திசையன்விளை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69- வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்தியஅளவிலான ஆண்கள், பெண்கள் அணியினர் மின்னொளி கபடி போட்டி 11-ம் தேதி தொடங்கியது.
நேற்று இரவு 3-வது நாளாக நடந்த ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.
ஆண்கள் பிரிவில் மராட்டிய அணியும், எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக அணியும் விளையாடியது. இதில் மராட்டிய அணி 28 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எஸ்.ஆர்.எம்.அணி 26 புள்ளிகள் பெற்றது.
மற்றொரு ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் டெல்லி சி.ஆர்.பி.எப். அணியும், குஜராத் இன்கம்டேக்ஸ் அணியும் விளையாடியது. இதில் டெல்லி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. குஜராத் அணி 22 புள்ளிகள் எடுத்தது.போட்டிகள் இன்று அதிகாலை வரை நடந்தது.
பல்வேறு ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவினர் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகளுக்கு இடையே நடனம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ராமச்சந்திரன், வி.எஸ்.ஆர்.சுபாஷ்.நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மகாராஷ்டிராவில் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
- 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது. வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.
20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.